என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல் காளவாசல் தொழில்"

    • மஉற்பத்தி செய்யப்படும் செங்கல்களை பல இடங்களில் இருப்பு வைக்க முடியாத நிலையில் பலர் கடனுக்கு செங்கலை விற்றுவிடுகின்றனர்.
    • கட்டுமான தொழிலுக்கு செங்கல் மிக முக்கியம் என்ற போதிலும் பொறியாளர்கள், காண்ட்ரா க்டர்கள் லாபம் ஈட்டினாலும் ஆலை உற்பத்தியாளர்க ளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்ைல.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட செங்கல் காள வாசல்கள் உள்ளன. குறி ப்பாக பிச்சம்பட்டி, கன்னி யபிள்ளைபட்டி, கதிர்நர சிங்கபுரம், ராஜகோபா லன்பட்டி, பாலகோம்பை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு செங்கல் காளவாசல்கள் உள்ளன.

    காளவாசலுக்கு தேவை யான வண்டல்மண் மற்றும் செம்மண் இப்பகுதியில் கிடைப்பதால் பலர் ஆர்வத்துடன் இந்த தொழிலை தொடங்கினர். ஒரு செங்கல் ரூ.7-க்கு விற்பனையாகி கொண்டி ருந்த நிலையில் தொழில் போட்டியால் தற்போது ரூ.5.50 வரை மட்டுமே விற்பனையாகிறது.

    உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. இங்கி ருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செங்கல்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மாத்ததிற்கு சராசரியாக 3 லட்சம் முதல் 12 லட்சம் வரை செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஆனால் உற்பத்தி செய்யப்படும் செங்கல்களை பல இடங்களில் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் கடனுக்கு செங்கலை விற்றுவிடுகின்றனர். அந்த தொகையை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கட்டுமான தொழிலுக்கு செங்கல் மிக முக்கியம் என்ற போதிலும் பொறியாளர்கள், காண்ட்ரா க்டர்கள் லாபம் ஈட்டினாலும் ஆலை உற்பத்தியாளர்க ளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்ைல.

    இந்ததொழிலை நம்பி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் உற்பத்தி அதிகரித்த போதிலும் வாகன வாடகை, தொழிலாளர்கள் சம்பளம், போக்குவரத்து செலவின ங்கள் அனைத்தும் உயர்ந்து விட்டது. ஆனாலும் காளவாசல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்ைல என இதன் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்

    ×