என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வனப் பகுதிகளில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதி ராஜன், பிரகாஷ், உதயகுமார், மலைச்சாமி, சாமிகண்ணு, சுந்தர், வனக்காப்பாளர்கள் சதீஷ்குமார், வீரையா, கண்ணபிரான், செல்வம் வனக்காவலர்கள் கோபுரபாண்டி, மாரியப்பன், வாசுகி, சின்னப்பன் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நாச்சியாபுரம் அருகே உள்ள இளங்குடியில் முயல் வேட்டையாட முயன்றதாக கூறி இளங்குடியைச் சேர்ந்த கருப்பையா (வயது 39) என்பவரை கைது செய்தனர்.
அதே போன்று நேமத்தன் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (33), மலைச்சாமி (49) ஆகியோரும் பைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (39), ராஜா (33), தனுஷ் (17) ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் வனச்சரக பகுதிகளில் முயல்களை வேட்டையாட முயன்றதாக வன உயிரின குற்றப் பிரிவின் கீழ், 6 பேர் மீது வனச்சரகர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்தார்.
2 தினங்களுக்கு முன்பு கீழச்சிவல்பட்டி அருகே 17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.
சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் அங்கு தங்கிருந்து ஆய்வு செய்து விட்டு திரும்புவார்கள். சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க வீராங்கனை மேகன் மெக்ஆர்தர், பிரான்ஸ் வீரர் தாமஸ் பெஸ்குவெட் உள்பட 3 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அப்போது விண்கலத்தில் இருந்த கழிவறை உடைந்தது. அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 3 விண்வெளி வீரர்களும் டயப்பர்களை பயன்படுத்தினார்கள். இதனால் சுமார் 20 மணி நேரம் அவர்கள் தவிப்புக்குள்ளானார்கள்.
இது குறித்து பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் கூறும்போது, ‘விண்வெளி பயணம் சவால்கள் நிறைந்தது. இது எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் ஒன்று. எனவே நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை’ என்றார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாய் உள்ளது.
இந்த கண்மாயை நம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 15 வருடங்களுக்கு பிறகு இந்த கண்மாய் நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் நிறைந்து அருவிபோல் மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூவந்தி கண்மாயை தூர்வாராமல் இருப்பதால் தண்ணீர் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது. 2 போகம் விளையக்கூடிய கண்மாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆகவே இந்த கண்ணமாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கண்மாயில் நீர் உள்ளதை பார்த்து விவசாயிகள் பாசன பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கடன்வாங்க விவசாயிகளுக்கு வி.ஏ.ஓ.க்கள் அடங்கல் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். விதைத்த பயிர் வெளியே வந்தால்தான் சான்றிதழ் தரப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூட்டுறவு சொசைட்டியினர் குறித்த காலத்துக்குள் நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடன் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள்.
விவசாயிகள் தரப்பில் இருந்து கூட்டுறவு சொசைட்டியில் கடன் வழங்குவதற்கான காலத்தை நீட்டித்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 15 வருடம் கழித்து பூவந்தி கண்மாய் நிரம்பி உள்ளது சந்தோஷமாக இருக்கிறது.
தற்போதுதான் விவசாயத்தை தொடங்கியுள்ளோம். அதனால் கூட்டுறவு கடன் வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் கண்மாயை முறைப்படி தூர்வார வேண்டும் என்றனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அழகம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). அரசு பஸ் நடத்துனராக உள்ளார்.
இவர் பணிக்கு செல்லும் போதெல்லாம் குடித்துவிட்டு போதையில் செல்வதாகவும், பஸ் பயணிகளிடம் தகராறு செய்வதாகவும் போக்குவரத்து மேலாளருக்கு அடிக்கடி புகார் வந்தது.
இந்நிலையில் நேற்று ஆலங்குளம் பஸ் நிலையத்தில் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், வேலாயுதம் ஆகியோர் டிக்கெட்டுகளை பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது முருகன் பணியாற்றும் பஸ் வந்தது. அதனை நிறுத்தி பயணிகளிடம் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3 பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முருகன் டிக்கெட் வழங்காமல் இருந்ததும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முருகனை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை ‘சஸ்பெண்டு’ செய்து போக்குவத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






