என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் சாவு
    X

    மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • தூக்கிவீசப்பட்ட கவியரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பிள்ளாகொட்டாள் கிராத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் கவியரசன் (வயது19). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து தொகரப்பள்ளிக்கு வந்தார். மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் தொகரப்பள்ளி அருகே உள்ள காட்டுபகுதி சாலையில் செல்லும்போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கிவீசப்பட்ட கவியரசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவியரசன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×