என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை
- குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி 12வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






