என் மலர்
கிருஷ்ணகிரி
- ஓசூரில் விவசாயிகள் போர்வையில் ரவுடித்தனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
- போலி அட்டைகள் வைத்திருப்பவர்களை அனுமதிக்க கூடாது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், ஓசூர் உழவர் சந்தையில் வெளியாட்கள் அட்டை இல்லாதவர்கள் போலியான அட்டை வைத்துள்ளவர்கள் சந்தைக்குள்வந்து வியாபாரம் செய்வது தடுக்கவேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே உழவர் சந்தையில் அட்டை வழங்கவேண்டும். உழவர் சந்தையில் ரவுடிகள் கடைவைத்து மிரட்டுவதை தடுக்கவேண்டும். ஒரே கடையை பலவருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மாற்றவேண்டும்.
ஆடு, மாடுகள் சந்தைக்குள் வருவதை தடுக்க வேண்டும். குப்பைகளை, தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு நவீன சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும். உழவர் சந்தையின் கடைகளை, அதிகப்படுத்த வேண்டும். உழவர்சந்தையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்கு வெளியில் நடைபாதையில் வைத்துள்ள கடைகளால் அதிகளவில் திருட்டு நடைபெறுகிறது, எனவே, கடைகளை அப்புறப்படுத்தி திருட்டுகளை தடுக்க வேண்டும். உழவர் சந்தைக்கு வரும் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வந்து விலை மதிப்பீடு செய்து சந்தை முடியும் வரை இருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பெற்றோர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு
- பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கே.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தருமன். இவரது மகள் லோகேஸ்வரி (வயது19).
இவர் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரை நேற்று மாலை கல்லூரி தேர்வில் மதிபெண்கள் குறைவாக வாங்கி யுள்ளதால் அவரது பெற்றோர்கள் திட்டி யுள்ளனர்.
இதனால் மன உளைச்ச லடைந்த மாணவி லோகேஸ்வரி இரவு வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வராததால் பெற்றோர்கள் சென்று பார்த்த பொழுது லோகிஸ்வரி இறந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போச்சம்பள்ளி போலீ சாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேஸ்வரியின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தம்பிதுரை எம்.பி. குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
- மாணவ, மாணவி யருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.பி.பி.எஸ் (2023 - 2024 பேட்ச்) மாணவ, மாணவி யருக்கு வெள்ளை அங்கி (ஒயிட் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. ஓசூர் அதியமான் கல்லூரி உள் விளையாட்ட ரங்கில் நடந்த விழாவில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வ கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி நிறுவ னத்தின் நிறுவனர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழா வில் அவர் பேசியதாவது:-
மருத்துவ துறையில், சேவை புரிவது மிகவும் முக்கியமானது.விழாக்களில் குத்து விளக்கேற்றி வைப்பதில் ஒரு புனிதம், அர்த்தம் உள்ளது. வாழ்க்கை யில் மேல் நோக்கி செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே, குத்து விளக்கு ஏற்றப்ப டுகிறது. மாணவர்கள் நன்கு படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும். வாய்ப்புகளை தவற விடக்கூடாது. உங்கள் வாழ்க்கை, தீபச்சுடரை போன்று மேல்நோக்கி செல்ல வேண்டுமே தவிர, கீழ்நோக்கி செல்லக்கூடாது. நீங்கள் எந்த படிப்பு படித் தாலும் சரி, உங்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து, நல்ல வாய்ப்புகளை பயன்ப டுத்திக் கொண்டு வாழ்க்கை யில் முன்னேற வாழ்த்து கிறேன்.
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். 5 ஆண்டுகள் முழு கவனம் செலுத்தி படியுங் கள். உங்களுக்கு தேவையா னவற்றை கல்லூரி நிர்வா கம் செய்து தரும்" இவ்வாறு அவர் விழாவில் பேசினார். தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கியும், படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங் கள் ஆகியவற்றை வழங்கி னார். விழாவில், மனநல மருத்துவர் கண்ணன் கிரிஷ், மாணவ, மாணவி யருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். முன்ன தாக டீன் சோமசேகர் வரவேற்றார்.
மருத்துவ இயக்குனர் ராஜா முத்தை யா முன்னிலை வகித்தார். விழாவில், செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி அறங்கா வலர் டாக்டர் பானுமதி தம்பிதுரை, செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, டாக்டர் நம்ரதா தம்பிதுரை, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ஆனந்தரெட்டி, இருப்பிட மருத்துவர் பார்வதி, முன்னாள் அமைச் சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், மனோகரன், அதியமான் பொறியியற் கல்லுாரி முதல்வர் ஜி.ரங்கநாத், வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் பள்ளி குழும அறங்காவலர் கூத்தர சன், மற்றும் அறங்காவலர் சுரேஷ், ஆடிட்டர் மணி ஆகியோர் கலந்து கொண்ட னர்.
