என் மலர்tooltip icon

    நீலகிரி

    கோடை சீசனுக்கு ஊட்டி ரோஜா பூங்காவை தயார்படுத்த செடிகளுக்கு 50 டன் இயற்கை உரம் இடப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பூங்காவில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4,201 ரோஜா ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவை கண்டு ரசிக்க நிலா மாடம், காட்சி முனைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அலங்கார செடிகள் அழகாக வெட்டி அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது. கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்கும் வகையில் இயற்கை உரம் இடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக ஊட்டி அருகே சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆட்டு சாணம் 50 டன் கொள்முதல் செய்து கொண்டு வந்து ரோஜா செடிகளுக்கு உரமாக இடப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து ஆட்டு சாணம் மண்ணோடு கலந்து செடிகளுக்கு ஊட்டமளிக்கும் வகையில் பணியாளர்கள் மண்ணை மாற்றி விடுகிறார்கள். இதைத்தொடர்ந்து மாட்டு சாணம், காளான் கழிவுகள் உரமாக போடப் பட உள்ளது. களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது முக்கியமான பகுதிகளில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப் பட்டு உள்ளது. பிற 2 பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் செடிகள் கவாத்து செய்யப்பட்டது. அதில் ரோஜா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.

    இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். நீலகிரியில் நடப்பாண்டில் கோடை சீசனையொட்டி தோட்டக்கலை பூங்காக்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் என 4 நகராட்சிகள் உள்ளன.
    ஊட்டி:
     
    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் என 4 நகராட்சிகள் உள்ளன. இங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

    4 நகராட்சியில் உள்ள  108 வார்டுகளில் தி.மு.க.  66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 16 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 3 இடங்களிலும், சுயேட்சைகள் 9 வார்டுகளிலும், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றியை சுவைத்துள்ளன.

    ஊட்டி நகராட்சியில்  உள்ள 36 வார்டில் தி.மு.க. 20 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. வசம் சென்றது.குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க. 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக குன்னூர் தலைவர் பதவியையும் தி.மு.கவே கைப்பற்றியது.

    கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் வெற்றி பெற்று தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.நெல்லியாளயம் நகராட்சியில்  21 வார்டில் தி.மு.க. 13 இடத்தையும், காங்கிரஸ் 2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 2, விடுதலை சிறுத்தை ஒரு இடத்திலும் வெற்றி பெற்று மீண்டும் தலைவர் பதவியை  தி.மு.க. வசமே வந்துள்ளது.

    இதேபோல் 11 பேரூராட்சிகளும் தி.மு.கவே கைப்பற்றியுள்ளது. 183 இடங்களில் 105 இடத்தை தி.மு.க.வும், 26 இடங்களில் அ.தி.மு.க.வும்,  16 இடத்தை காங்கிரசும், 5 இடங்களில் பா.ஜ.கவும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 3 இடங்களிலும், வி.சி.க. 2 இடத்திலும், சுயேட்சைகள் 24 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    தேவர்சோலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 2 இடத்திலும், முஸ்லிம் லீக் 2 இடங்களிலும் வெற்றி பெற்று தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. ஒவேலியில் 18 வார்டில் தி.மு.க. 11, காங்கிரஸ் 4, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    நடுவட்டம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க 8 வார்டிலும் வெற்றி பெற்றது. கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க 8 இடங்களிலும்,  காங்கிரஸ் 3 இடத்திலும் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது. அதிரட்டியில் உள்ள 18 வார்டில் 10 வார்டை தி.மு.கவும், ஒரு இடத்தை காங்கிரசும் பிடித்துள்ளது.

