என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
    • பொது சுகாதார சட்டம் விதிமுறைகளின் படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூ ராட்சியில், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலை மையில், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, மருத்துவ மேற்பார்வையாளர் ஸ்ரீதர், சுகா தார மேற்பார்வையாளர் சிவ குருநாதன், கார்த்திக், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், இளங்கோ, நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் நடே சன் ஆகியோர் கொண்ட குழுவினர் 18 வார்டுகளில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

    டெங்கு கொசுபுழு பரவும் இடங்களை ஆய்வு செய்து, பேரூராட்சி வாகனம் மூலம் பழைய டயர்கள் அகற்றி கொசுப் புழு பரவல் தன்மை கொண்ட இடங்க ளை வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் விதிமுறைகளின் படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் கொசுப்புழு பணியாளர்களுக்கு கொசுப்புழு கட்டுப்படுத்தும் முறை, மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்கும் பணியா ளர்களுக்கு குளோரினேசன் செய்யும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

    • தரமில்லாத உணவுகள் விற்பனை செய்யும் உணவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
    • 5 சவர்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி எடுத்த உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பர்கூரில் உள்ள 81 உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பி ல் கூறியிருப்பதாவது:-

     கிருஷ்ணகிரியில் உள்ள சக்தி துரித உணவகத்தில் கடந்த 18-ந் தேதி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதில் 14 பேர் நலமுடன் வீடு திரும்பினர். 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் பர்கூர் பேரூராட்சி யில் உள்ள 81 உணவகங்கள், துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கெட்டு போன இறைச்சி, சுகாதாரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் துரித உணவகத்தில் இருந்து 5 சவர்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி எடுத்த உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும், மாவட் டத்தில் உள்ள அனைத்து துரித உணவகங்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், அனைத்து உணவகங்கள் மற்றும் துரித உணவங்கள் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் சமையல் செய்து பொது மக்களுக்கு விற்பனை செய்ய உணவக உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்தப்படு கிறது. தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

    • தேன்கனிக்கோட்டையில் 500 போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது.
    • 2 டிரோன் கேமராக்கள் மூலமும் ஊர்வலப் பாதை கண்காணிக்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் 50 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கரைப்ப தற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    ராம ஆஞ்சினேயர் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வ லம் மேளதாளத்துடன் நகரின் முக்கிய சாலை களான ராஜாஜி சாலை, பஸ் நிலையம், காந்தி சாலை, நேதாஜி சாலை, நேரு சாலை, கோட்டைவாசல் தர்கா வழியாக பட்டா ளம்மன் கோவில் ஏரியை சென்ற டைந்தது. பின்னர் கிரேன் மூலம் அனைத்து விநாயகர் சிலைகளையும் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது . முன்னதாக, ஊர்வலத்தையொட்டி இந்து முன்னனி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் பொது கூட்டம் நடை பெற்றது.

    இதில் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். இதில் இந்து முன்னனி கோட்ட அமைப்பாளர் உமேஷ் மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ் இந்து முன்னணி நிர்வாகிகள் கார்த்திக் அரிஷ் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர் .

    ஊர்வலத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தேன் கனிகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, காவல் ஆய்வாளர்கள் நாகராஜ் , சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 500 போலி சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், 2 டிரோன் கேமராக்கள் மூலமும் ஊர்வலப் பாதை கண்காணிக்கப்பட்டது.

    • கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் பொது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகள், நீர் தேங்கும் இடங்களில் குளோரிநேசன் செய்யவும், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மழைநீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்தவும் கொசு உற்பத்தியாவை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிக்கும் பாத்திரங்களை அவ்வப்போது தூய்மை செய்து, மூடி வைத்து உபயோகப்படுத்தவும் மற்றும் சுற்றுப்பு றத்தில் மழைநீர், கழிவுநீர் போன்றவை தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் மற்றும் மழைக்காலங்களில் வீட்டின் அருகாமையில் தேங்கியுள்ள நீர்நிலைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்தவும், மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் பொது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகிசிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். தினந்தோறும் குடிநீர் நிலைகளில் குளோரி நேசன் செய்யப்பட வேண்டும். உடைந்த குடிநீர் பைப்புகளை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். பழைய டயர்களை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்து, அவர்களுடைய வீட்டில் உள்ள கொசுப்புழுவை அப்புறப்படுத்த வேண்டும்.

    மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மொட்டை மாடியிலுள்ள மேல்தளத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க கொசு புழு உற்பத்தியாகாமல் இருக்க வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் குளோரிநேசன் செய்ய வேண்டும. தனியார் மருந்து கடைகளில் மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்துக் கடை உரிமையா ளர்கள் மருந்து மாத்திரைகள் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.பரமசி வம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.பூவதி மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர். 

    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
    • ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஓசூர்:

    கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து கன்னட அமைப்பினர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், இன்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் பிரவீண் ஷெட்டி உத்தரவின் பேரில், அந்த அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடம், மற்றும் பானைகளை உடைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமான சூழ்நிலையும் நிலவியது. இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் இரு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் நாராயண கவுடா உத்தரவின் பேரில், அந்த அமைப்பின் ஆனேக்கல் தாலுகா தலைவர் கஜேந்திரா தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர், திடீரென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அத்திப்பள்ளி போலீசார், எரிந்த நிலையில் இருந்த உருவப்பொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இந்த மறியல் போராட்டத்தில், 10 பெண்கள் உள்பட 50 பேர் கலந்துகொண்டனர்.

    கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினரின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது விடுக்கப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.

    அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 645 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1066 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணையில் நீர் தேக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் மழை பொறுத்து நீர்வரத்து திறக்க அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகமாகும்பட்சத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்பும் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணையில் 60.20 மில்லி மீட்டரும், போச்சம்பள்ளி 36.20, கிருஷ்ணகிரி 26, பர்கூர் 14.20, நெடுங்கல் 7, ராயக்கோட்டை 5, தேன்கனிக்கோட்டை 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • முதல் முறையாக வருகிற 25-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
    • கழக மூத்த முன்னோடிகள் 1,800 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்ட மன்ற உறுப்பி னருமான மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 25-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெங்களூரு சாலை யில் மாவட்ட தி.மு.க. அலுவலகம் அருகில் அமைக்க ப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டடத்தைச் சேர்ந்த 20 அணிகளின் சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளித்து வழி நெடுகிலும் தி.மு.க. கொடி ஏந்தி தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்படு கிறார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி யில் சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெற உள்ள கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கழக மூத்த முன்னோடிகள் 1,800 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தேவராஜ் மஹால் வளாகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர், துணை தலைவர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணியினர், பி.எல்.ஏ 2 பூத் கமிட்டி, கிளை கழக செயலாளர்கள், தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த அனைத்து நிகழ்ச்சி களிலும் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டுமாறும், கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
    • கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் பேசியதாவது:-

    இன்றைய கூட்டத்தில் அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்&அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், ஜல் ஜீவன் மிஷன் தட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக துறை ரீதியாக நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்க வேண்டும். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள நிவாரண முகாம்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், முதல் பொறுப்பாளர்கள் விவரங்கள், உயர் மின் மோட்டார் பம்பு, டீசல் ஜெனரேட்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றின் விபரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் கரைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

     மேலும், கால்வாய்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் எச்ச ரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கால்நடை நிவாரண மையங்கள் அமைத்து, கால்நடைகளுக்குத் தேவையான ஊசி மருந்துகள், தீவனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மழைக்காலங்களில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திடவும், கழிவுநீர் கால்வாய்களின் வெள்ள நீர் தேங்காமல் வெளியேற தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள மரங்க ளின் கிளைகள் மின் கம்பி கள் மேல் படாதவாறு மரங்க ளின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் உறுதி யுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏது வாக அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக சாலை களில் விழும் மரங்களை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஓசூர் பாகலூர் சாலை, கேசிசி நகரில் உள்ள திருப்பதி மஹால், சமத்துவபுரம் சமுதாய கூடம், சூளகிரி காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாம்களை பார்வையிட்டார்.

    மேலும், ஓசூர் ஒன்றியம், சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் காலை சிற்றுண்டி சமைக்கப்படுவதையும், மாணவர்களுக்கு வழங்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டு, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட வேண்டும். சமையலறை மற்றும் மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்து மிடம் சுத்தமாகவும், தூய்மையா கவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதே போல பையனப் பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணை யர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, உதவி கலெக்டர் பாபு, கிருஷ்ணகிரி மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறி யாளர் செல்வகுமார், செயற் பொறியாளர்கள் வேலு, பழனி, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியா ளர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

    • கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
    • நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஆணையாளர் வசந்தி ஆகியோர் உணவ கத்திற்கு சென்று சீல் வைத்த னர்.

    குருபரப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி அருகே பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி உள்ள சிப்காட் தொழிற் பூங்கா வில் பிரபல தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடமா நில தொழிலாளர்கள் 150 பேர், கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் உள்ள சக்தி பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் திடீரென ஒருவர் பின் ஒருவருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து, அங்கிருந்த வர்கள் உடனடியாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 26 பேரையும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக குருபரப் பள்ளி போலீசார், வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளரான கிருஷ்ண கிரி சமத்துவபு ரத்தை சேர்ந்த சென்னப்பன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கிருஷ் ணகிரியில் உள்ள அந்த பாஸ்ட்புட் கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து, அங்கிருந்த உணவு பொருட்க ளின் மாதிரி சேகரிக்க ப்பட்டு ஆய்வுக் காக சேலத்தில் உள்ள ஆய்வ கத்திற்கு அனுப்பி வைத்தனர். தொட ர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஆணையாளர் வசந்தி ஆகியோர் நேற்று அந்த உணவ கத்திற்கு சென்று சீல் வைத்த னர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தியேட் டர்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, எச்சரிக்கை விடுத்தனர்.

    • வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • 1639 பயனாளிகள் ரூ.111.5 கோடி தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும் மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள் அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து, வங்கியின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று சுயமாக தொழில்கள் துவங்குமாறு மாவட்ட கலெக்டர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

    மேலும், இம்முகாமில் பல்வேறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒப்பளிப்பு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி, வழங்கினார். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 1639 பயனாளிகள் ரூ.111.5 கோடி தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர்.

    இம்முகாமில் சுயதொழில் கடன் திட்டங்கள், டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள். மாநில அரசின் மானியங்கள் (25% மூலதன மானியம், மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இம்முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன், நிதி ஆலோசகர் வணங்காமுடி, தொழில் ஊக்குவிப்பு வெங்கடேஸ்வரி, ரிசர்வ் வங்கி மேலாளர் கிருஷ்ணகுமார், தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், எம்.எஸ்.எம்.இ சங்கத் தலைவர்கள் வெங்கடேஸ் பாபு, சரவணன், நெல் அரவை முகவர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், வணிகர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள். தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாயக்கனூர் பிரிவு ரோட்டில் அதிகாலை வந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காரப்பேட்டை போலீசார் காரை சோதனை செய்யும் போது அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா 12 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த உடனே வண்டி ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஊத்தங்கரையில் உள்ள பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊத்தங்கரை வழியாக அடிக்கடி இதுபோன்று குட்கா கடத்தும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×