என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 1,300 விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
    • அணை நீரில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நீர்நிலை களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் 400 சிலைகள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதி களில் 900 சிலைகள் என மொத்தம் 1,300 விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இதில், கிருஷ்ணகிரி நகர, ஒன்றிய இந்து முன்ன ணி மற்றும் விஎச்பி சார்பில் 28 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியின் 3-வது நாளான இன்றும் , 5-வது நாளான 22-ம் தேதியும் பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும், 7-வது நாளான 24-ம் தேதி இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநா யகர் சிலை களையும் ஊர்வ லமாக எடுத்துச் கிருஷ்ண கிரி சென்று அணையில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக போலீசார் சார்பில் கிருஷ்ணகிரி அணைப் பகுதியில் பாது காப்பு முன்னேற்பாடு பணி கள் செய்யப்பட்டுள்ளன. அணைப் பகுதியில் மின்னொளி, கண்காணிப்பு பந்தல், அணையின் கரைப் பகுதியில் தடுப்புகள் (பேரிகார்டு) உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    மேலும், கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகளைப் பாதுகாப்பாக கரைக்க காவல்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, அணை நீரில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல வேண்டும். சிலை யை கரைக்க 3 அல்லது 4 பேர் மட்டும் செல்ல வேண்டும். சிறுவர்கள் மற்றும் பெண்கள் தண்ணீ ரில் இறங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதே போல, விநாயகர்சிலைகள் கரைக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீராதா ரங்களில் அந்தந்த பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போலீசார் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணி களை ஈடுபட்டு வருகின்ற னர்.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • பயனாளிகளக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத் தொகை ரசீதுகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலத்துறை சார்பாக, முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்து, 593 பயனாளிகளக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத் தொகை ரசீதுகளை பயனாளிகளிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து, உயர் கல்வி படிக்கும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய் கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, இன்று நடை பெற்ற இந்த சிறப்பு முகாமில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த 593 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத்தொகை ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 250 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ் நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தைகளின் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக் கிற்கு நேரடியாகவோ அல்ல து காசோலையாகவோ வழங்கப்படும்.

    தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800க்கும் மேற்பட்ட பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று உயர்கல்வி பயன்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் சமுக நல அலுவலக களப்பாணி யாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பாக விழிப்புர்ணவு மேற்கொண்டு புதிய பயனா ளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும் மற்றும் இத்திட்டம் தொடர்பாக ஏற்பாடும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வள அலுவலர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றன
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தனர்.

    மத்தூர்,  

    ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் மிக சிறப்பாக கொண்டாடபட்டது.

    இவ்விழாவில் மாண வர்களுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தனர்.

    இவ்விழாவிற்க்கு அதிய மான் கல்வி நிறு வனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை தாங்கி ஓசோனின் முக்கிய துவத்தை எடுத்து ரைத்து மாணவர்க ளிடம் உரையாடினார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி சரவணகு மார் மற்றும் துணைமுதல்வர் அபிநயா கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உலக ஓசோன் தின நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வினை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

    • காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் கோவிந்ததராஜை கைது செய்தனர்.

    மத்தூர்:

    ஊத்தங்கரை அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் பள்ளி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் காயத்துடன் உயிர்தப்பினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு ஒரு தனியார் பள்ளி பஸ் வந்தது. அப்போது அந்த பஸ்சில் சில மாணவர்கள் இறங்கி வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் பஸ் அங்குள்ள பணிமனை அருகே வந்தபோது திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அப்போது சாலையில் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மீது மோதி சாலையின் ஓரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி, அதற்கு அடுத்தப்படியாக இருந்த வீட்டின் சுவர் மோதி நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தனியார் பள்ளி பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பலத்த காயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த சதாம் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஊத்தங்கரையை அடுத்த மகனூர்ப்பட்டியைச் சேர்ந்த வரதராஜ் மகன் கோவிந்தராஜ் என்பவர் தனியார் பள்ளி பஸ்சின் டிரைவர் ஆவார். இவரின் அலட்சியத்தால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் உயிரிழந்தவர் ஊத்தங்கரை காமராஜர் நகரைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலரான அப்துல் சலாம் மகன் சதாம் உசேன் (வயது 33) என்பதும் தெரியவந்தது.

    அதிர்ஷ்டவசமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்தபோது எதிரே கனரக வாகனங்கள் ஏதும் வராததால், பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும், வண்டியில் இருந்த பள்ளி குழந்தை அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் கோவிந்ததராஜை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்சை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி போலீசார் ஊத்தங்கரை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ்சுக்கு தீ வைத்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது தீ பஸ் முழுவதும் பற்றி எரிந்து நாசமானாது.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், தனியார் பள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது36).

    கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் ராயக் கோட்டை-ஓசூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜீத்மூலி (24). இவர் ஓசூர் அருகே உள் ள பாகலூரில் தனியார் கம்பெனியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரும் பாகலூரைச் சேர்ந்த சோம–லிங்கப்பா (40) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவர்கள் பாகலூர்-மல்லூர் சாலை யில் வந்தபோது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்–சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அஜீத் மூலியை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சோம லிங்கப்பா தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் தொடர்பாக நிபுணர்கள் வந்து சிகிச்சைகள் அளித்தனர்.

    குருபரப்பள்ளி, 

    ஓசூர் செயின்ட் பீட்டர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் குந்தாரப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் அளித்தனர். இதில் பொது மருத்துவம், எலும்பியல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் தொடர்பாக நிபுணர்கள் வந்து சிகிச்சைகள் அளித்தனர்.

    இந்த மருத்துவ முகாமில் குந்தாரப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, 13 அடி உயர பிரம் மாண்ட விநாயகர் வைக்கப் பட்டுள்ளது.
    • பக்தர்களுக்கு கவுரி அம்மன் பிரசாதம் வழங்குவது போல் மற்றொரு பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளனர்.