    உலிக்கல் பேரூராட்சியில் 18 வார்டுகளில் தி.மு.க. 13 இடங்களிலும், வி.சி.க ஒரு இடத்திலும் வெற்றியை ருசித்துள்ளது. கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டில் 14 இடத்தை தி.மு.க பிடித்து தலைவர் பதவியை தன்வசப்படுத்தியுள்ளது. பிக்கட்டியில் 15-ல் தி.மு.க. 8-லும், காங்கிரஸ் 2-லும் வெற்றி பெற்றுள்ளது. கேத்தி பேரூராட்சியில் 18 வார்டில் 8-ல் தி.மு.க.வும், காங்கிரஸ் ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது.

    ஜெகதளா பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 9-லும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றியை ருசித்துள்ளது. சோலூர் பேரூராட்சியில் 15 வார்டில் தி.மு.க. 9 வார்டுகளலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.
    தி.மு.க. தொண்டரை கொன்ற அ.தி.மு.க. வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் பெரும்பான்மையாக தி.மு.க. வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் கணியம்வயலை சேர்ந்த நவுசாத் என்பவரின் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார்.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. பெண் வேட்பாளர் எமிபோல் வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் ஷிம்ஜித் வீட்டின் முன்பு நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க தொண்டரான சமீர் என்பவர், ஷிம்ஜித்தை பார்த்து, தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை ஷிம்ஜித் தனது கணவரிடம் தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நவுசாத், சமீரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர் கத்தியை எடுத்து சமீரை குத்தினார். அப்போது இதனை அங்கிருந்த அஸ்கர் என்பவர் பார்த்து தடுக்க வந்தார். இதில் அவருக்கும் கத்திக்குத்து ஏற்பட்டது.

    நவுசாத் குத்தியதில் சமீர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவுசாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    தேவர்சோலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த அஸ்கரை மீட்டு சுல்தான்பத்தேரி ஆஸ்பத்திரிக்கும், இறந்த சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி நவுசாத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் பதுங்கி இருந்த நவுசாத்தை தேவர்சோலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மனைவியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
    ஊட்டி:
    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. 
    வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    ஊட்டி நகராட்சி 1-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் உமா வெற்றி 
    2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் நாகமணி வெற்றி
    3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர்  வெற்றி 
    4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அனிதா வெற்றி 
    5-வது வார்டு தி.மு.க. வேடபாளர் விசாலாட்சி வெற்றி
    6-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வனிதா வெற்றி

    நெல்லியாளம் நகராட்சி 1-வது வார்டு தி.மு.க. வேட் பாளர் நாகராஜ் வெற்றி 
    2-வது வார்டில் தி.மு.க. வேடபாளர் முரளிதரன் வெற்றி 
    3-வது தி.மு.க. வேட்பாளர் சிவகாமி வெற்றி 
    4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீகலா வெற்றி
    5-வது வார்டில் அ.தி.மு.க. வெற்றி.
    6-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி
    7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சாந்தி வெற்றி. 
    8-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சித்ரா.  
     
    குன்னூர் நகராட்சி 3-வது வார்டு சரவணகுமார் வெற்றி, 7- பா.ஜ.க. வேட்பாளர் பாப்பண்ணன் வெற்றி. 
     
    பிக்கட்டி பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வெற்றி
    2-வது வார்டில் தி.மு.க. வெற்றி  
    3-ம் வார்டில் காங்கிரஸ் வெற்றி 

    கீழ்குந்தா பேரூராட்சி 1-வது வார்டு சுயேச்சை வெற்றி 
    2-வது வார்டு வார்டு சுயேச்சை வேட்பாளர் வெற்றி
    3-வது வார்டு தி.மு.க. வெற்றி 
    4-வது வார்டு தி.மு.க. வெற்றி 
    6-வது வார்டில் பா.ஜ.க. வெற்றி 

    உலிக்கல் பேரூராட்சியில் 6-வது வார்டு விடுதலை சிறுத்தை வேட்பாளர் சுதாகர் மணிமேகலா வெற்றி 

