search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
    X

    கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

    • பெற்றோர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு
    • பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கே.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தருமன். இவரது மகள் லோகேஸ்வரி (வயது19).

    இவர் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரை நேற்று மாலை கல்லூரி தேர்வில் மதிபெண்கள் குறைவாக வாங்கி யுள்ளதால் அவரது பெற்றோர்கள் திட்டி யுள்ளனர்.

    இதனால் மன உளைச்ச லடைந்த மாணவி லோகேஸ்வரி இரவு வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தூங்கி உள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வராததால் பெற்றோர்கள் சென்று பார்த்த பொழுது லோகிஸ்வரி இறந்தது தெரியவந்துள்ளது.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீ சாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேஸ்வரியின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×