    ஓசூர்,  

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் ஐதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக ஓசூரில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி கொண்டா டப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் சுமார் 600 விநாயகர் சிலைகள் இன்று நிறுவப்பட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்ட மிகப் பிரமாண்டமாக பெரிய விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு ஓசூரில் சிவசேனா கட்சியின் யுவசேனா அணி சார்பில், பழைய வசந்த் நகர் பகுதியில், ஓசூர் கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, 13 அடி உயர பிரம் மாண்ட விநாயகர் வைக்கப் பட்டுள்ளது.

    முகப்பு வாச லில் நாகபுற்று வடிவமைக்கப்பட்டு அதில் இருந்து தீயுடன் வெளியே வரும் நாக தேவதையும், சிங்கத்தின் அருகே நின்று கண் இமைத்து பார்க்கும் அம்மன் சிலை, பூஜைகள் செய்யும் பூசாரி சிலை, கர்ஜிக்கும் சிங்கம் மற்றும் முருகன், விநாயகர் ஆகிய தெய்வங்கள் என விநாயகர் சதுர்த்தி விழாவை காண வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக பிரமாண்ட செட் அமைக்கப் பட்டுள்ளது.

    உள்ளே, நாக தேவதை யின் மடியில் அமர்ந்து கண் சிமிட்டி, காதுகளை அசைத்து பக்தர்களுக்கு அருள் வழக்கும் வகையில் பாலபூர் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகரை தரிசித்து வெளியே வரும் பக்தர்களுக்கு கவுரி அம்மன் பிரசாதம் வழங்குவது போல் மற்றொரு பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளனர்.

    மிக வித்தியாசமான வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை பொது மக்கள் நீண்ட வரிசையில் சென்று வியப்புடன் பார்த்து ரசித்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    மேலும் சிலைகள் முன்பு ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த பிரமாண்டமான செட்டை சுற்றி விழிப்பு ணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பெற் றோர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், மது ஒழிப்பு, மரம் வளர்ப்பு, தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இது பக்தர்களுக்கு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பில் விநாயகருக்கு ஹோமங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவசேனா கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் முரளி மோகன் கூறுகையில், "சுமார் 20 லட்சம் செலவில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காஞ்சனா மற்றும் சந்திரமுகி - 2 ஆகிய படங்களின் ஆர்ட் கலை ஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அரங்கின் உள்ளே பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. வருகிற ஞாயிற்றுக்கிழமை (24-ந் தேதி) வரை நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாரியை நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள குள்ளம்பட்டி ஊராட்சி நரால்சந்தம்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் பொறித்த போர்டு ஒன்றை கிராம மக்கள் வைத்துள்ளனர்.

    இதனை மறைக்கும் விதமாக சைதாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் விநாயகர் ஆலயம் என்ற போர்டு ஒன்றை வைத்துள்ளனர்.

    இதற்கு நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் போர்டு வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் மத்தூர் போலீசார் ஆகியோர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையின் போது வட்டாட்சியர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புதியதாக போர்டு அமைக்க அனுமதி அளித்த நிலையில் அதிகாரியை நரால் சந்தம்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. உடனே பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. 

    • பஸ்சின் டீசல் டேங்கை உடைத்து டீசலை திருடினர்.
    • டீசல் திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டி அருகே வீட்டின் முன்பு தனியார் பள்ளியின் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் அந்த பகுதியில் கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்து 3 பேர் இறங்கி வந்தனர். அவர்கள் கையில் பெரிய டீசல் பிடிக்கும் கேன் ஒன்றை கொண்டு வந்து தனியார் பள்ளி பஸ்சின் டீசல் டேங்கை உடைத்து டீசலை திருடினர். பின்னர் அந்த 3 பேரும் அவர்கள் வந்த காரில் மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. அதில் மர்ம நபர்கள் காரில் இருந்து இறங்கி டீசல் திருடும் காட்சிகள் அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தனியார் பள்ளி வாகனங்களில் டீசல் திருடு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 ஆண்டுகளாக பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • இரவு நேரங்களில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முதல் வெங்கடதாம்பட்டி புதூர் வரை சுமார் 1½ கி.மீ தொலைவில் செல்லும் தார்சலையை கடந்த 3 ஆண்டுகளாக பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இந்த சாலையை வெங்கடதாம்பட்டி மற்றும் அதன் வழி உள்ள வெங்கடதாம்பட்டி புதூர், சோளக்கப்பட்டி, படபள்ளி, படப்பள்ளி புதூர், புதுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

    சாலை வழியாக பஸ் வசதி குறைவாகவே இருப்பதால் அனைவருமே இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி தான் நகர்புறங்களுக்கு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் மருத்துவம்,கல்வி போன்ற வற்றிக்காகவும் ஊத்தங்கரை வரை செல்ல இந்த சாலையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.

    இந்த சாலை பழுதானதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த தார்சாலையை சீர்செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
    • ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூர்:

    ஓசூர் பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கவிதா (23). இவர்கள் கடந்த 10.10.2022 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கவிதாவை அவரது தாத்தா வீட்டில் முகமது விட்டு சென்றார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கவிதா தனது கணவருடன் செல்போனில் பேசினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கவிதா, நேற்று முன்தினம் பத்தலப்பள்ளியில் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதே போல திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

    • உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மதியழகன் எம். எல். ஏ. கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம். எல். ஏ. கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம்.வெங்கடேசன், துணைச் செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நாகராசன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், பேரூர் கழக செயலாளர் ஜே.கே.எஸ்., பாபு, அன்பரசு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஜேயேந்திரன், கவுன்சிலர் செந்தில், மகளிரணி புஷ்பா, கனல் சுப்பிர மணி, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

    ×