- ஐ.வி.டி.பி நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்
- ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி நிறுவனம், மாணவமாணவியருக்கு கல்வி உதவித்தொகை மட்டுமில்லாமல், அவர்க ளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு ஊக் கப்பரி சுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காரிமங்கலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஏற்றத் தாழ்வுகளின்றி, சமத்துவ மனப்பான்மையுடன் கல்லூ ரிக்கு வரும் பொருட்டு சென்ற கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுக லை பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து இக்கல்வி யாண்டும் இளங்க லை முத லாண்டு பயிலும் 640 மாணவிகளுக்கும் மற்றும் முதுகலை முதலா ண்டு பயிலும் 100 மாணவி களுக்கும் தலா ரூ.695- என மொத்தம் ரூ.5,14,300- மதிப்பிலான சீருடைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலை வர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அவர் கள் வழங்கினார்.
விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் அவர்கள் இக்கல்லூரிக்கு இதுவரை ரூ.34.1 இலட்சம் மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட் டுள்ளதாகவும், அதனை சிறப்பான முறையில் பயன் படுத்தி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். விழாவிற்கு முன்னிலை வகித்த கல்லூரியின் முதல் வர் முனைவர். குதா கல்லூரி மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியமைக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித் துக் கொண்டார்.
- சினிமா தியேட்டரின் முன் 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
- 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே உள்ள அந்திவாடி பகுதிைய சேர்ந்தவர் ராம் பிரசாத் (29). இவர் ஓசூர் -தளி சாலையில் உள்ள கிராண்ட் சினிமாஸ் தியேட்டரின் மேலாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று சினிமா தியேட்ட ரின் முன் 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதை தட்டி கேட்ட ராம்பிரசாத்தை 3 பேரும் சேர்ந்து கைகளாலும், கட்டையாலும் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த ராம்பிரசாத் மத்திகிரி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் நகரை சேர்ந்த வேணு (27), சாந்தி நிகேந்தன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (25), அகொண்டப் பள்ளியை சேர்ந்த அசோக்குமார் (29) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.
- பிரகாஷ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கலு கொண்டப்பள்ளி ஊராட்சியில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கலு கொண்டப்பள்ளி முதல் டால் தொழிற் சாலை வரை ரூ.35.6 லட்சம் மதிப்பில் சாலை பணி, ரூ.17.65 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், உளிவீரனப் பள்ளியில் ரூ.10.56 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால் வாய் அமைத்தல், வெங்கடாபுரத்தில் ரூ.9.51 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, உளிவீரனப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்பு சி.எஸ்.ஆர் திட்டத்தில் ரூ.20.08 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கப்பக்கல் கிராமத்தில் ரூ.13.10 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.
இப்பணிகளை கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலா ளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ். கலு கொண்டப் பள்ளி ஊராட்சி தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் சைத்திரா சுரேஷ் ஒன்றிய கவுன்சிலர் நாகவேணி பிரபாகர். சீனிவாசன், சுந்தர், சசிகலா சோமசேகர், ரத்னா நாகராஜ். கீதா நாகராஜ் அனிதா நாகராஜ்ரெட்டி லட்சுமி முனிராஜ், ரவி தாமோதர் ரெட்டி, சீனி வாசன், கெஞ்சப்பா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
- ஜெய்சங்கராவை கைகளால் சரமாரி யாக தாக்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகே பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கரா (வயது 44). விவசாயியான இவருக்கும், அதே பகு–தியைச் சேர்ந்த அவரது உறவினர்களான நந்தகுமார் (32), மோப்பு ரெட்டி (51), வாசுதேவ ரெட்டி (56), உமாசங்கர் (54) ஆகியோருக்கும் சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நந்த குமார், மோப்பு ரெட்டி, உமாசங்கர், வாசுதேவ ரெட்டி ஆகிய 4பேரும் சேர்ந்து ஜெய்சங்கராவை கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரி யாக தாக்கினர். இதில் காயமடைந்த ஜெய்சங்கராவை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு
- பணப்பெட்டியில் ரூ.63 ஆயிரம் பணத்தை காணவில்லை.
- முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரபிக். இவரது மனைவி ஹர்ஷியா (வயது27). இவர் அதேபகுதியில் சிக்கன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டையைச் சேர்ந்த முபாரக் (23) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி வழக்கம் போல் கடையை திறந்த ஹர்ஷியா பணப்பெட்டியை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் வைத்திருந்த ரூ.63 ஆயிரத்தை காணவில்லை. இதுகுறித்து ஹர்ஷியா ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் தனது கடையில் வேலை செய்யும் முபாரக் பணத்தை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் முபாரக்கிடம் விசாரணை நடத்தினர். இதில் முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.61 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.
- ஊழியர்க ளுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றம் வழங்க கோரிக்கை .
