search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள்
    X
    ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள்

    விண்கலத்தில் கழிவறை உடைந்ததால் 20 மணி நேரம் தவித்த வீரர்கள்

    விண்வெளி பயணம் நிறைய சவால்கள் நிறைந்தது என்றும் இது தாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் விஷயம் என்றும் பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் கூறினார்.
    வாஷிங்டன்:

    சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் அங்கு தங்கிருந்து ஆய்வு செய்து விட்டு திரும்புவார்கள். சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க வீராங்கனை மேகன் மெக்ஆர்தர், பிரான்ஸ் வீரர் தாமஸ் பெஸ்குவெட் உள்பட 3 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அப்போது விண்கலத்தில் இருந்த கழிவறை உடைந்தது. அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 3 விண்வெளி வீரர்களும் டயப்பர்களை பயன்படுத்தினார்கள். இதனால் சுமார் 20 மணி நேரம் அவர்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    இது குறித்து பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் கூறும்போது, ‘விண்வெளி பயணம் சவால்கள் நிறைந்தது. இது எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் ஒன்று. எனவே நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை’ என்றார்.

    Next Story
    ×