    கோத்தகிரி பேரூராட்சியில் 1-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி, 2-அ.தி.மு.க., 3-பா.ஜ.க., 4-தி.மு.க., 5-தி.மு.க., 6-தி.மு.க., 7-தி.மு.க..
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்படுகிறது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்படுகிறது. ஊட்டி நகராட்சி, குன்னூர் நகராட்சி, நெல்லியாளம், கூடலூர் நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளில் பதிவான வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாது காப்புடன் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு அதிகாரிகள் முன்னி லையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்க கூடிய அறை பூட்டி சீல் வைக்கப் பட்டது. தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 61 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒரு மேஜையில் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், உதவியாளர், மேற்பார்வை யாளர் என 3 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு நுண்பார்வையாளர்கள் தலா 3 பேர் என மொத்தம் 45 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வாக்கு எண்ணும் பணிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் வரும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வாகனங்கள் நிறுத்த மைதானத்தில் அனுமதி இல்லை. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண் ணிக்கை தொடங்குகறிது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.பின்னர் எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வார்டு வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்ப்பாடு பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது.

    ஓவேலி பேரூராட்சி, கூடலூர் நகராட்சிகளுக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் வாக்கு எண்ணப்படுகிறது.ஊட்டி நகராட்சிக்கு ஊட்டி ரெக்ஸ் மேல்நிலை ப்பள்ளியும், குன்னூர் நகராட்சிக்கு புனித அந்தோணியார் பள்ளியிலும், நெல்லியாளம் நகராட்சிக்கு பந்தலூர் பஜார் புனித பிரான்சிஸ் சேவியர் ஆரம்பப்பள்ளியிலும் வாக்கு எண்ணப்படுகிறது.

    நடுவட்டம் பேரூராட்சிக்கு நடுவட்டம் அரசு உயர்நிலை பள்ளியிலும், தேவர்சோலை பேரூராட்சிக்கு தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளயிலும், உலிக்கல் பேரூராட்சிக்கு சேலாஸ் சிறுமலர் ஆரம்ப பள்ளியிலும், ஜெகதளா பேரூராட்சிக்கு அருவங்காடு பேரூராட்சி அலுவலக கட்டிடம், கேத்தி பேரூராட்சிக்கு சாந்தூர் சிஎஸ்ஐ., மேல்நிலை பள்ளி, கோத்தகிரி பேரூராட்சிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம், அதிகரட்டி பேரூராட்சிக்கு அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியிலும், சோலூர் பேரூராட்சிக்கு நாகர்தனை அரசு மேல்நிலை பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் பதிவான வாக்குகள் 9 சுற்றுகளாகவும், குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளில் பதிவான வாக்குகுள் 4 சுற்றுகள், கூடலூர் நகராட்சி 21 வார்டுகளில் 11 சுற்றுகள், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளில் 5 சுற்றுகளா கவும் எண்ணப் படுகிறது.

    அதிகரட்டி பேரூராட்சியில் 17 வார்டுகளில் 6 சுற்றுகள், பிக்கட்டி பேரூராட்சியில் 14 வார்டுகளில் 8 சுற்றுகள், தேவர்சோலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 6 சுற்றுகள், உலிக்கல் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 9 சுற்றுகளாவும் எண்ணப்படுகிறது.

