என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
போடி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி
- நிகழ்ச்சியில் முதலில் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு.வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன.
- வீடுகளில் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கிடவும், வீட்டிலேயே மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போடி:
போடி நகராட்சி சார்பில் குப்பைகளை அகற்றி தூய்மை நகராக மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் இயக்கத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதலில் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் செல்வராணி, 5வது பகுதி நகர்மன்ற உறுப்பினர் முத்துமணி, துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது நபி, கணேசன், எச் . எம் டிரஸ்ட் மாணவர்கள், நகராட்சியின் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு வினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீடுகளில் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கிடவும், வீட்டிலேயே மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






