என் மலர்
ராணிப்பேட்டை
- ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் ஏ.டி.எம். கார்டை மாற்றினார்
- சித்தூர், கடப்பா போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த ராமதாஸ் நகரை சேர்ந்தவர் விநாயகம். அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணம்- சோளிங்கர் ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறி விநாயகத்தின் ஏ.டி.எம். கார்டை வாங்கி வைத்துக்கொண்டு, போலியான கார்டை அவரி டம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் க்ரிஷ் அசோக் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசா ரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 20) என்பதும், சித்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்.இரண்டாம் ஆண்டு படிப்பதும், ஏ.டி.எம். மையத் தில் பணம் எடுக்க வருபவரிடம் நைசாக பேசி அவர்களின் கார்டுகளை வாங்கிக் கொண்டு போலி கார்டுகளை கொடுத்து பணம் திருடி செல்வதும் தெரியவந்தது.
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ் பெக்டர் விநாயகத்திடமும் ஏமாற்றி பணம்திருடியதும் தெரிய வந்தது. அதைத்தொ டர்ந்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சித்தூர், கடப்பா போலீஸ் நிலையத்தில் இதே போன்று ஏ.டி.எம்.மில் பணம் திருடியதாக 6 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
- வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு
- அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல் அமைச்சரின் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பின் பணிகள் முன்னேற்றம் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையருமான வி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக செயல்ப டுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றங்கள் குறித்தும், இத்திட்டத்தில் பல்வேறு துறைகள் இணைந்து மக்களுக்கான வளர்ச்சி களை மேற்கொள்ள திட்டத்தினை செயல்ப டுத்தவும் கேட்டுக் கொண்டார்.
மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படாமல் உள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டார்.
நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்கவும். புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணி விரைவாக முடிக்கவும், முதல் அமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகளுக்கு கட்டப்பட்டு வரும் சமையற்கூடங்கள் பணிகளையும் விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
மேலும் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைக்க பெறாமல் உள்ளவர்களுக்கு விரைவாக வங்கிக் கடன் அட்டை வழங்கி அவர்க ளுக்கான உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்னாடி வங்கிகளை கேட்டுக் கொண்டார்.
நமக்கு நாமே திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் எஞ்சியுள்ள பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறைகளை கேட்டதிலிருந்து அப்பணி களை விரைவாக முடிக்கவும் உத்தர விட்டார்கள்.
அனைத்து துறை அலுவலர்களும் தமிழ்நாடு அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களில் தனி கவனம் செலுத்தி நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
இதில் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் மூலமாக, தன்னுடைய கவனத்திற்கு தெரிவிக்கவும் கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மின்தடையை கண்டித்து நடந்தது
- தாசில்தார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே நெடும் புலி ஊராட்சி, புதுப்பேட்டை பகுதியில் உள்ள மின்மாற்றி திடீரென்று பழுதடைந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் நேற்று மாலைவரை மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மின்மாற்றியை பழுதுநீக்கி உடனடியாக மின்சேவை வழங்கவேண்டும் என்று மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் அதிகாரிகளோ பழுதை நீக்க 4 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள் பனப்பாக்கம் - அரக்கோணம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நெமிலி தாசில்தார் பால சந்தர், மின்துறை அலுவலர்கள் மற்றும் நெமிலி போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- 30 பாட்டில்கள் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் துரைபெரும்பாக்கம், ஈராளஞ்சேரி பகுதிகளில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது துரைபெரும் பாக்கம் கிராமத்தில் போலீசாரை கண்டவுடன் ஓட முயன்ற வாலிபரை பிடித்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் துரைபெரும்பாக்கம் கிராமம், கிறிஸ்டியன் தெருவை சேர்ந்த மதனகாமராஜ் (29) என்பது தெரியவந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
- அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல் லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, வழிப் பறி மற்றும் கஞ்சா விற்பனை ஆகிய வழக்கு களில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்ததிலிப் (வயது 26) என்பவரை கடந்த 11-ந் தேதி டவுன் போலீசார் கைது செய்தனர்.
அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார். ஜாமீன் பெற்ற மறுநாளே அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற திரவுபதியம்மன் கோவில் திருவி ழாவில் பொதுமக்களிடம் பிரச்சினை செய்த தாக வந்த புகாரின் பேரில் அரகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திலிப்பை சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து குற்றவியல் நடை முறை சட்ட பிரிவின் படி திலிப் நன்ன டைத்தை ஜாமீனை மீறிய குற்றத்திற்காக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் (பொறுப்பு) லதா, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா முன்பு திலிப்பை ஆஜர்படுத்தினார். அப்போது திலிப்பிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திலிப்பை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- கற்களை வீசி தாக்கினர்
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
நெமிலி:
திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் தனியார் பஸ் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்க லத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக் குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சை விட்டு அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. போலீ சார் வருவதற்கு முன்பே மர்ம கும்பல் அங் கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வளர்மதி வழங்கினார்
- தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கடந்த 16-ந் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கியது.
இதில் வேலூர் மாவட்டம், சதுப்பேரி கிராமத்தைச் சார்ந்த தொழிலாளி செந்தமிழ் செல்வன் (31) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து செந்தமிழ் செல்வன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை , மாவட்ட கலெக்டர் வளர்மதி, உயிரிழந்த செந்தமிழ் செல்வனின் மனைவி ஷீலாவிடம் வழங்கினார்.அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பூங்கொடி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
தொழிற்சாலையில் நடந்த இந்த விபத்து பெரும் அபாயகரமானது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடைபெறாத வண்ணம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு இருத்தல் வேண்டும்.
