என் மலர்
புதுக்கோட்டை
- குழந்திரான்பட்டு அரசு தொடக்க பள்ளி ஆண்டுவிழாவில் வழங்கப்பட்டது
- பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குழந்திரான்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் யோகா, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகங்கள் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் தலைவரும் பெரும் தொழில் அதிபருமான கரிகாலன் தேவர் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களை வழங்கிய கரிகாலன் விழாவில் பேசும்போது, இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை என்றும் துணை நிற்கும். நன்றாக படித்து அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவியர்களுக்கு மேல் படிப்புக்கான செலவுகளை அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் பேசினார். இந்த அறிவிப்பினை கேட்டு பெற்றோர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, வட்டார கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சிவ திருமேனிநாதன், பட்டிமன்ற நடுவரும் பழனி ஆண்டவர் கலை கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் தங்க ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளியின் இருபால்ஆசிரிய திரளாக கலந்து கொண்டனர்.
- இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர்.
- இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை சுற்றுலா தலத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த படகை பார்வையிட்டனர். அப்போது அது இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் என உறுதி செய்யப்பட்டது. அந்த படகின் உள்ளே 2 டீசல் கேன், தண்ணீர் பாட்டில், இலங்கை தின்பண்டங்கள் ஆகியவை இருந்தன.
இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. இவர்கள் கடத்தல் தொழிலுக்காக வந்தனரா? அல்லது இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைபர் படகில் 2 டீசல் கேன் இருந்ததால் மணமேல்குடி கோடியக்கரை வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் இணைந்து சென்னை அல்லது கன்னியாகுமரி செல்ல முடியும். இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் கோடியக்கரை பகுதியை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கோடியக்கரை வழியாக செல்லும் சாலை முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் மீனவ கிராமங்களுக்கு சென்ற போலீசார் மர்ம ஆசாமிகள் வந்தனரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் இலங்கை பைபர் படகு மர்மமான முறையில் நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல்
- உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, செறிவூ ட்டப்பட்ட அரிசியின் மூலம் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அரிசிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் இருந்து சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் முறையில் சமைக்கலாம். இதில் உள்ள இரும்பு சத்து மூலம் இரத்த சோகையினை தடுக்கலாம். போலிக்அமிலம் மூலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி-12 மூலம் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு தமிழக அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் (பொ.வி.தி.) கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்ட பட்டுபுழு வளர்பவர்களுக்கு தளவாடங்கள் வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் நடைபெற்ற இக்கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டது.மேலும், பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டி முடிக்கப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் 7 பட்டு புழு வளர்ப்போருக்கு தலா ரூ.37,500 வீதம் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000மும், இரண்டாம் பரிசாக ரூ.20,000மும், மூன்றாவது பரிசாக ரூ.15,000மும் மொத்தம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பட்டு வளர்ச்சி ஆய்வாளர் வெள்ளையம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
- புதுக்கோட்டை மகிமை நாயகி அம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் முளைபாரி எடுத்து வந்தனர்
- பக்தர்கள் அலகு குத்தி பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை,
வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகிமைநாயகி முத்துமாரிஅம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன்வீதியுலா நடைபெற்றது. தினமும் மண்டகப்படியும் நடைபெறு கிறது. பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம்ஏந்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும், கரும்பு தொட்டில் கட்டி அதில்குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல்வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில்மலர் அலங்காரத்தில்பல்வேறு வீதி வழியாக பவனி வந்தார்.கோவிலில்மூலவர் மகிமைநாயகி முத்துமாரிஅம்மன் வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்திலும் உற்சவர் சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- விராலிமலை அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்றது
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்து–மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 19-ந்தேதி பூச்சொரிதல் விழா நடை–பெற்றது. இதைத்தொ–டர்ந்து கடந்த 26-ந்தேதி பங்குனி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தின–மும் முத்துமாரியம்மன் காலையிலும், மாலையிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்கு–டம் ஊர்வலமும், தீச்சட்டி ஏந்திச்செல்லுதல், அலகு நேர்ச்சை, தொட்டில் கட்டு–தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த தேரை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேங்காய் உடைத்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரி–யம்மன் தேரில் எழுந்தரு–ளினார். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாண–வேடிக்கையுடன் திர–ளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந் தாடி வந்தது.ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங் காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழி–பட்டனர். மாலை 7 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.பின்னர் முத்துமாரியம் மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கு வந்த பக் தர்களுக்கு முன்னாள் அமைச் சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் குடும்பத்தினர் சார்பில் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்தும, அன்னதானமும் வழங்கப்பட்டது. திரு–விழாவை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு–களை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய் திருந்தனர்.
