என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அன்னவாசல் அருகே மது விற்றவர் கைது செய்யபட்டார்
    • விற்பனைக்காக வைத்திருந்த 72 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை

    அன்னவாசல் அருகே உள்ள மாங்குடியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார் மாங்குடி ரேஷன்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட மாங்குடி விளாப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 72 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.




    • ஊராட்சி செயலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன், துணைத்தலைவர் பாப்பாத்தி காசிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் திருஞானம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • புதுக்கோட்டை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சன்ன ரக நெல்லை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்
    • பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேசும்போது, புதுக்கோ ட்டை மாவட்டத்தில் நெல் 97854 ெஹக்டேர் பரப்பளவிலும், சிறுதானி யங்கள் 1985ெஹக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 4438 ெஹக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 13345 ெஹக்டேர் பரப்பிலும், கரும்பு 2182 ெஹக்டேர் பரப்பளவிலும், பருத்தி 374 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12550 ெஹக்டேர்பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.

    மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 51.291 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 35.188 மெ.டன் பயறு விதைகளும், 4.830 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.786 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.206 மெ.டன் எள் விதைகளும் 0.611 மெ.டன்கள் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.

    விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து உரம் தேவையான அளவு கிடைப்பதோடு மணிச்சத்து அதிகளவில் கிடைப்பதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சிநோய் தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்பு ள்ளதால், விவசாயிகள் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

    2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100ெஹக்டேர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 2716 பயனாளிகளுக்கு 2988 ெஹக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7 கோடியே 24 இலட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள்.

    இந்த ஆண்டு மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி பரப்பினை அதிகப்படுத்திட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்பட உள்ளது.கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 72,000 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், சரக துணைப் பதிவாளர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர் கள், விவசாயிகள் கலந்துகொண்டனர் .








    பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய குழு தலைவரின் கணவரை கைது செய்ய கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பாஜக தெற்கு ஒன்றிய தலைவராக சக்திவேல் உள்ளார். ஒப்பந்ததாரரான இவர் ஒப்பந்த பணிகள் தொடர்பாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் சண்முகநாதனுக்கும், சக்திவேலுக்கும் ஒப்பந்த பணிகள் தொடர்பாக வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒன்றியக்குழு தலைவரின் கணவர் சண்முகநாதன், சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்றியக்குழு தலைவரின் கணவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கி டையில் சம்மந்தப்பட்ட சக்திவேல், சண்முகநாதன் ஆகிய இருவர் மீதும் காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பாஜக தெற்கு ஒன்றிய தலைவராக சக்திவேல் உள்ளார். ஒப்பந்ததாரரான இவர் ஒப்பந்த பணிகள் தொடர்பாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் சண்முகநாதனுக்கும், சக்திவேலுக்கும் ஒப்பந்த பணிகள் தொடர்பாக வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒன்றியக்குழு தலைவரின் கணவர் சண்முகநாதன், சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்றியக்குழு தலைவரின் கணவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கி டையில் சம்மந்தப்பட்ட சக்திவேல், சண்முகநாதன் ஆகிய இருவர் மீதும் காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

    அப்போது அவருக்கு கே.புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் ராஜா (வயது 35) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் சேகரிடம் லண்டன் அல்லது பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக உடனடியாக ரூ.15 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.

    ஆனால் காலம் கடந்த பின்னரும் அவரை லண்டன் நாட்டிற்கு அனுப்பாமல் கிர்கிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளார். இவரை போலவே சீனிவாசன், சுப்பையா மற்றும் சிலரிடம் சுமார் ரூ.92 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு சரியான வேலையை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சந்தோஷ் ராஜாவிற்கு துணையாக கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆதில்வினோ என்பவரது மனைவி நிவேதா (26), கேரளாவை சேர்ந்த ஜோஸ்வா நிதின், மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல் மற்றும் சிலர் உதவியுள்ளனர். சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ்ராஜா, மதுரையை சேர்ந்த ராஜ்கமல், கன்னியாகுமரியை சேர்ந்த நிவேதா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய சலுகைகள் அறிவிக்கப்பட வில்லையெனக்கூறி தமிழகம் முழுவதும் அந்தந்த அரசு பேருந்து பணிமனை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

    அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு மத்திய சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    அப்போது 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான நிலுவை தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் கொரொனா காலத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர் சுப்பிரமணியன், கிளைத் தலைவர் மகேந்திரன், கிளை செயலாளர் காமராஜ், கிளை பொருளாளர் சுந்தரம் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நகை, பணம் திருடுப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் கமலம் நகர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் பூலாங்குறிச்சியில் அரசு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் பணிக்கு சென்றவுடன் இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு குழந்தையின் பள்ளி விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 கிராம் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் ரூ.2000 ரொக்கம் திருடப்பட்டுள்ளதையறிந்து காவல்துறையினர்க்கு தகவல் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குபதிவு எந்திரம் அறை ஆய்வு செய்யப்பட்டது
    • கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறை அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி பேலட் யூனிட் உள்ளிட்டவைகள் பாது காப்பாக வைக்க ப்பட்டு, அறைக்கு பூட்டி சீல் வைக்க ப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு பாது காப்பு வைப்ப றையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.

    • தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைபனம் ஆகிய துறைகளில் இருந்து பொதுமக்கள், நுகர்வோர்களுக்கு மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.

    மேலும் நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி யர்களின் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நன்முறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
    • ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிர்வாகிகள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத்கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்ய மூன்று நாள் முனைப்பு முகாம் நடைபெற்றது.

    மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளும், சார்பு அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகளும் முகாமில் பங்கேற்று பணியாற்றினர். முன்னதாக மாவட்ட தலைவர் விஜயகுமார் விராலிமலை ஒன்றியத்திலும், மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன் அன்னவாசல் ஒன்றியத்திலும் முகாம் பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.

    புல்வயல் ஊராட்சியில் அன்னவாசல் ஒன்றிய அமைப்பாளர் ரவிச்சந்திரன்,நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ரெங்கையா, உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை தலைவர்கள் சாமிநாதன், சோலை ஆகியோரும், விராலிமலை ஒன்றியத்தில் ஒன்றிய தலைவர் சுந்தரம், மாவட்ட பொது  செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், பாராளுமன்ற தொகுதி முழுநேர ஊழியர் சத்தியபாமா மற்றும்  கிளை தலைவர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் அனைத்து பா.ஜ.க .நிர்வாகிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களுக்கு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைபனம் ஆகிய துறைகளில் இருந்து பொதுமக்கள், நுகர்வோர்களுக்கு மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.மேலும் நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி யர்களின் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நன்முறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இணை பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரபிரஷாத், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஷ், திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர் ச்சி புவனேஸ்வரி மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

    ×