என் மலர்
தேனி
- மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்ன ழுத்த கம்பி வழித்தடத்தை மின்வாரிய ஊழியர்கள் அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.
- குடியிருப்பு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவ தானபட்டி அருகே ஜெய மங்கலம் சத்யாநகர் பகுதி யில் உள்ள மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்ன ழுத்த கம்பி வழித்தடத்தை மின்வாரிய ஊழியர்கள் அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகில் உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் கொண்டு செல்வத ற்காக மின்கம்பங்கள் ஊன்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை பொருத்தும் பணிக்காக வந்தனர். அப்போது குடி யிருப்பு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஜெயமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் மின்வாரிய ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு மின் இணைப்பு இணைப்பதற்காக கொண்டு வந்த மின் உபகரணங்களை திருப்பி எடுத்துச்சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மிகக் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகாமை யில் மின் கம்பங்களை நிறுவி மின்சாரம் கொண்டு செல்லப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதனால் விபத்து களும், உயிரிழப்புகளும் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. வீடுகள் இல்லாத பகுதிகளில் சென்ற உயர் மின் அழுத்த வழித்தடத்தை ஒரு சிலரின் சுயலாபத்தி ற்காக குறுகிய தெருக்களில் உயர் மின்னழுத்த வழித்த டத்தை கொண்டு வருகின்ற னர் என்றனர். இச்சம்பவ த்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது
- மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமகனாக உள்ள திருமணமாகாத ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் (வயது 17½ முதல் 21 வரை) பிறந்திருக்க வேண்டும். 10, +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.
இணையவழி தேர்வு 13.10.2023 அன்று நடைபெறும். இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வரதட்சணையாக 50 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என கூறி கணவர் மனைவியை கொடுமைப்படுத்தி 2-வது திருமணத்திற்கு முயன்றுள்ளார்.
- இதுகுறித்த புகாரின்பேரில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
பெரியகுளம், வடகரை பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 28). இவருக்கும் புல்லக்கா பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவ ருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 20 பவுன் நகை மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது.
கணவர் டிரைவர் வேலைக்கு சென்ற போது மாமனாரான முருகன் என்பவர் திவ்யாவின் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இது குறித்து அவர் கணவர் மற்றும் மாமியாரிடம் கூறிய போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த தீபாவளி சமயத்தில் திவ்யா மற்றும் குழந்தையை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கதிரேசன் வந்து விட்டார். அப்போது மீண்டும் வீட்டுக்கு வரும் போது 50 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என கூறியுள்ளார்.
மேலும் வேறு ஒரு பெண்ணை 2-வது திரு மணம் செய்ய முயன்று ள்ளார். இது குறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டது. போலீசார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தை எச்சரித்து சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர். அதன்படி மீண்டும் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் திவ்யாவிடம் 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி அடித்து கொடுமைபடுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திவ்யா புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வரதட்சணை கொடுமை படுத்திய கணவர் கதிரேசன், மாமனார் முருகன், மாமியார் அம்சராணி மற்றும் சந்துரு, சுமதி ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.
- 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்ப த்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூடலூர் மின்வாரிய உதவிபொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இதேபோல சின்ன மனூர் கோட்டப்பொறி யாளர் அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர், தேனி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒரு ஆண் ஊழியரும் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் பணியில் சேரும்போது கொடுத்த சான்றிதழ்களில் மதிப்பெண் திருத்தப்பட்ட தாக புகார் எழுந்தது. அதன்படி இவர்கள் பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சத்துணவு மையத்தை சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- அனுமதி யின்றி சொகுசு விடுதிகள் கட்ட மட்டும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை ப்பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ் , மணலார், மேல்மணலார், வெண்ணி யார், இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய 7 கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மாணவ-மாணவிகள் ைஹவேவிஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சத்துணவு மையத்ைத சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரி விக்கையில், நூற்றுக்க ணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடப்பற்றாக்குறையால் சிரமம் அடைந்து வருகின்ற னர். இங்குள்ள மாணவர்க ளுக்கு இந்த அரசு பள்ளி மட்டுமே உள்ளது.
மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட குழி தோண்டப்பட்டது. ஆனால் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்த ப்பட்டது. ஹைவே விஸ் பேரூராட்சி யில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலை தோட்ட தொழி லாளர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி புலிகள் காப்பகமாக மாறியதால் கட்டுமான பணிக்கு அனு மதி இல்லை என வனத்துறை யினர் தெரி விக்கின்றனர். அனுமதி யின்றி சொகுசு விடுதிகள் கட்ட மட்டும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.
- மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
- திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் தேனி மாவட்டத்தில் முதல் நிலை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய பேரூராட்சியாக உள்ளது. பேரூராட்சி க்குட்பட்ட பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர்.
இந்நிலையில் பல்வேறு தெருக்கள் மற்றும் குடியி ருப்பு பகுதிகளில் சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தித் தரும்படி பொதுமக்கள் கோரிக்கையை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளிகண்ணன் ராமசாமி மற்றும் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்தனர்.
சாலை வசதிகள் இல்லாத பகுதிகளில் சாலை வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், அனைத்து அடிப்படை வசதிககள் மற்றும் பிற இடங்களில் சாலைகளை சீரமைத்து தருவதாகவும் உறுதியளித்த னர். மேலும் வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து பேரூராட்சி தூய்மை பணி யாளர் வாகனம் வரும்போது வழங்கும்படி பொது மக்களிடம் அறிவுறுத்தினர்.
திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.
- மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ராகவன் தலைமையில் போடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் பூதிப்புரம், மீனாட்சிபுரம் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு விடுதிகள் டீக்க டைகள், பெட்டிக்கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு கைப்பற்ற ப்பட்டது.
சுமார் 1½ கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்ற ப்பட்டது. மேலும் சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இது மட்டுமின்றி பல்வேறு பெட்டிக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் தரமற்ற எண்ணையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்து விற்பனைக்கு தரமற்ற நிலையில் வைக்கப்பட்டி ருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
இதுபோன்ற பொரு ட்களை விற்ற வியாபாரி களிடம் இனியும் இது போன்று தொடர்ந்து நடந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து ரூ.9 ஆயிரத்து 500 வரை அபராதம் வசூலித்தனர்.
- தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- சுமார் 30 வயது மதிக்கத்தக்க போதை வாலிபர் சேத மடைந்த சாலைகளை பார்வையிடாமல் அதிகாரிகள் சென்றுவிடுகிறார்கள் என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலை, மயிலை ஒன்றிய த்திற்குட்பட்ட சிங்கராஜ புரம், வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், மாண வர்களின் கற்றல்திறன், வருகை பதிவேடு பராமரிப்பு குறித்தும் ஆய்வுசெய்தார்.
அங்கு வந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த பொதுமக்கள் கலெக்டரின் வாகனத்தை நிறுத்தி இங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் மாணவர்கள் மற்றும் தொழி லாளர்கள் பாதிக்கப்படு கின்றனர்.
எனவே இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மதுமதி, செய ற்பொறியாளர் ரவிச்சந்தி ரன், ஒன்றிய ஆணை யாளர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், பொறி யாளர்கள் ராமமூர்த்தி, நாகராஜ், பணிமேற்பா ர்வையாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க போதை வாலிபர் சேத மடைந்த சாலைகளை பார்வையிடாமல் அதிகாரி கள் சென்றுவிடுகிறார்கள். அரசு பள்ளி, பால்வாடி ஆகியவற்றை மட்டும் பார்க்காமல் சேதமடைந்த சாலைகளையும் பார்த்து மக்களிடம் அதிகாரிகள் குறைகளை கேட்கவேண்டும் என கூச்சலிட்டார்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
- கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
- இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி சினேகா(21). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. அப்போது இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து தனது தாயிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார். இந்த நிலையில் சினேகா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு அவர் இறந்துகிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டு ள்ளது.
- மஉற்பத்தி செய்யப்படும் செங்கல்களை பல இடங்களில் இருப்பு வைக்க முடியாத நிலையில் பலர் கடனுக்கு செங்கலை விற்றுவிடுகின்றனர்.
- கட்டுமான தொழிலுக்கு செங்கல் மிக முக்கியம் என்ற போதிலும் பொறியாளர்கள், காண்ட்ரா க்டர்கள் லாபம் ஈட்டினாலும் ஆலை உற்பத்தியாளர்க ளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்ைல.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட செங்கல் காள வாசல்கள் உள்ளன. குறி ப்பாக பிச்சம்பட்டி, கன்னி யபிள்ளைபட்டி, கதிர்நர சிங்கபுரம், ராஜகோபா லன்பட்டி, பாலகோம்பை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு செங்கல் காளவாசல்கள் உள்ளன.
காளவாசலுக்கு தேவை யான வண்டல்மண் மற்றும் செம்மண் இப்பகுதியில் கிடைப்பதால் பலர் ஆர்வத்துடன் இந்த தொழிலை தொடங்கினர். ஒரு செங்கல் ரூ.7-க்கு விற்பனையாகி கொண்டி ருந்த நிலையில் தொழில் போட்டியால் தற்போது ரூ.5.50 வரை மட்டுமே விற்பனையாகிறது.
உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. இங்கி ருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செங்கல்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மாத்ததிற்கு சராசரியாக 3 லட்சம் முதல் 12 லட்சம் வரை செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் உற்பத்தி செய்யப்படும் செங்கல்களை பல இடங்களில் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் கடனுக்கு செங்கலை விற்றுவிடுகின்றனர். அந்த தொகையை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கட்டுமான தொழிலுக்கு செங்கல் மிக முக்கியம் என்ற போதிலும் பொறியாளர்கள், காண்ட்ரா க்டர்கள் லாபம் ஈட்டினாலும் ஆலை உற்பத்தியாளர்க ளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்ைல.
இந்ததொழிலை நம்பி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் உற்பத்தி அதிகரித்த போதிலும் வாகன வாடகை, தொழிலாளர்கள் சம்பளம், போக்குவரத்து செலவின ங்கள் அனைத்தும் உயர்ந்து விட்டது. ஆனாலும் காளவாசல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்ைல என இதன் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்
- வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.
- முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தேனி:
தேனி மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.
இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். எனவே முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- இருந்தபோதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் சீராக உயர்ந்தது.
- நீர் மட்டம் இன்று காலை 121.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1321 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் அணையின் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இருந்தபோதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் சீராக உயர்ந்தது. நேற்று 120.80 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 121.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1321 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணை நீர் மட்டம் 49.21 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் இன்று காலை 47 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.92 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.03 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 15, தேக்கடி 8.2, சண்முகா நதி அணை 1.2, உத்தமபாளையம் 0.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