அதன் அடிப்ப டையில் ராணி ப்பேட்டை மாவட்டத்தில் பல மாதங்களாக இயங்காத அனைத்து தொழிற்சா லைகளிலும், தொழிற்சா லையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத பணியை தொடங்குவதற்கு முன் தொழிற்சாலை நிர்வாகத்தினர், மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மாவட்ட கலெக்டர்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், போலீஸ் நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்அறிவிப்பு தெரிவித்த பின் பணியை தொடங்க வேண்டும்.
தொழிற்சாலையில் மேற்கண்ட பணியை மேற்கொள்ள எந்தவொரு அறிவிப்புமின்றி பணி செய்தால் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்
- மெஷினை சரி செய்த போது விபரீதம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐ ய்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் தனக்கு சொந்த மான இடத்தில் பாக்கு மட்டை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு பாக்கு மட்டை தயாரிக்கும் மெஷின் பழுதடைந்துள்ளது. இதனால் பழுதடைந்த மெஷினை சரி செய்வதற் காக நாமக்கல் மாவட்டம் சூளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(40) என்பவரை நேற்று ஐப்பேடு கிராமத்திற்கு அழைத்து வந்தார்.
அப்போது பாக்கு மட்டை தயாரிப்பு மெஷினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் சரிசெய்து கொண்டிருந்தார். மெஷினை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த மின் சாரம் ரமேஷ் குமாரை தாக்கியது.
இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் குமார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெக்கானிக் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய் போலீசில் புகார்
- உதவி கலெக்டர் விசாரணை
ராணிப்பேட்டை:
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி, இவரது மகள் பிரியா (23).
இவரும் லாரி டிரைவரான பாலு என்பவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அம்மூர் அடுத்த ரெட்டியூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.
இந்த தம்பதிக்கு 3 வயதில் தஸ்வின், 1 வயதில் பவினேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை அழும் சத்தம் கேட்டு பாலு எழுந்து பார்த்துள்ளார்.
அப்போது பிரியா மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக பிரியாவை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரியா இறப்பதற்கான காரணம் என்ன? எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியாததால், அவரது தாய் ரமா (48) தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆகி இருப்பதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
- கட்டணமாக மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்
ராணிப்பேட்டை:
புதிய மின்னணு அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலகங்கள், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல் அலுவலகங்கள் மூலமாக பயனாளிகள் பெற்று வருகின்றனர்.
உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டும், நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும், இந்திய தபால் துறையின் மூலம் பயனாளிகளின் இருப்பி டத்திற்கு, பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படுகிறது.
புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டையினை தங்களின் இருப்பிடத்திலலேயே பெற விருப்பம் தெரிவிக்கும் பயனாளி களிடம் அஞ்சல் கட்டணம் வசூலித்து நகல் ரேசன் அட்டைகள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பயனாளி கள் புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டைக்கு விண்ணப்பி க்கும் போது ரேசன் அட்டையினை தபாலில் பெற விரும்புகிறாரா அல்லது நேரில் பெற விரும்புகிறாரா என விருப்பம் தெரிவிக்க www.tnpds.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தின் பேரில் பயனாளிக்கு தபால் மூலம் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
இதற்கான தபால் கட்டணம் புதிய ரேசன் அட்டைக்கு ரூ.25ம், நகல் அட்டைக்கு கட்டணம் ரூ.20, தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும். அஞ்சல் வழியாக பெற விருப்பம் இல்லாத நபர்களுக்கு தற்போதைய நடைமுறைப்படியே குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 210 பயனாளிகள் ரேசன் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது அஞ்சல் வழியாகவே புதிய திருத்தம் செய்யப்பட்ட மின்னணு நகல் அட்டையினை பெற விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்தி இருந்தனர். அவர்களுக்கான புதிய மின்னணு அட்டைகள் வரப்பெற்று தபால் அலுவலகம் வாயிலாக பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பும் நடைமுறையினை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, தபால் துறை விற்பனை மேலாளர் இலியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
- மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் மோகன் கொடுத்த மனுவில்,வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் புவனேஸ்வரி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலின் பூட்டை உடைத்து தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது, அவற்றையும் சேதப்படுத்தியும், திருடிச் சென்று விட்டனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வாலாஜா போலீசார் தீவிர விசாரணை நடத்தியோ, தனிப்படை அமைத்தோ திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்க வில்லை.
எனவே இனி வரும் காலங்களில் கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும். கோவிலைச் சுற்றி உயர்கோபுரங்கள் அமைத்து அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாலாஜா போலீஸ் நிலையத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர பொதுமக்களிடமிருந்து மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நெமிலி:
அரக்கோணத்தை அடுத்த வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 35). பனப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவ ருக்கும் நெமிலி உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
துளசிராமன் தன்னுடைய மாமியார் ஊரான உளியநல்லூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக தன் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் சென்றுகொண்டிருந்தார்.
துறையூர் ஏரிக்கரை அருகே சென்றபோது காட்டுப்பன்றி மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






