என் மலர்tooltip icon

    நீலகிரி

    பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-ஊட்டி செல்லும் பிரதான சாலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தினமும் சிறப்பு பூைஜகள் நடைபெற்றது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.

    பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது.
    • கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

    ஊட்டி:

    குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களை தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேயிலை விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியை குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தேயிலை கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை. இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடா்ந்து, தமிழக அரசு தேயிலை தோட்டக் கழக (டேன் டீ) வளாகத்தில் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினருடன் நடைபெற்ற மனித சங்கலி விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா்.

    இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்து குமாா், மலைப் பகுதி சிறப்பு திட்ட அதிகாரி ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது.
    • 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    கூடலூர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வெப்பத்தை தணிக்கும் வகையில் மாலை நேரத்தில் அடிக்கடி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், கூடலூர் நகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர்.

    இந்தநிலையில் கூடலூரில் இருந்து மலப்புரத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடு காணி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் தமிழ்நாடு-கேரளா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த தொழிலை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை போதுமான அளவு பெய்தது. மேலும் வெயில், மழை என இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

    இதனால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் தற்போது கொழுந்துகள் அதிகம் வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக மகசூல் அதிகரித்து உள்ளது. பச்சை தேயிலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.18-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை போதுமானதாக இல்லா விட்டாலும், மகசூல் அதிகரித்து உள்ளதால் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்தநிலையில் பச்சை தேயிலையை பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்வதற்கு, கையால் இயக்கும் எந்திரம், மோட்டார் மூலம் அறுவடை செய்யும் எந்திரம் மற்றும் அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக்கூடிய அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 300 கிலோ வரை தேயிலையை அறுவடை செய்கின்றனர்.

    இதேபோல் சிறு தேயிலை விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்தரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிக்க ரூ.6 கூலியாக பெற்று வருகின்றனர்.

    தற்போது தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் அதனை பறித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, தேயிலை தொழிற்சாலைகளுக்கும் ஓரளவு கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை மொத்தம் 7090 பேர் எழுதினர்.
    • தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது.

    ஊட்டி,

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை 3502 மாணவர்கள், 3588 மாணவிகள் என மொத்தம் 7090 பேர் எழுதினர்.

    இந்த நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு இணையத ளத்தில் வெளியிடப்பட்டது.

    மாணவர்கள் பாட வாரியாக எடுத்த மதிப்பெண் விவரம் மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

    மேலும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் ஒட்டப்பட்டது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவில் நீலகிரி மாவட்டத்தில் 2,916 மாணவர்கள், 3,336 மாணவிகள் என மொத்தம் 6,297 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.82 சதவீதம் ஆகும்.

    இதில் 84.55 சதவீதம் மாணவர்களும், 92.98 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.

    தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.5 ஆக இருந்த நிலையில், மாநிலத்தில் 19-வது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், வருகிற 26-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், சில பள்ளி களில் பிளஸ்-1 சேர்க்கை நடந்து வருவதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    • ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அரவேணு:

    உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது.

    தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று 2-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் வனப்பகுதிக்கு நடுவே வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.

    • ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் தங்குகின்றனர்.

    ஊட்டி,

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு ஊட்டியை கண்டறிந்தார். இதையடுத்து தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு ஊட்டியை உருவாக்கி வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஊட்டி நகரம் மற்றும் ஏரி உருவாக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தார்.

    கோத்தகிரி கன்னேரி முக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்த வும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. கோடை சீசனையொட்டி இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பா டுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே தொடங்கிய ரோஜா கண்காட்சியை ஒட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் அலைமோதியது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். ஒரு சிலர் சாலையோரம் மற்றும் பஸ் நிலையத்தில் தங்கினர்.

    இந்த நிலையில் ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 முன்னிட்டு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஊட்டி வெண்லாக் சாலையில் சிறப்பு சுற்றுலா மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சிறப்பு தகவல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வருகிற 31-ந் தேதி வரை செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் காலியறைகள் குறித்த விவரம், புதிதாக அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் விவரம், வாகனங்கள் திருப்பி விடப்படும் வழித்தட விபர ங்கள் உள்பட பல்வேறு விவரங்களை நேரிலும் 0423-2443977 மற்றும் 8122643533 என்ற எண்ணி லும் தொடர்பு கொண்டு பெறலாம் என்றனர்.

    • திரைப்படவிழாவில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி பங்கேற்றனர்
    • சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி 200-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியான திரைப்பட விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிபெண்ட் விசுபெரர்சு" குறும்ப டத்தினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மற்றும் ஊட்டியின் 200-வது ஆண்டினை போற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஊட்டி 200 விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் பேரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சுற்றுலா பயணிகளை வருகையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதலாவதாக கடந்த 6-ந் தேதி அன்று காய்கறி கண்காட்சி தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து புகைப்படக்கண்காட்சி, படகு போட்டி, பழக்காட்சி என ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கூடலூரில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேவாலா பண்ணை யினை ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்தவும், படகு இல்லத்தில் சாகச பூங்கா மற்றும் பைக்காராவில் மிதவை படகு அமைக்கவும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறியதா வது:-

    கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சலீவன் அவரால் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்த 200-வது விழாவினை கொண்டாடும் வகையில், இன்றைய தினம் இந்த திரைப்பட விழாவானது நடைபெறுகிறது. தமிழ கத்திற்கு என உள்ள பல்வேறு மொழி, இன, கலாச்சாரங்களில், நீலகிரி மாவட்ட மக்கள் ஒரு பெரும் பங்கினை, தொன்மைகளை பெற்றிருக்கிறார்கள். அவற்றினை நாட்டிற்கு பறைசாற்றுகின்ற வகையில் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையொட்டி சென்ற நிதியாண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதேபோன்று திரைப்படம் என்பது மொழி, இனம், சமூகம், சாதி ஒழிப்பு, பெண் உரிமை. மத நல்லிணக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திரைப்படங்கள் எல்லாம் ஊட்டி நகரில் எடுக்கப்பட்டது என்பது இந்த நகரத்திற்கு தனி சிறப்பு ஆகும். எனவே ஊடியில் எடுக்கப்பட்ட மூடுபனி, முள்ளும் மலரும், ஊட்டி வரை உறவு, புதையல் போன்ற பல்வேறு திரைப்படங்களையும் பார்த்து 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சமூக சம்பவம் சமூக நிலை மற்றும் ஊட்டியின் பங்கு என்ன என்பதனை தெரிந்து கொள்ளவும், ஊட்டியில் பெருமையை தெரிந்து கொள்ளவும் திரைப்படம் உதவும், எனவே மொழியால், இனத்தால், இருக்கின்ற இடம் ஊட்டியினால், நாம் பெருமையடைகிறோம் என்கின்ற உணர்வை, இந்த திரைப்பட விழாவானது நமக்கு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்.பி. ஆகியோர் "வாக்கத்தான்" குறும்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் சுரேஷ், பிரவீன் மற்றும் குழுவினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து, "பிளாஸ்டிக் தடை குறும்படம்", சுற்றுலா பயணிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதது குறித்த மாவட்ட கலெக்டர் உரையாற்றிய விழிப்புணர்வு குறும்படம், "திஎலிபெண்ட் விசுபெரர்சு" போன்ற குறும்படங்களை பார்வை யிட்டனர்.

    விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், உதவி வன பாதுகாவலர் தேவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புச்சாமி, ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி, முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், வட்டாட்சியர்கள் ராஜசேகர் (ஊட்டி), காயத்ரி (கோத்த கிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் அசெம்பிளி திரையரங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது.
    • 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்.

    குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், பொழுதை போக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்காட்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.

    கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்கா வில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 10 மலர் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் அலங்கார வளைவுகள் வழியாக சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

    மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், கிரைசாந்திமம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    இதேபோல் நடைபாதை ஒரங்கள், மலர் பாத்திகளிலும் 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலத்தில் தேசிய பறவையான மயில் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் இந்த மயில் உருவம் கவர்ந்திழுத்தது. சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

    இதுதவிர தமிழ்நாட்டின் மாநில சின்னங்களான வரையாடு, மரகதப்புறா, பனைமரம் போன்ற சிற்பங்களும் பல ஆயிரம் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல வண்ண மலர் கோபுரங்களும் உருவாக்கப்பட்டு இருந்தது.

    தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், 175-வது ஆண்டு தாவரவியல் பூங்கா, 125வது மலர் கண்காட்சி என மலர்களால் உருவான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.

    சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர். ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம், மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம் என பலவகையான அலங்காரங்கள் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

    இதுதவிர அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனை வரும் கண்காட்சியில் இடம் பெற்ற மலர்களால் உருவான சிற்பங்களை கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டதால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஊட்டி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது
    • மலர் செடி கொடிகளை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

    ஊட்டி

    கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் நாள்தோறும் அண்டைய மாநிலமான கேரளா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.

    கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சில நாட்களாக மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று மதியத்துக்கு மேல் ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சூடு தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இரவில் கூட வெப்பம் தணிந்து முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது

    சுற்றுலா பயணிகள் இதனை அனுபவித்து வருகின்றனர் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடியே ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றி வருகின்றனர். பசுமையான புல்வெளிகளும் மருத்துவம் நிறைந்த மலர் செடி கொடிகளையும் குளிர்ச்சியான காற்றுடன் சேர்ந்து ஒரு குடைகளைப் பிடித்த படியே பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

    • கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

    ஊட்டி

    கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய கோடை விழா வாசனை திரவிய கண்காட்சி புதன்கிழமை நிறைவடைந்தது.

    நிறைவு விழாவுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை வகித்தாா்.

    கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயலட்சுமி, கூடலூா் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் கூடலூர் நகர செயலிளர் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    நிறைவு விழாவில், கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசும், தோட்டக்கலைத் துறைக்கு இரண்டாம் பரிசும், கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் பொதுமக்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

    • குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலவி வருவது வாடிக்கை.

    இந்நிலையில், வனத்தைவிட்டு வெளியேறிய காட்டெருமை குன்னூா் பேருந்து நிலையத்துக்குள் புதன்கிழமை காலை நுழைந்தது. வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ்களில் ஏறி அமா்ந்து கொண்டனா்.

    சிறிது நேரம் உலவிய காட்டெருமை பிறகு தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

    குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ×