என் மலர்
நாகப்பட்டினம்
நாகை நகராட்சியில் முதல் முறையாக நம்பியார் நகர் சுயேட்சை வேட்பாளரான மீனவர் சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகப்பட்டினம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் 16வது வார்டு நம்பியார்நகர் பகுதியில் மீனவர் சுரேஷ் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுரேசுக்கு நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீதேவி வழங்கினார்.
இதனையடுத்து நம்பியார்நகர் கிராம மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை நகராட்சியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாகையில் நடைபெற்ற இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவன தலைவர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜோதிமணி அம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
முதலில் கல்லூரி வளாகத்தில் உள்ள தாளாளர் மறைந்த செவலியர் டாக்டர் ஜி.எஸ் பிள்ளை சிலைக்கு மலர்தூவி மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
மேலும் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். அனைவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கோவில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.
விழாவில் கல்லூரி செயலர் டாக்டர் செவலியர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், கோவிந்தசாமி, சங்கர் கணேஷ், கல்லூரி இயக்குநர் சுமதி பரமேஸ்வரன், கமலா ஸ்ரீ கோவிந்தசாமி, ராஜீபிரதீப் (எ) வினோத், சுப்ரமணியன் விஜய் மணிகண்டன், நிலா, செல்வி.சுப்ரஜா மற்றும் முதன்மை செயல் அலுவலர் முனைவர் சந்திரசேகர், இயக்குநர் விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னத்துரை,
முனைவர் செல்வசந்திரா கல்லூரி முதல்வர் முனைவர் ராமபாலன் மற்றும் துணை முதல்வர் முனைவர் மோகன் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பணியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பரத், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாகை அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாப ராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்தார்.
காலையில் பார்த்தபோது அதனை காணவில்லையாம். 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது அருகில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.
இதுபற்றி அவர் கீழையூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல இன்று அதிகாலை 3 மணி அளவில் பரவை காய்கறி சந்தைக்கு சென்ற தெற்கு பொய்கை நல்லூர் ஷரிப்முகமது என்பவரை கத்தி முனையில் 3 இளைஞர்கள் மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர்.
நாகை வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று இருசக்கர வாகனம், ஆடுகள் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
9 மாத குழந்தையாக இருந்த போது சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு நடந்த திருமணத்தில் பங்கேற்று அவரை தத்தெடுத்து வளர்த்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தினார்.
நாகப்பட்டினம்:
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இவர்களில் நாகையை சேர்ந்த 9 மாத குழந்தையான சவுமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகியோர் தங்களது பெற்றோர்களை இழந்தனர். அவர்களை தேடிப்பார்த்த போதிலும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் அப்போது நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். பின்னர் அங்கிருந்து அவர் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும் அடிக்கடி நாகைக்கு வந்து சவுமியா, மீனாவுடன் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் குழந்தைகள் 2 பேரும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றே அழைத்து வந்தனர்.
சவுமியா மற்றும் மீனா ஆகியோருக்கு 18 வயதான பிறகு அவர்களை நாகை புதிய கடற்கரை சாலையை சேர்ந்த மணிவண்ணன், மலர்விழி தம்பதி தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் சவுமியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன்படி மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இவரது திருமணம் நாகையில் நேற்று நடந்தது. இந்த திருமண விழாவில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை நான் மட்டும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. இந்த நாகை மாவட்ட மக்களே வளர்த்துள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து சவுமியாவுக்கு நடத்தி வைத்த திருமணம் இது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும், மலர்விழி, மணிவண்ணனையும் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இவர்களில் நாகையை சேர்ந்த 9 மாத குழந்தையான சவுமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகியோர் தங்களது பெற்றோர்களை இழந்தனர். அவர்களை தேடிப்பார்த்த போதிலும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் அப்போது நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். பின்னர் அங்கிருந்து அவர் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும் அடிக்கடி நாகைக்கு வந்து சவுமியா, மீனாவுடன் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் குழந்தைகள் 2 பேரும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றே அழைத்து வந்தனர்.
சவுமியா மற்றும் மீனா ஆகியோருக்கு 18 வயதான பிறகு அவர்களை நாகை புதிய கடற்கரை சாலையை சேர்ந்த மணிவண்ணன், மலர்விழி தம்பதி தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் சவுமியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன்படி மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இவரது திருமணம் நாகையில் நேற்று நடந்தது. இந்த திருமண விழாவில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை நான் மட்டும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. இந்த நாகை மாவட்ட மக்களே வளர்த்துள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து சவுமியாவுக்கு நடத்தி வைத்த திருமணம் இது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும், மலர்விழி, மணிவண்ணனையும் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர்.
வேதாரண்யத்தில் அரசு விதை பண்ணை வயலில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் சிவரஞ்சனி பொறியியல் பட்டதாரி. இவரது கணவர் சரவணகுமார். சித்த மருத்துவர். கணவர் துணையோடு பிரியதர்ஷினி இந்தியாவில் உள்ள 1250 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகளை சேகரித்து வருகிறார்.