    ஜெகதளா பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகள், கேத்தி பேரூராட்சிகயில் 15 வார்டுகளில் 7 சுற்றுகள், கீழ்குந்தா பேரூராட்சியில் 21 வார்டுகளில் 8 சுற்றுகள், நடுவட்டம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.ஓவேலி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 6 சுற்றுகள், சோலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    சாலைகள் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் சாலையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம்  ஊட் டியில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரம் தமிழகத்தில் மிக உயர்ந்த மலைச் சிகரமாகும். நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த தொட்டபெட்டா மலைச் சிகரத் துக்கு வருகை புரிந்து தொலை நோக்கி மூலம் நகர்ப்பகுதிகளை மட்டுமல்லாமல் இயற்கை காட்சிகளையும் கண்டுகளித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தொட்டபெட்டா செல்லும் சாலை சேதமடைந்தது. இதையடுத்து மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த நவம்பர் மாதம் 30 லட்சம் மதிப்பில் சாலை பணி தொடங்கப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    நவம்பர் மாதம் முதல் நடை பெற்ற சாலை பணிகள் காரணமாக சுற்றுலாப்பயணிகள் தொட்ட பெட்டா மலைச் சிகரத்துக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.தற்போது சாலை பணிகள் முடிந்ததால் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லக் கூடிய சாலையை   விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.றுத்த மைதானத்தில் அனுமதி இல்லை. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மலர் செடிகள், இயற்கை காட்சிகள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
    ஊட்டி:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    விடுமுறையை கொண்டாட ஏராளமான மக்கள் சுற்றுலா தலமான நீலகிரியில் குவிந்தனர். இதனால் நீலகிரியில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்கள் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மலர் செடிகள், இயற்கை காட்சிகள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 7 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அதேபோல் அரசினர் ரோஜா பூங்காவுக்கு 2,000 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 342 பேரும், மரவியல் பூங்காவுக்கு 68 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,000 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 450 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 350 பேரும் வந்திருந்தனர்.

    இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. நேற்று ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 11,000 பேர் வந்திருந்தனர்.

    ரோஜா பூங்காவுக்கு 3,500 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 700 பேரும், மரவியல் பூங்காவுக்கு 200 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,300 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 600 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 550 பேரும் வருகை தந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு 6,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 3,000 பேரும் வருகை தந்திருந்தனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவை 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டி நகரின் பெரும்பாலான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.



    ஊட்டிக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வழக்கமாக அதிகம் பேர் வருகின்றனர்.
    ஊட்டி

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள  சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அதன் பின்னரே வாகனங்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டது. ஊட்டிக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வழக்கமாக அதிகம் பேர் வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருகை தருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த போதும், வார விடுமுறை நாளில் பொழுதை கழிக்கவும், குளு,குளு கால நிலை நிலவும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. 

    குறிப்பாக  வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகை தந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு வாயிலில்  பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து பெரணி  இல்லம், கண்ணாடி மாளிகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பெரணி செடிகள், மலர்கள், கள்ளி செடிகளை பார்வையிட்டனர். மலர்களுடன் கூடிய செல்பி ஸ்பாட் முன்பு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

    பின்னர் பெரிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.நேற்று முன்தினம் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 2859பேர் வருகை தந்தனர். கடந்த 12-ந் தேதி சனிக்கிழமை 6 ஆயிரத்து 944 பேரும், நேற்று 6500க்கும் மேற்பட்டோர் பூங்காவை கண்டு ரசித்தனர். 

    தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தான் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதே போல் ஊட்டி ரோஜா பூங்கா. படகு இல்லம், தேயிலை பூங்கா, சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
    நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் அதிகம் பேர் வாக்களித்தனர்
    ஊட்டி 
    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லி யாளம் உள்ளிட்ட 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் அந்த அறை சீல் வைத்து பூட்டப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சியில் 55.14 சதவீதமும், குன்னூர் நகராட்சியில் 63.15 சதவீதமும் வாக்குகள் பதிவானது. கூடலூர் நகராட்சியில் 62.17 சதவீத வாக்குகளும், நெல்லியாளம் நகராட்சியில் 64.23 சதவீதம் மொத்தம் 59.98 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

    அதிகரட்டி பேரூராட்சி யில் 66.48 சதவீதம்,  பிக்கட்டி பேரூராட்சியில் 67.11 சதவீதம், தேவர்சோலை பேரூராட்சியில் 67.26 சதவீதம்,          உலிக்கல்லில் 67.26 சதவீதமும் பதிவாகி யது.

