என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
- கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.
- மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.
இதனால் சிவானந்தம் மனைவி தனம் கோபித்துக் கொண்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள மலைச்சந்து கிராமத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை அங்கு சென்ற சிவானந்தம், மனைவியின் வீட்டு முன்பு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






