என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணா கலை  கல்லூரி   மாணவிகள் உலக வங்கி நிபுணர்களுடன் கலந்துரையாடல்
    X

    கிருஷ்ணா கலை கல்லூரி மாணவிகள் உலக வங்கி நிபுணர்களுடன் கலந்துரையாடல்

    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.
    • புது மைப்பெண் திட்ட பயனாளி மாணவிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    உலக வங்கியின் தமிழ் நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் 3 முன்னுரிமை துறைகளான சிறு, குறு தொழில் தறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையை சேர்ந்த மாவட்ட அளவி லான பெண் பயனாளி களுடன் உலக வங்கி நிபுணர் குழு கலந்துரை யாடல் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது.

    இதில் பங்கேற்க கிருஷ் ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த புது மைப்பெண் திட்ட பயனாளி மாணவிகள் சிறப்பாக தேர்தெடுக்கப்பட்டனர். இதையொட்டி கல்லூரி யின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள், கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் ஆகியோர் பேசுகையில், பள்ளி கல்வியை தமிழ் வழியில் படித்த மாண விகளுக்கு ஒவ்வொரு ஆண் டும் அரசு வழங்கும் புதுமை ப்பெண் திட்ட கல்வி உதவித் தொகை சிறப்பான முறை யில் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பெற்று தரப்படுகிறது.

    இன்று நடைபெறும் உலக வங்கி நிபுணர்களுடனான சந்திப்புக்கு மாவட்டத்தி லேயே சிறந்த சுயநிதி கல்லூரியாக எங்களை தேர்தெடுத்து எங்கள் மாண விகள் பங்கேற்ற மைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எங்களின் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம் என்றனர். இந்த நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ஆறு முகம், புதுமை பெண் திட்ட அலுவலர் பாலாஜி, பேரா சிரியை ரேணுகா, நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×