    ஜெகதளா பேரூராட்சியில் 64.48 சதவீதம், கேத்தி பேரூராட்சியில் 63.43 சதவீதம், கீழ்குந்தா பேரூராட்சியில் 68.63 சதவீதம், கோத்தகிரி பேரூராட்சியில் 62.73 சதவீதம், நடுவட்டம் பேரூராட்சியில் 66.13 சதவீதமும் பதிவாகி இருந்தது.
    ஓவேலி பேரூராட்சியில் 65.89 சதவீதமும், சோலூர் பேரூராட்சியில் 75.14 சதவீதம் என 11 பேரூராட்சிகளிலும் 66.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்து.இந்த வாக்குப்பதிவின் மூலம் நகராட்சி பகுதி மக்களை விட, பேரூராட்சி பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தது தெரியவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தமாக 62.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    ஊட்டி:


    நீலகிரி மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்கா ளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். 

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூ ராட்சிகளில் 183 வார்டுகள் என மொத்தம் 291 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1,253 பேர் களத்தில் உள்ளனர். 
     
    மொத்த  வாக்காளர்கள் 3 லட்சத்து 23 ஆயிரத்து 111 பேர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 380 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 723 பேர். 3&ம் பாலினத்தவர் 8 பேர் உள் ளனர். 

    இவர்கள் வாக்களிக்க வசதியாக 15 உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் இன்று காலை குளிரையும் பொருட் படுத்தாமல் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். 

    சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டது. அந்த பிரச்சினைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. தேர்தலையொட்டி வாக்கா ளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் பூத் சிலிப், வாக்காளர் அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அடை யாள அட்டைகளுடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்காளர்களின் கை விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. 

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 55 வாக்குச்ச £வடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகளாக கண்ட றியப்பட்டது. அந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    மேலும் 350 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதிகளை ஒட்டிய வாக்குச்சாவடிகளில் நக்சல் தடுப்பு பிரிவினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
    கவர்னர் வருகையை முன்னிட்டு ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, உறவினர்கள் தங்க உள்ள தனியார் ஓட்டல்கள் என ஊட்டி முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ஊட்டி:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை எளிமையான முறையில், அமைதியாக நடத்த கவர்னர் திட்டமிட்டார்.

    இதனால் திருமணத்தை நடத்த இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியை தேர்வு செய்தார். அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவன் மாளிகையில் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    இதையொட்டி கவர்னர் ரவி 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் அவர் நீலகிரிக்கு சென்றார்.அவருடன் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்துள்ளனர்.

    இவர்கள் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கி உள்ளனர். வருகிற 24-ந் தேதி வரை கவர்னர் ஊட்டியிலேயே தங்க உள்ளார்.

    திருமணத்தை ஒட்டி ராஜ்பவன் மாளிகை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, பொலிவு படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மாளிகை முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

    கொரோனா காலம் என்பதால் கவர்னரின் மகள் திருமணம் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடக்கிறது. இந்த திருமணத்தில் யார்? யார்? கலந்து கொள்கிறார்கள். எத்தனை பேர் பங்கேற்கிறார்கள்? என்ற எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    இருப்பினும் இந்த திருமண நிகழ்வில் கவர்னர் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிகிறது.

    திருமண நிகழ்வில் பங்கேற்கும் உறவினர்களுக்காக ஊட்டியில் உள்ள 3 தனியார் ஓட்டல்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தில் பங்கேற்பதற்காக கவர்னின் உறவினர்கள் அனைவரும் நாளையே ஊட்டிக்கு வர உள்ளனர். அவர்கள் ஓட்டல்களில் தங்கி இருந்து திருமணத்தில் பங்கேற்கின்றனர்.

    திருமணத்திற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் ராஜ்பவன் மாளிகையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை கவர்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, உறவினர்கள் தங்க உள்ள தனியார் ஓட்டல்கள் என ஊட்டி முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கவர்னர் ரவி, தனது மகளின் திருமண நிகழ்ச்சியை முடித்து கொண்டு, 24-ந் தேதி ஊட்டியில் இருந்து மீண்டும் சென்னை திரும்புகிறார்.



    ×