என் மலர்
கிருஷ்ணகிரி
- பையில் நகை மாயமாகி இருந்தது.
- திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப்பை சேர்ந்தவர் அஸ்வினி (29). இவர் சென்னையில் இருந்து பஸ்சில் ஓசூருக்கு வந்தார். பஸ் நிலையத்தில் இறங்கிய போது பையை பார்த்தார். அப்போது பையில் நகை மாயமாகி இருந்தது.
அந்த நேரம் உடன் வந்த பயணிகள் 2 பேர் மீது சந்தேகம் அடைந்த அஸ்வினி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 6 பவுன் நகை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்க ளிடம் நடத்திய விசார ணையில் அவர்கள் திரு வண்ணாமலை மாவட்டம் மேல்வத னவாடியை சேர்ந்த பீமன் (33), வீரமணி (30) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
- மாரிக்கும் அவரது மனைவிக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணம்பட்டி பகுதியை சார்ந்தவர் மாரி (வயது 67) இவரது மனைவி வெள்ளையம்மாள் (62) இந்த வயதான தம்பதியினர் மலைவாழ் இனத்தை சார்ந்தவர்கள் எழுத படிக்க தெரியாதவர்கள்.
இந்த தம்பதியினருக்கு அந்த பகுதியில் சொந்தமாக சிறிய அளவில் விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருகின்றனர். இவர்களது மகள் திருமணம் ஆகி சென்று விட்டார்.
இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளாக ரேஷன் அட்டை இல்லாததால் அரசு மூலமாக கிடைக்கும் ரேஷன் பொருட்கள், அரசின் நல திட்டங்கள் போன்றவற்றை பெற முடியாமல் அவதியுற்று மன வேதனையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக ரேஷன் அட்டை வாங்குவதற்காக தருமபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு பல முறை அலைந்தும் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டி அவர்களை அலைகழித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவர்கள் ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதே போல மாரிக்கும் அவரது மனைவிக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது போன்றவை இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த வயதான தம்பதியினருக்கு இன்னமும் ரேஷன் அட்டை கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இந்த நவீன காலத்தில் இது போன்ற புறக்கணிப்புகள் தொடர்வது நல்லதல்ல.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
- தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
ஓசூர் அருகேயுள்ள கர்நாடக மாநில எல்லையான ஆனேகள் பகுதியில் உள்ள சிகாரிபாலிய பகுதியில் சீனிவாஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
சம்பவத்தன்று அந்த தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் சந்தன் ரஜ் பன்சிங் (வயது31) மற்றும் பிந்டு ரஜ் பன்சிங் (22) ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டியில் இறங்கி ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் கூச்சலிட்டனர்.
அதனை கேட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் மற்றும் தொழிலாளிகள் தண்ணீர் தொட்டிக்கு சென்று பார்த்த போது இவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஹெப்பாகுடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்த வந்த போலீசார் 2 உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருணாநிதி சிலையை திறப்பதில் பெருமை கொள்கிறேன்.
- தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியை கண்டவர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில், நகர செயலாளர் நவாப்-நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
விழாவிற்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சிவசங்கர், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் நவாப் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல இடங்களில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவரால் வர முடியவில்லை.
இருப்பினும் அவர், கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை நினைத்து கொண்டே இருப்பார். கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருணாநிதி சிலையை திறப்பதில் பெருமை கொள்கிறேன்.
இந்த சிலையை என்னை திறந்து வைப்பதற்கு வாய்ப்பு தந்த கழக நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே கிருஷ்ணகிரி நகருக்கு இளைஞர் அணி கூட்டம், தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்தேன்.
