என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர்.
- மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லீகள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- 60 மீட்டர் வயரை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றனர்.
- போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி ராகிமான பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது40). விவசாயியான இவரது தோட்டத்தில் மின் மோட்டாருக்கு பொருத்தக் கூடிய 60 மீட்டர் வயரை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றனர்.
அப்போது அங்கு வந்த முருகன் அந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், பாம்புகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து (24), குருப–ரப்பள்ளியைச் சேர்ந்த ராஜ்குமார் (22) ஆகிய 2 பேர் மின்வயரை திருடியது தெரியவந்தது.
உடனே போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
- மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து ஜெயநாத்தின் லேப்-டாப்பை திருடி சென்றார்.
- பெருமாள் என்பவர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயநாத் (வயது28). ஏ.சி. மெக்கானிக்கான இவரது வீட்டில் லேப்-டாப்பை வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் கதவு திறந்து இருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து ஜெயநாத்தின் லேப்-டாப்பை திருடி சென்றார். அப்போது அங்கு வந்த ஜெயநாத், மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நோதாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (23) என்பவர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
- ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது.
- ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருரப்பள்ளி அருகே மேலுமலை தனியார் நர்சிங் கல்லூரி எதிரில், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது. அப்போது முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென வலது பக்கத்தில் திரும்பி யதால் கட்டுப்பாட்டை இழந்த கார், கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் பின்னால் வந்த லாரியும் காரில் மோதியது.
இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையை சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டனர்.
அதேபகுதியில் விபத்து நடந்த, அடுத்த சில நிமிடத்தில் ஓசூர் - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 3 லாரி, 6 கார்கள் அடுத்த டுத்து ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் காயம டைந்தனர்.
விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார், இடிபாடுகளில் சிக்கிய வர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்து, வாகனங்களை அப்புறப்படுத்தினர்.தேசிய நெடுஞ்சாலையில் அடுத்த டுத்து வாகனங்கள் மோதிய விபத்தால் சுமார், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து சீரான நிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட்டிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
- கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றித–ழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூ ரியில், தமிழாய்வுத்துறை சார்பில், 115-வது அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கல்லூரி–யின் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர், மாணவர்களிடம் அறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய தாரக மந்திரத்தை சுட்டிக்காட்டியும், அண்ணா வின் கல்வி சிறப்பு கள் மற்றும் பேச்சாற்றல் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். முன்ன தாக, தமிழ் ஆய்வுத் துறைத் தலைவர் லட்சுமி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக, ஊத்தங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ் ஆய்வுத்துறைத் தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்று அண்ணாவின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, மாணவர்க–ளுக்கு அண்ணாவின் வாழ்க்கை வரலாறு குறும்ப–டமாக காண்பிக்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி, மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்–பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றித–ழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
முடிவில், தமிழ் ஆய்வுத் துறை உதவி பேராசிரியர் அரவிந்த் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை, தமிழ் ஆய்வுத் துறையின் அனைத்து பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் ஆன விநாயகர்சி லையை பயன்படுத்த வேண்டும்.
- பதாகைகளை ஏந்தி மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாசில்லா பசுமை வழி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் தலைமை ஏற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தியின் போது அரசின் நெறிமு றைகளை கடைபிடிக்க வேண்டும். களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் ஆன விநாயகர்சி லையை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பையை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும். உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் மகேந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் மகேந்திரன், ஓசூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.
- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஓசூரில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர்,
காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஓசூரில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இ.எஸ்.ஐ. சர்க்கிள் அருகே போராட்டம் நடத்திய அவர்கள், கர்நாடக எல்லை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். மேலும் நல்லா கவுண்டர், கணேஷ் ரெட்டி உள்பட பலர் பேசினர். இதில் 100க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழக விவசாயிகள் திடீரென்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் திணறினர். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால், தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் ரூ.93.77 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
- 55 ஆசிரியர்க ளுக்கு தலா ரூ.895 மதிப்பி லான பிளாஸ்க்குகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னல்வாடி செயின்ட் அகஸ்டின் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இந்த விழாவில் ஐ.வி.டி.பி. நிறுவனரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும், அவர்களை நன்னெறிப் படுத்தவும் அயராது உழைக்கும் பள்ளி ஆசிரி யர்களை பாராட்டும் வகையில், இப்பள்ளியில் பணியாற்றும் 60 ஆசிரியர்களுக்கு தலா ரூ.895 மதிப்பிலான பிளாஸ்க் குகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 700 மதிப்பிலான பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகை யில், ஆசிரியப் பெருமக்கள் மேன்மேலும் தங்கள் பணியில் சிறப்புற்று விளங்கி மாணர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தங்கள் பணியை செம்மையாக செய்ய வேண்டும் என்றார்.
