என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தொழிலாளியை தாக்கியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் பம்பு பிட்டராக வேலை பார்ப்பவர் உலகநாதன் (40). இவர் அந்த ஊராட்சியில் அண்டர்காடு கிழக்கு கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இவரது நண்பர் பாலசுப்பிரமணியன் என்பவர் ஆதனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரும் பம்பு பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (32) என்பவர் கடந்த மாதம் உலகநாதனிடம் தகராறு செய்துவிட்டு வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் 4.12.21 இரவு ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

    மீண்டும் 5ம் தேதி உலகநாதனை தரக்குறைவாக பேசி கத்தியை காட்டி மிரட்டி வீட்டின் மீது கல்வீசி தாக்கியுள்ளார்.

    இதில் உலகநாதன் வீட்டின் ஜன்னல் கதவுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து உலகநாதன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.
    Next Story
    ×