- ஆவின் பால் தட்டுப்பாட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
- கண்ணில் கருப்பு துணிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆவின்பால் தட்டுப்பாட்டைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்ணில் கருப்பு துணிக்கட்டி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பால்தட்டுப்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் தெற்கு மாவட்டச் செயலாளர் மன்மதன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு எதிராகவும், அதனை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் மணிகாந்த், நகரப் பொருளாளர் ஆனநத், புதுக்கோட்டை நகரச் செயலாளர் பரமஜோதி,நகர்மன்ற உறுப்பினர் ரூபினி, மாவட்ட மகளிர் அணி அனிதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீரங்கம் இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் அங்கம்
- தலைவருக்கு சுத்தியல் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கத்தின் புதியஅங்கமாக, புதுக்கோட்டை ஆனந்தம் புதிய சங்க துவக்க விழா நேற்று மாலை புதுக்கோட்டையில் எழில் நகரில் உள்ள தாஜ் மினி ஹாலில் நடைப்பெற்றது. ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கம் தலைவர் கண்ணன் தலைமையில் மாவட்ட ஆளுநர் சேது சுப்பிரமணியன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி, புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார். புதிய தலைவரிடம், கூட்டங்களை நடத்த பாரம்பரிய சுத்தியல் வழங்கப்பட்டது.புதிய சங்கத்தின் பேனரும் வழங்கப்பட்டது.மாவட்ட அவை செயலர் செல்வராஜ், மாவட்ட அவை பொருளாளர காமராஜ், கூடுதல் மாவட்ட அவை செயலாளர் சசிகுமார், கூடுதல் மாவட்ட அவை பொருளாளர் சிபக்குமார், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் டாக்டர் மகேந்திரன், சங்கம் விரிவாக்கம் நெல்சன் ஆரோக்கியம், மண்டல தலைவர்சிவக்குமார், வட்டார தலைவர் டாக்டர் அம்முட்டி பாபா வாழ்த்துரை வழங்குகினார். புதுக்கோட்டை ஆனந்தம் சங்க நிர்வாகிகள் தலைவராக சோலை சுப்பிரமணியன், செய லாளராக இளவரசு சோம சுந்தரம், பொருளாளராக எஸ்.என்.பழனியப்பன், முதல் துணைத் தலைவராக இளஞ்சேரன், இரண்டாம் துணை தலைவராக விஜயலெட்சுமி, துணைச் செயலாளராக ஆண்டோ கலைச்செல்வன், இயக்கு நர்களாக அமுதன், அமல சவரிராஜ், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக சுவாமிநாதன், தலைமை பண்பு பயிற்சி தலைவராக ச.மனோகர், முடுக்குனராக தங்கராஜ், அடுக்குனராக ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலராக சோலைச்சி, உறுப்பினர்களாக பத்பநாபன், அரவிந்த்ராஜா, கீதா, சூரஜ் ஜம்பாஜி ஜாதவ், இளங்கோவன், ருத்ர சங்கர் மாலி, சேகர், செல்வராஜ், பெரியசாமி, பிரேம் ஆனந்த், இராசு.க.கவிவேந்தன், அருள்செல்வம், நல்லதம்பி ஆகியோர்ப தவியேற்றனர். விழாவில் தலைவர் கண்ணன், செயலாளர் சுரேஷ்குமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்வராஜ், மருத்துவர் ராம்பிரகாஷ், லயன்ஸ் மேனா.குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்களை விரட்டி பிடித்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்
- சிசிடிவி கேமிராவால் அடையாளம் காணப்பட்டனர்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளில் ஒருவர், அதிகாலை நேரத்தில் எழுந்து, மின்சார பல்வை ஆன் செய்து விட்டு, வீட்டை திறந்து வெளியில் வந்துள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் எகிறி குதித்து ஓடுவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சத்தம் போட்ட அவர் சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்களை எழுப்பி இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து எகிறி குதித்து ஓடுவதை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை அவர்கள் பார்த்து உள்ளனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டை நோட்டமிடுவதும், அதன் பின்னர் வீட்டின் சுவரை ஏறி குதிப்பதும் அதில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்ப ர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த இரண்டு மர்ம நபர்களையும் தேடி வந்த நிலையில் அந்த இருவரும் அதிகாலையில் சுவர் ஏறி குதித்த அதே உடையில் ஆலங்குடி வடகா டு முக்கம் பகுதியில் அதே இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த போது அவர்களை அடையாளம் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் மற்று ம் அவரது நண்பர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் சேர் ந்து அந்த இருவரையும் விரட்டி சென்றுள்ளனர்.
