என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் பிராந்தியங்கரை மூலக்கரை வடமழைமணக்காடு கத்திரிப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். ஆடு திருடர்களை பிடிக்க வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோடியக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த துரைமுருகன் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் பம்பு பிட்டராக வேலை பார்ப்பவர் உலகநாதன் (40). இவர் அந்த ஊராட்சியில் அண்டர்காடு கிழக்கு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவரது நண்பர் பாலசுப்பிரமணியன் என்பவர் ஆதனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரும் பம்பு பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (32) என்பவர் கடந்த மாதம் உலகநாதனிடம் தகராறு செய்துவிட்டு வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் 4.12.21 இரவு ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
மீண்டும் 5ம் தேதி உலகநாதனை தரக்குறைவாக பேசி கத்தியை காட்டி மிரட்டி வீட்டின் மீது கல்வீசி தாக்கியுள்ளார்.
இதில் உலகநாதன் வீட்டின் ஜன்னல் கதவுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து உலகநாதன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
பொறையாறு அருகே திருக்கடையூர் திருமெய்ஞானம் வடக்கு தெருவைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவருடைய நாய் அதே தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரை கடித்து விட்டதாக கூறி இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மணிகண்டன் (வயது 21), காமராஜ், சதீஷ், தினேஷ், சசிகுமார் ஆகியோர் சேர்ந்து நம்பிராஜன், அவருடைய மனைவி கவிதா, சகோதரர் கணேசன் உள்ளிட்டவர்களை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த நம்பிராஜன் குடும்பத்தார் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொறையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் வழக்குப்பதிவு செய்து. மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டனர். மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி சேர்ந்த ரெங்கநாதன், கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறை சேர்ந்த ஹலித் என்பது தெரியவந்தது.
இவர்கள் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வங்க கடலோரம் அமைந்துள்ள எழில்மிகு நகரமாக நாகை திகழ்கிறது. நாகை நகரத்தையொட்டி சிக்கல், நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக நாகை நகர பகுதிக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
நாகை காடம்பாடி பகுதியில் புதிய கடற்கரை அமைந்து உள்ளது. பொழுதுபோக்கு தலமாக விளங்கும் புதிய கடற்கரைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வருகிறார்கள். நடைபயிற்சி ேமற்கொள்வதற்கும் பலர் வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய கடற்கரை கடந்த சில மாதங்களாக பொலிவிழந்து காணப்படுகிறது. கன மழையால் கடற்கரையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனயே இங்கு வர வேண்டி உள்ளது.
பொதுவாக மாலை நேரங்களில் நாகை புதிய கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கடற்கரை உரிய பராமரிப்பின்றி இருப்பதால் மக்கள் வருவது குறைந்து விட்டது. மின் விளக்குகள் ஒளிராததால், சமூக விரோதிகளின் கூடாரமாக நாகை புதிய கடற்கரை மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளை இங்கு அழைத்து வருவதற்கு அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பொலிவிழந்து காணப்படும் புதிய கடற்கரையில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மக்கள் அச்சமின்றி வந்து செல்லும் வகையில் கடற்கரையை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






