என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
    • கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் பேசியதாவது:-

    இன்றைய கூட்டத்தில் அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்&அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், ஜல் ஜீவன் மிஷன் தட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக துறை ரீதியாக நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்க வேண்டும். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள நிவாரண முகாம்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், முதல் பொறுப்பாளர்கள் விவரங்கள், உயர் மின் மோட்டார் பம்பு, டீசல் ஜெனரேட்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றின் விபரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் கரைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

     மேலும், கால்வாய்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் எச்ச ரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கால்நடை நிவாரண மையங்கள் அமைத்து, கால்நடைகளுக்குத் தேவையான ஊசி மருந்துகள், தீவனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மழைக்காலங்களில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திடவும், கழிவுநீர் கால்வாய்களின் வெள்ள நீர் தேங்காமல் வெளியேற தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள மரங்க ளின் கிளைகள் மின் கம்பி கள் மேல் படாதவாறு மரங்க ளின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் உறுதி யுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏது வாக அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக சாலை களில் விழும் மரங்களை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஓசூர் பாகலூர் சாலை, கேசிசி நகரில் உள்ள திருப்பதி மஹால், சமத்துவபுரம் சமுதாய கூடம், சூளகிரி காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாம்களை பார்வையிட்டார்.

    மேலும், ஓசூர் ஒன்றியம், சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் காலை சிற்றுண்டி சமைக்கப்படுவதையும், மாணவர்களுக்கு வழங்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டு, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட வேண்டும். சமையலறை மற்றும் மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்து மிடம் சுத்தமாகவும், தூய்மையா கவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதே போல பையனப் பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணை யர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, உதவி கலெக்டர் பாபு, கிருஷ்ணகிரி மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறி யாளர் செல்வகுமார், செயற் பொறியாளர்கள் வேலு, பழனி, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியா ளர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

    • கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
    • நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஆணையாளர் வசந்தி ஆகியோர் உணவ கத்திற்கு சென்று சீல் வைத்த னர்.

    குருபரப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி அருகே பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி உள்ள சிப்காட் தொழிற் பூங்கா வில் பிரபல தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடமா நில தொழிலாளர்கள் 150 பேர், கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் உள்ள சக்தி பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் திடீரென ஒருவர் பின் ஒருவருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து, அங்கிருந்த வர்கள் உடனடியாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 26 பேரையும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக குருபரப் பள்ளி போலீசார், வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளரான கிருஷ்ண கிரி சமத்துவபு ரத்தை சேர்ந்த சென்னப்பன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கிருஷ் ணகிரியில் உள்ள அந்த பாஸ்ட்புட் கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து, அங்கிருந்த உணவு பொருட்க ளின் மாதிரி சேகரிக்க ப்பட்டு ஆய்வுக் காக சேலத்தில் உள்ள ஆய்வ கத்திற்கு அனுப்பி வைத்தனர். தொட ர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஆணையாளர் வசந்தி ஆகியோர் நேற்று அந்த உணவ கத்திற்கு சென்று சீல் வைத்த னர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தியேட் டர்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, எச்சரிக்கை விடுத்தனர்.

    • வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • 1639 பயனாளிகள் ரூ.111.5 கோடி தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும் மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள் அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து, வங்கியின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று சுயமாக தொழில்கள் துவங்குமாறு மாவட்ட கலெக்டர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

    மேலும், இம்முகாமில் பல்வேறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒப்பளிப்பு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி, வழங்கினார். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 1639 பயனாளிகள் ரூ.111.5 கோடி தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர்.

    இம்முகாமில் சுயதொழில் கடன் திட்டங்கள், டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள். மாநில அரசின் மானியங்கள் (25% மூலதன மானியம், மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இம்முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன், நிதி ஆலோசகர் வணங்காமுடி, தொழில் ஊக்குவிப்பு வெங்கடேஸ்வரி, ரிசர்வ் வங்கி மேலாளர் கிருஷ்ணகுமார், தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், எம்.எஸ்.எம்.இ சங்கத் தலைவர்கள் வெங்கடேஸ் பாபு, சரவணன், நெல் அரவை முகவர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், வணிகர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள். தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாயக்கனூர் பிரிவு ரோட்டில் அதிகாலை வந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காரப்பேட்டை போலீசார் காரை சோதனை செய்யும் போது அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா 12 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த உடனே வண்டி ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஊத்தங்கரையில் உள்ள பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊத்தங்கரை வழியாக அடிக்கடி இதுபோன்று குட்கா கடத்தும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகன் சதாம் உசேன் (33). இவர் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கம்பனி நடத்தி வந்தார்.

    கடந்த 19-ந் தேதி இரவு இவர் 7.30 மணி அளவில் கம்பெனியை பூட்டி விட்டு திருப்பத்தூர்-ஊத்தங்கரை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சதாம்உசேன் பலியானார். அதேபோல அருகில் இருந்த மோட்டார் சைக்கிள்கள், மின்கம்பம் மீது பஸ் மோதியதில் அவை சேதமடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் அங்கு சென்று சதாம் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பஸ்சுக்கு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் தீ வைத்தனர். இதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசம் ஆனது.

    இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் பஸ்சை எரித்த வழக்கில் ஊத்தங்கரை அவ்வை நகர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (33), சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேடப்பட்டியை சேர்ந்த சூர்யா (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் மணிவண்ணன் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார். விபத்தில் இறந்த சதாம்உசேன் இவர்களின் நண்பர்கள் ஆவார்கள். விபத்தில் இவர்களின் நண்பர் இறந்ததால் ஆத்திரத்தில் பஸ்சை எரித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.
    • மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.

    இதனால் சிவானந்தம் மனைவி தனம் கோபித்துக் கொண்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள மலைச்சந்து கிராமத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை அங்கு சென்ற சிவானந்தம், மனைவியின் வீட்டு முன்பு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார்.
    • அனைத்து வாக்கு சாவடி முகர்வர்களும் ஒற்று மையுடன் கட்சி பணியாற்றிட வேண்டுமென எடுத்து ரைத்தார்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் அ.தி.மு.க.சார்பில் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார். இதில் களர்பதி, மேக்கலாம்பட்டி, மலையாண்டஅள்ளி உள்ளிட்ட வாக்குசாவடி முகவர்களை சந்திந்தும், உறுப்பினர் படிவங்களை கிளை வாரியாக ஆய்வு செய்தும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற அனைத்து வாக்கு சாவடி முகர்வர்களும் ஒற்று மையுடன் ஒருங்கிணைந்து கட்சி பணியாற்றிட வேண்டு மென எடுத்துரைத்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க ஒன்றிய இணை செயலாளரும், களர்பதி ஊராட்சி மன்ற தலைவருமான ஜெயந்தி புகழேந்தியிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், அ.தி.மு.க.வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி, மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், சிவம் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், முன்னால் கவுன்சிலர் முனியம்மாள் கந்தசாமி ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, பிரகாஷ், கிளை செயலாளர்கள் கே.பி.விஜியன், மதியழகன், கணேசன், ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர் மாதப்பன் நாயுடு, குமுதா, சுஜாதா, ஜெயா, ரேவதி, ஜெயலட்சுமி, விஜிய லட்சுமி,நிவேதனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 18-ந் தேதி மாலை தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது.
    • தனது சொந்த நிதியில் இருந்து மதியழகன் எம்.எல்.ஏ. ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் அருகே உள்ள ஜிகினிகொல்லை கிரா மத்தைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது வீடு கடந்த 18-ந் தேதி மாலை தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நேற்று அவரது வீட்டிற்கு சென்றார்.

    அங்கு கண்ணம்மாளை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசிடம் இருந்து தேவையான உதவிகளை தேவையான உதவிகளை பெற்று தருவதாக மதியழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

    அப்போது மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கே.நவாப், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • பணிகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். அன்றைய தினம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    அதை யொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா கிருஷ்ண கிரியில் சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெறுகிறது. இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கந்திகுப்பம் மாணிக்கம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மிட்டப்பள்ளி பிரபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் மற்றும் சிக்கன் ரைஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த 150 தற்காலிக தொழிலாளர்களுக்கு ஆனந்தன் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் சேட்டு என்கிற சென்னயன் என்பவரது தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். அனைவரும் சாப்பிட்ட நிலையில் பலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி இருந்துள்ளது.

    இதில் கடும் வயிற்று வலி ஏற்பட்டு 26 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இரவு சாப்பிட்ட சிக்கன் ரைஸ் அதில் இருந்த சிக்கன் காலாவதியானதா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில் அதன் தொடர் சம்பவமாக சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் உணவகங்கள் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறையினர் கடந்த நாட்களாக ஆய்வு செய்து வந்தனர். ஆனாலும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.
    • விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பர்கூர்:

    சென்னையில் இருந்து நெகிழிப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கிநாயனப் பள்ளி பஸ் நிறுத்தம் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டு இருந்தபோது, அப்போது இந்த லாரியின் பின்பகுதியில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, வேகமாக மோதியது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், ஈச்ச மர கீற்றுகளை பாரம் ஏற்றி சென்ற லாரியின் டிரைவர், வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த சரவணன் (வயது28), அதே பகுதியை சேர்ந்த கிளீனர் விசுவநாதன்(48) ஆகிய 2 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து விபத்தில் பலியான சரவணன், விசுவநாதன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் வாணியம்பாடி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கொசுக்கள் புழு உற்பத்தி செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • கொசுக்கள் புழு உற்பத்தி செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஊத்தங்கரை, மத்தூர், கல்லாவி ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கனமழை காரணமாக ஊத்தங்கரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி அலுவலகம் எதிரே தனி நபர் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேறும் பாதை இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது. அந்த தண்ணீர் வடிந்து செல்வதற்கான வழியில்லாமல் அதில் கொசுக்கள் புழு உற்பத்திய செய்ய தொடங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், இந்த தண்ணீர் தேங்கத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் சாலையை கடப்பது மிக சவாலாக உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கிய பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் செல்லாமல் எதிர் திசையில் செல்லக்கூடிய ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் பாதையை அடைத்துள்ள பகுதியை உடனடியாக சரி செய்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×