இன்று மீண்டும் உங்கள் அனைவரையும் கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியை கண்டவர். இந்த நன்னாளில் கலைஞரின் புகழை போற்றுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். நமது தலைவர் காட்டுபவர் தான் பிரதமர் ஆக உள்ளார். கலைஞரின் புகழ் ஓங்குக. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
சிங்கமாக வீர நடைபோட்டவர் கருணாநிதி. அவருடன், 83 ஆண்டுகள் பயணித்தவன் நான். கோபாலபுரத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக விசுவாசியாக இருந்த நான் தூக்கி வளர்த்த உதயநிதியின் வளர்ச்சியை, வேகத்தை பாராட்டுகிறேன். அவருடைய பண்பாடு, அடக்கம் வாழ்த்துக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பத்து பைப் பகுதி ஆகிய இடங்களில் மாடுகளை விரட்டி, விரட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், மாநகராட்சி கூட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், நகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், துப்பரவு மேற்பார்வையாளர்கள் ரமேஷ், கிரி, மோகன் மற்றும் பணியாளர்கள், ஓசூர் பஸ் நிலையம், உழவர் சந்தை, எம்.ஜி.ஆர் மார்க்கெட், காமராஜ் காலனியில் உள்ள பத்து பைப் பகுதி ஆகிய இடங்களில் மாடுகளை விரட்டி, விரட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடிபட்ட மாடுகள், சிறிது நேரத்தில் நைசாக தப்பித்தும், திமிறிக் கொண்டும் ஓடியதால் சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்து அங்கும், இங்கும் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்வின்போது 12 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடப்பட்டது.
- ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் விதிப்பு
- கடை உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், சுந்தரமூர்த்தி, கிரி, மோகன், ரமேஷ் உள்ளிட்ட துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியா ளர்கள், ஓசூரில் நாமால்பேட்டை, ஜனப்பர் தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகள் மற்றும் பஸ் நிலையம் எதிரில் உள்ள 2 பூ மார்க் கெட்டுகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகள் பயன்பாட்டில் உள்ளதா? என நேற்று அதிரடி சோத னை மேற்கொண்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்ததாதகவும், பயன் பாட்டில் வைத்திருந்த தாக வும் 26 கடைகளில் மொத்தம் 122 கிலோ தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு கிலோவுக்கு ரூ 1,000 வீதம் 1,22,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.
அதே போல், மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்க ளுக்கும், வாகன ஓட்டிக ளுக்கும் இடையூறு ஏற்படுத் தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார்.
- மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, பெங்களூருவில் உள்ள ஸ்டெல்லர் எஸ்.பி தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ரங்கராஜன் சீனிவாசன் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழாவில் பேசுகையில்:-
கோவிட்-19 தொற்று நோயின் உலகளாவிய விளைவுகள், வளர்ந்து வரும் சவால்களை எதிர் கொள்ள கல்வி மறு சீரமைப்பின் இன்றிய மையாத தேவை, இந்தியா வின் பொருளாதார வாய்ப்பு கள், தூய்மையான எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார்.
மேலும்,தொழில்துறை தேவைகளுடன் கல்வியை சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, உயர்கல்வி, குடும்ப வணிகம், தொழில் முனைவு மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைப்பாதைகளுக்கு வழிகாட்டிய அவர்த கவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பின் உண்மை களை விளக்கினார்.
தொடர்ந்து 2021-2022- ஆம் கல்வியாண்டில் பயின்ற 919 முதுகலை மற்றும் இளங்கலை மாண வர்களுக்கு, ரங்க ராஜன் சீனிவாசன் பட்டங் களை வழங்கி வாழ்த்தினார். மேலும், குறிப்பிடத்தக்க தரவரிசைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில், அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் தம்பிதுரை எம்.பி, கல்வி குழுமத்தின் அறங்காவலர்கள் மற்றும் துறை தலைவர்கள் பேரா சிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் சரயு வழங்கினார்
- செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவில் 1737 பேருக்கு ரூ.14 கோடியே 97 லட்சம் மதிப்பிலான கடன உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.