இதே போல், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆசிரியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான ஸ்டோரேஜ் பாக்ஸ், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகளை 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள், கிருஷ்ணகிரி ஆர்.சி.பாத்திமா ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 55 ஆசிரியர்க ளுக்கு தலா ரூ.895 மதிப்பி லான பிளாஸ்க்குகள் என மொத்தம் ரூ.3.72 லட்சம் மதிப்பிலான பரிசு மற்றும் தங்க நாணயங்களை வழங்கி வாழ்த்தினார். இதுவரை ஆசிரியர்களை பாராட்டி ஊக்கப்பரிசாக ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் ரூ.93.77 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- வாகன சோதனை செய்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்.
- வழக்கில் கைப்பற்றப்பட்டு 325 வாகனங்கள் உள்ளன.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் டி.ஜி.பி. கே.வன்னிய பெருமாள் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் சென்னை சாலை பாரிஸ் நகரில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மாநில எல்லை சோதனை சாவடிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் ரேஷன் அரிசி கடத்தலை முழு அளவில் தடுக்க போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது டி.ஜி.பி. வன்னியபெருமாள் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க வேண்டும். மேலும் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெயில் மூலம் பக்கத்து மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும். சோதனை சாவடிகள் இல்லாத சாலைகளிலும் வாகன சோதனை செய்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்.
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு கைப்பற்றப்பட்டு கிருஷ்ணகிரி அலகில் தற்போது 325 வாகனங்கள் உள்ளன. அவற்றை மாவட்ட வருவாய் அலுவலருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டிட வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, சேலம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர், மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
- திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). இவர் ஓசூர் திருச்சிப்பள்ளியில உள்ள ஒரு கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி காலை வேலையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல திருச்சி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (46). லாரி டிரைவர். இவர் லாரியை ஓட்டிக் கொண்டு கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பக்கமாக வந்தார். அங்கு சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்படவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சூளகிரி பகுதிகளில் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு செய்தனர்.
- 8 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தரம், மத்திய மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ,சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் அமைந்துள்ளது. இதில் 8 கிராம ஊராட்சிகளான ஆலூர், காமன்தொட்டி, பிர்ஜேபள்ளி, அத்திமுகம், பங்கனஅள்ளி, சென்னப்பள்ளி, ஓசால்லி, மாரண்டபள்ளி ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வாயிலாக தனிநபர் குடியிருப்பு இணைப்புகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்ட செயலாக்ககத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு மத்திய ஜல் சக்தி மிஷன் அமைச்சரகத்தில் இருந்து சிசியா பால் சேட்டி மற்றும் கன்சான் பாக் அகமத் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
8 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தரம், குளோரிநேசன், பாதுகாப்பான குடிநீர், தங்க தடை இன்றி குடிநீர் வழங்குதல், மற்றும் மத்திய மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், குடிநீர் தரம் பரிசோதனை சுய உதவி குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டதை கண்காணித்தனர்.
இந்த நிகழ்வில் உதவி திட்ட அலுவலர்கள் அருள்மொழி, தேவ ராஜ்,உதவி செயற்பொறியாளர், மாது,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாப்பிரான்சி, விமல் ரவிக்குமார், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சுய உதவி குழு மேலாளர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- ஓசோன் படலத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பன்னாட்டு ஓசோன் தினம் கிருஷ்ணகிரியில் கடைபிடிக்கப்பட்டது.
- கிருஷ்ணகிரியில் ஓசோன் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை மன்றங்களின் சார்பில் ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஒன்றிய அளவில் நடந்த மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.
உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், ஓசோன் படலத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பன்னாட்டு ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி நடந்த மாவட்ட அளவிலான போட்டியில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், காற்று மாசுப்படுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 560 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, பள்ளியின் தலைமை ஆசிரியரும், கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.






