search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.23 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

      கலுகொண்டபள்ளி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ பூமி பூைஜ செய்து தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.1.23 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • பிரகாஷ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    • மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கலு கொண்டப்பள்ளி ஊராட்சியில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கலு கொண்டப்பள்ளி முதல் டால் தொழிற் சாலை வரை ரூ.35.6 லட்சம் மதிப்பில் சாலை பணி, ரூ.17.65 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், உளிவீரனப் பள்ளியில் ரூ.10.56 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால் வாய் அமைத்தல், வெங்கடாபுரத்தில் ரூ.9.51 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, உளிவீரனப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்பு சி.எஸ்.ஆர் திட்டத்தில் ரூ.20.08 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், கப்பக்கல் கிராமத்தில் ரூ.13.10 லட்சம் மதிப்பில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்தல் பணி களுக்கு பூமி பூஜை நடந்தது.

    இப்பணிகளை கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலா ளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ். கலு கொண்டப் பள்ளி ஊராட்சி தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் சைத்திரா சுரேஷ் ஒன்றிய கவுன்சிலர் நாகவேணி பிரபாகர். சீனிவாசன், சுந்தர், சசிகலா சோமசேகர், ரத்னா நாகராஜ். கீதா நாகராஜ் அனிதா நாகராஜ்ரெட்டி லட்சுமி முனிராஜ், ரவி தாமோதர் ரெட்டி, சீனி வாசன், கெஞ்சப்பா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×