என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman committed suicide"

    • சிலமாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள ஜம்புளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(31). கூலித்தொழிலாளி. இவ ருக்கும் பாக்கியலட்சுமி(31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு ரோகிதாஸ்ரீ(4) என்ற மகளும், எழில்அமுதன்(1) என்ற மகனும் உள்ளனர்.

    பாக்கியலட்சுமிக்கு கடந்த சிலமாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தன்வீட்டிலேயே தூக்கு போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    சம்பவ இடத்திற்கு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன், ஏட்டு நல்லுச்சாமி ஆகியோர் வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் கூர்க்காவாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சுனிதா (20) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் திண்டுக்கல் நாயக்கர் புதுத் தெரு, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சுனிதாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    • குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி 12வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
    • இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி சினேகா(21). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. அப்போது இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இதுகுறித்து தனது தாயிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார். இந்த நிலையில் சினேகா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு அவர் இறந்துகிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டு ள்ளது.

    • திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த இளம்பெண் திருமணமான 3 வருடத்தில் தற்கொலை செய்துகொண்டார்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார். லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சுன்யா (வயது25) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுகன்யா இன்று காலை தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் மேல்விசாரணை செய்து வருகிறார்.

    • திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார்.
    • திருக்கனூர் சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகள் தட்சண்யா(வயது19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர் சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகள் தட்சண்யா(வயது19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே தட்சண்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு தட்சண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் தட்சண்யா காதலித்து வந்த வாலிபர் வீட்டார் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனையறிந்த தட்சண்யா மனவேதனையடைந்தார். காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்வதை பொறுத்துக்கொள்ள இயலாத தட்சண்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தாயார் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலித்த வாலிபரை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×