என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
    X

    அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது36).

    கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் ராயக் கோட்டை-ஓசூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜீத்மூலி (24). இவர் ஓசூர் அருகே உள் ள பாகலூரில் தனியார் கம்பெனியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரும் பாகலூரைச் சேர்ந்த சோம–லிங்கப்பா (40) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவர்கள் பாகலூர்-மல்லூர் சாலை யில் வந்தபோது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்–சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அஜீத் மூலியை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சோம லிங்கப்பா தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×