அப்போது அந்த இரண்டு இளைஞர்களும் பொதுமக்கள் விரட்டி வருவதைப் பார்த்து இருசக்கர வாகனத்தில் வேகமாக புதுக்கோட்டை சாலையில் சென்றுள்ளனர். ஆலங்குடி அடுத்த அம்புலி ஆறு பாலம் அருகே நிலை தடுமாறி விழுந்துள்ளனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடும்போது பொதுமக்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் விரட்டி பிடித்துள்ளனர். அதன் பின்னர் அவர்க ளை ஆலங்குடிகாவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். மேலும் சிசிடிவி கேமிரா பதிவும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இரண்டு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோயமுத்தூர் மாவட்டம் கள்ளுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சிவப்பிரகாசம் (வயது 31) என்பதும் , நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரக்கார் ராமர் மகன் பிரசாந்த் (வயது 24) என்பதும் தெரிய வந்தது.மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் வந்த இருசக்கர வாகனம் ஈரோடு மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால், முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் போலீசாரிடம் எழுந்ததால், அது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, இருவரும் புதுக்கோட்டை கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆலங்கு டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்றது
- முதல் பரிசை தட்டி சென்ற காவல்துறையினர்
கந்தர்வகோட்டை,
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியை புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் தொடங்கி வைத்தார். அரை இறுதி ஆட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முதல் பரிசை தமிழ் நாடு காவல் துறை அணியும் , இரண்டாவது பரிசை கோமாபுரம் அணியினரும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விராலிமலை சந்திரசேகரன், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மா. தமிழ் அய்யா செய்திருந்தார்..
- முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் மழையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ பாஞ்சாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜல்லிக்கட்டில் பல்வேறு புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, பேன் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி டி.எஸ்.பி. தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
- அன்னவாசல் அருகே துணிகரம் திருட்டு
- இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே உள்ள அண்ணாநகர் புங்கி–னிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக் கிளை தாண்றீஸ்வரம் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு அருகில் கடைக்கு சென்றிருந்தார்.அவர் மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதேபோன்று பரம்பூரை சேர்ந்த வைத்திலிங்கம் (52) என்பவர் பரம்பூர் வங்கி அருகே நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.இதுகுறித்து அவர்கள் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அன்னவாசல் சப் -இன்ஸ் பெக்டர் நாகராஜன் உள் ளிட்ட போலீசார் நடத் திய விசாரணையில் இரண்டு மோட்டார் சைக் கிள்களையும் திருடியது பேராவூரணி செங்கமங்களம் பகுதியை காளிதாஸ் (28), மேலூர் சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (19) என்பதும் தெரிய வந்தது/இதனையடுத்து அவர் களை கைது செய்த போலீசார் இரண்டு மோட்டார் சைக் கிள்களையும் பறிமுதல் செய்தனர்.