இந்த ஆண்டு தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். சிவரஞ்சனி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
சிவரஞ்சனி சேகரித்து வைத்துள்ள 1250 நெல் ரகங்களை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நெல்லின் தன்மை அதன் ரகம் சேமித்த விதம் கேட்டறிந்து நெல் வயலை பார்வையிட்டார். பெண் பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனியோடு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் 2 மணி நேரம் பார்வையிட்டு அவர் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இந்திய அரசின் உதவிகளை செய்வதாக சிவரஞ்சனிக்கு கலெக்டர் கூறியதோடு பாரம்பரிய நெல்லை மீட்டெடுத்ததை பாராட்டினார். நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், துணை இயக்குனர் வெங்கடேசன், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் நவீன்குமார், வேளாண்மை அலுவலர்கள் ஜெயபிரகாஷ், ஆறுமுகம், சிவானந்தம், மோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வாக்காளர் மெக்கானிக் கையெழுத்தை போலியாக போட்டு முன்மொழி கடிதம் கொடுத்ததாக கூறி நாகை நகராட்சி 33&வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சி 33-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட ரவி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வழங்கிய ஆவணங்களில் முன்மொழி கடிதத்தில் அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் கார்த்திக் என்பவரின் கையெழுத்திட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நாகை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவியின் மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், முன் மொழி கடிதம் கொடுத்த மெக்கானிக் கார்த்திக்கை தொடர்புகொண்டு பேசியபோது அவர் தான் யாருக்கும் எந்த கடிதமும் கொடுக்கவில்லை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் என்றே தெரியாது, என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மெக்கானிக் உடையோடு அலுவலகத்துக்கு வந்த கார்த்திக் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்காளருக்கே தெரியாமல், அவருடைய முகவரி, கையெழுத்துடன் முன்மொழி கடிதம் கொடுத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவியின் வேட்புமனுவை தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
கடந்த 31ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 21 பேரையும் அவர்களது இரு விசைப்படகுகளும் இலங்கை மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர்.
இதற்கு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்களைப் பிடித்து செல்வதும் இலங்கை தமிழ் மீனவர்கள் இருவர் உயிரிழப்பிற்கு அவர்களே காரணம் என்றும் கூறி இலங்கையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவங்களால் இந்திய இலங்கை இருநாட்டு மீனவர்களுக்கு இடையே கடற்பரப்பில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து கடலில் சுமூகமாக இருநாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம், இந்திய கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்லுங்கள் என தமிழக அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து, நாகை மீனவர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதற்கிடையே எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்தால், விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட விசைப்படகு, 1 மாதம் கடலுக்குள் செல்ல அனுமதிப்பது இல்லை என்று நாகை மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்பினை துறைமுகம் மற்றும் அப்பகுதி கடலோர மீனவ கிராமங்களில் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து நாகை அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லாறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி அடைக்கப்பட்ட திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், பின்னர், கோவிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
பின்னாளில், இந்தக் கோவிலுக்கு வந்த சமயக் குரவர்களான
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் தேவாரத்
தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் இதில் அப்பர் சுவாமிகள் பாடலில் கதவைத் திறக்கவும், சம்பந்தர் பாடலில் கதவை
மீண்டும் திருக்காப்பு செய்ததாகவும் ஐதீகம்.
இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா
நடைபெற்று வரும் நிலையில் மூடிப்பட்டிருந்த வெள்ளிக்கவச
திருக்கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களாக உருவகப்படுத்தப்பட்ட ஓதுவா மூர்த்திகளான ஆசான் முத்துக்குமாரசுவாமி, பரஞ்ஜோதி தேசிகர் கொண்ட குழுவினர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர்.
அப்போது 10 திருப்பதிக பாடல்களுக்கு பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கதவு திறக்கப்பட்டடு மணவாள சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி குடும்பத்தினர், ஸ்தலத்தார் கயிலை மணி வேதரத்னம், நகராட்சி பொறியாளர் மோகன் உட்பட ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நாகை தேவூர் தேவ துர்க்கையம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் தை வெள்ளியையொட்டி 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனையோடு குத்துவிளக்கு ஏற்றி, 108 வேத மந்திரங்கள் முழங்க குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருக்குவளை அருகே தெற்குபனையூரில் நூலகம் திறப்பு விழா நடந்தது.
நாகப்பட்டினம்:
நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் முக்கிய இடங்களில் நூலகத்தினை தொடங்க உத்தரவிட்டதின் அடிப்படையில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி மேற்பார்வையில், முதற்கட்டமாக திருக்குவளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குபனையூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நூலகத்தினை திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை நெறிமுறைபடுத்தும் வகையிலும், இல்லத்தரசிகளின் பொழுதினை இனிமையாக்கும் வகையிலும், சிறுவா¢களின் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும், முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் புராண கதைகளும், போட்டித் தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் வாழ்க்கை முறை, கோட்பாடுகள் மற்றும் பொதுஅறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்களும் உள்ளன. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார்.
போட்டியில் போலீஸ் துறையின் எவரெஸ்ட் அணிக்கும், நாகை பீச் அணிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கூறுகையில்,போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்த வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது என்றார்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், விஜய் லூர்துபிரவீன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராஜ் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழாவில் திருக்கதவு திறக்க, அடைக்க பாடும் வரலாறு திருவிழா இன்று மாலை நடக்கிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது.
வேதங்கள் பூஜைசெய்து மூடி கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புமிக்க கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த ஆண்டு மாசி மக பெருவிழா 29&1&2022 தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாவான மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி பிறந்த வரலாறு நிகழ்ச்சி இன்று 4-2-2022 மாலை நடைபெறுகிறது.
இந்த விழாவில் அப்பரும் சம்பந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவில் வெளிப் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி மரத்தடியில் நிறுத்தப்பட்டு மூடிக்கிடந்த கதவைத் திறக்கும் வரலாற்று திருவிழாவை யொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கதவை கபாட பூஜைகள் செய்து தேவார ஓதுவார்கள் தேவார பதிகங்களை பாட கதவு திறக்கப்படும்.
அப்போது சன்னதியில் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சி அளிக்கும்.
இந்த கண்கொள்ளாக்காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்க கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் அரசின் வழிகாட்டுதல் படி நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.