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நேற்று கிருஷ்ணகிரி மா வட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டல அளவிலான உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். கிருஷ் ணகிரி மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சேரலாதன் தொடக்க உரை யாற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் சுமதி, சரவணன், மணி, பைரோஸ்கான், குப்புசாமி, விஜயகுமார் ஆகியோர் கோரிக்கைவுரை ஆற்றினா ர்கள். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ் செல்வி நிறைவுரை ஆற்றி னார். மாவட்ட பொருளாளர் சிவசண்முகம் நன்றி கூறினார். உண்ணாவிரத போராட் டத்தில், அரசு ஆரம்ப சுகா தார நிலையங்க ளில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு 10 சதவீதம் ஊதிய மாற்றம் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் பரிசோ தனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் பேசப்பட்டன.
- போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடாக உள்ளது.
- மனு அளித்தாலும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
போச்சம்பள்ளியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், கூட்டுறவு மூலம் இ-நாம் முறையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் விலை நிர்ணயம் செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை. போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கே டாக உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வேலம்பட்டி ஏரி, பாளேகுளி ஏரி, பில்லுமலை அடிவாரத்தில் இருந்து தென்பெண்ணை ஆறு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை, அளவீடு செய்து அகற்றிட வேண்டும். கோமாரி நோய் தாக்கி இறந்த காளை மாடுகளுக்கு இழப்பீடு வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி பகுதியில் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தால், வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். நேரலகிரி ஏரியை அளவீடு செய்ய மனு அளித்தால், நடவடிக்கை எடுக்காமல் தீர்வு காணப்பட்டதாக பதிலளிக்கின்றனர். அலியாளம், பாத்தகோட்டா வழியாக தென்பெண்ணை உபரிநீர் தூள்செட்டி ஏரிக்கு கொண்டு செல் லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட வரை உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். கார்த்திகை பட்டா சாகுப டிக்காக நாட்டுரக தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் நாற்றுகள் வழங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் தொடர் மனு அளித்தாலும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து கலெக்டர் சரயு பேசியதாவது:-
போச்சம்பள்ளி வாரச் சந்தை தூய்மைப்படுத்தி, அதற்கான புகைப்படங்க ளை அனுப்பி வைக்க தொ டர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு மானி யத்துடன் கடனுதவிகள் அளிக்கப்படுகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழ ங்க முன்வர வேண் டும். கொரோனா காலக்கட் டத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பாலை கொள் முதல் செய்ய மறுத்தும், விலையும் குறைத்த போதும், ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் நிலையான விலை கொடுத்தது.
மாவட்டத்தில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும். மேலும், ஆவின் வளர்ச்சிக்கு பால் உற்பத்தியாளர்கள் உதவிட வேண்டும். நீர்நிலை ஆக்கிர மிப்புகள் அகற்றிட தொடர் புடைய துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கோமாரி நோய் தாக்கிய உயிரிழக்கும் கால்ந டைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு முன்மொ ழிவு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் விவ சாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.
- புது மைப்பெண் திட்ட பயனாளி மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
உலக வங்கியின் தமிழ் நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் 3 முன்னுரிமை துறைகளான சிறு, குறு தொழில் தறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையை சேர்ந்த மாவட்ட அளவி லான பெண் பயனாளி களுடன் உலக வங்கி நிபுணர் குழு கலந்துரை யாடல் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.
இதில் பங்கேற்க கிருஷ் ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த புது மைப்பெண் திட்ட பயனாளி மாணவிகள் சிறப்பாக தேர்தெடுக்கப்பட்டனர். இதையொட்டி கல்லூரி யின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள், கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் ஆகியோர் பேசுகையில், பள்ளி கல்வியை தமிழ் வழியில் படித்த மாண விகளுக்கு ஒவ்வொரு ஆண் டும் அரசு வழங்கும் புதுமை ப்பெண் திட்ட கல்வி உதவித் தொகை சிறப்பான முறை யில் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பெற்று தரப்படுகிறது.
இன்று நடைபெறும் உலக வங்கி நிபுணர்களுடனான சந்திப்புக்கு மாவட்டத்தி லேயே சிறந்த சுயநிதி கல்லூரியாக எங்களை தேர்தெடுத்து எங்கள் மாண விகள் பங்கேற்ற மைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எங்களின் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம் என்றனர். இந்த நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ஆறு முகம், புதுமை பெண் திட்ட அலுவலர் பாலாஜி, பேரா சிரியை ரேணுகா, நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 6 மணி முதல் 9 மணி வரை கடும் பனிபொழிவு காணப்படு கிறது.
- வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக் கோட்டை, தளி, ஊத்தங்க ரை, போச்சம்பள்ளி, காவே ரிப்பட்டணம் உட்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கடும் பனிபொழிவு காணப்படு கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்கின்றனர்.
மேலும், காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாண விகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துடன் செல் கின்றனர். ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி குழந்தை கள் சுவெட்டர் அணிந்து பள்ளிகளுக்கு செல்கிறார்கள். இதே போல், காலையில் காவேரிப் பட்டணம், திம்ம புரம் பகுதி களில் மல்லிகை பூக்கள் அறுவடை செய்ய முடியா மல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். கடும் பனி காரணமாக குளிர் கால உடைகளான சுவெட்டர், ஜர்கின் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.






