என் மலர்
செய்திகள்

சஸ்பெண்டு
ஆலங்குளம் அருகே மதுபோதையில் பணியாற்றிய அரசு பஸ் கண்டக்டர் ‘சஸ்பெண்டு’
3 பயணிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் தராதது மற்றும் மதுபோதையில் பணியாற்றிய அரசு பஸ் கண்டக்டரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அழகம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). அரசு பஸ் நடத்துனராக உள்ளார்.
இவர் பணிக்கு செல்லும் போதெல்லாம் குடித்துவிட்டு போதையில் செல்வதாகவும், பஸ் பயணிகளிடம் தகராறு செய்வதாகவும் போக்குவரத்து மேலாளருக்கு அடிக்கடி புகார் வந்தது.
இந்நிலையில் நேற்று ஆலங்குளம் பஸ் நிலையத்தில் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், வேலாயுதம் ஆகியோர் டிக்கெட்டுகளை பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது முருகன் பணியாற்றும் பஸ் வந்தது. அதனை நிறுத்தி பயணிகளிடம் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3 பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முருகன் டிக்கெட் வழங்காமல் இருந்ததும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முருகனை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை ‘சஸ்பெண்டு’ செய்து போக்குவத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அழகம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). அரசு பஸ் நடத்துனராக உள்ளார்.
இவர் பணிக்கு செல்லும் போதெல்லாம் குடித்துவிட்டு போதையில் செல்வதாகவும், பஸ் பயணிகளிடம் தகராறு செய்வதாகவும் போக்குவரத்து மேலாளருக்கு அடிக்கடி புகார் வந்தது.
இந்நிலையில் நேற்று ஆலங்குளம் பஸ் நிலையத்தில் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், வேலாயுதம் ஆகியோர் டிக்கெட்டுகளை பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது முருகன் பணியாற்றும் பஸ் வந்தது. அதனை நிறுத்தி பயணிகளிடம் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3 பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முருகன் டிக்கெட் வழங்காமல் இருந்ததும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முருகனை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை ‘சஸ்பெண்டு’ செய்து போக்குவத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