பர்கூர் ஊராட்சி ஒன்றி யம், ஒரப்பத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி யது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் 1,737 பயனா ளிகளுக்கு ரூ.14 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரத்து 910 மதிப்பிலான கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பா ராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட 17 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிகஅளவில் ஊட்டி டீ விற்பனை செய்த 3 கூட்டு றவு விற்பனையாளர்க ளுக்கு பாராட்டு கேடயங்க ளும், அதிக அளவில் அரசு உப்பு விற்பனை செய்த 3 கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிக அளவில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்த 3 விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 27 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கலா ஷேத்ரா பரதநாட்டிய குழு வினர் மற்றும் மங்கள இசை குழுவினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் செல்வம் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் ராஜேந்திரன், வேளாண் மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், கிருஷ்ண கிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் சுந்தரவடிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலையரசி, துணைப்பதிவா ளர்கள் குமார், சுந்தரம், செல்வம், தாசில்தார் மகேஸ் வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது பையாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஓம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராம்கி (வயது 30). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் நடந்து விவகாரத்து ஆன நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய ஆன்லைனில் மணமகள் தேடி பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த நேதர்லாந்தில் நர்சாக பணிபுரியும் ஒரு பெண் இவரிடம் தொடர்பு கொண்டு ரூ. 1000 மில்லியன் யூரோ பணம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்தார். அதற்காக நாணய மாற்று கட்டணங்களை செலுத்த ரூ.6 லட்சம் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்ப சொன்னார். அதன்படி இதனை நம்பி சுந்தர் ராம்கி ரூ.6 லட்சத்தை பணத்தை அவருடய வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. தொடர்ந்து முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ராம்கி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதேபோல் ஓசூர் அருகே உள்ள பாகலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவிபூர்ணிமா. இவரது செல்போனில் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கூகுள் வரைபட பணி மூலம் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.11,20,156 வங்கி கணக்கின் மூலம் அனுப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூர்ணிமா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னக்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு வாட்ஸ்அப் மூலம் பகுதிநேர வேலையில் நல்ல வருமானம் இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.5,37,000 பணத்தை அனுப்பினார். பின்னர் அவரை தொடர்பு கொண்டபோது அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கிருஷ்ணகிரி அருகே 2 மகன்களுடன் தாய் மாயம் ஆனார்.
- போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சையதுல்லா (வயது 43) இவரது மனைவி பூஜீயா(38) இவர்களுக்கு 12 வயதில் மற்றும் 7 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். சையதுல்லா அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பூஜீயாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ந் தேதி தனது இரு மகன்களை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்லவில்லை. பூஜீயா மற்றும் 2 மகன்கள் குறித்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சையதுல்லா அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு மகன்களுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.
- பூட்டிய வீட்டுக்குள் தாய் மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
- தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியே சேர்ந்தவர் ராஜம் (வயது 85).
இவரது மகன் அன்பழகன் (67). கூலித்தொழிலாளியான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி என்பவருடன் திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் அன்பழகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
உடல் நிலை சரியில்லாத தாய் ராஜத்துடன் அன்பழகன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு தூக்கி கொண்டிருந்தனர். அப்போது அன்பழகன் வீட்டில் இருந்து திடீரென்று புகையுடன் கூடிய தீயில் கருகிய துர்நாற்றம் வீசியது.
இதனால் அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் அடைந்து உடனே நாகரசம்–பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது தீயில் உடல் கருகிய நிலையில் தாய் ராஜமும், அவரது மகன் அன்பழகனும் பிணமாக கிடந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நாகரசம் பட்டி போலீசார் விசாரித்தனர்.
இதில் உடல் நிலை சரியல்லாமல் கிடக்கும் தாயையும், தன்னையும் சரிவர கவனிக்க ஆட்கள் இல்லாததால், மன வேதனையில் அன்பழகன் தனது உடலிலும், தனது தாயின் உடலிலும் மண்எ ண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே விபத்தில் பலியானவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குருபராத்தப்பள்ளி கிராமத்தின் எதிரே உள்ள ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் ஆண் ஒருவர் சாலையை கடக்க முயச்சித்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் வாகனம் மோதி சம்பவ இடத்திலே இறந்ததார்.
இறந்தவர் உடல்மீது பல்வேறு வாகனங்கள் எரி சென்றதால் உடலில் இருந்து பாகங்கள் நசுங்கி சிதைந்து உருகுலைந்து காணப்பட்டு கிடந்தது. இதை அறிந்த நெடுஞ்சாலை போலீசார் மீட்பு வாகனம் மற்றும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் சிதறிகிடந்த உடல் பாகங்களை சேகரித்து எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்ததில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் கம்பெனியில் பணியாற்றும் வடமாநில தொழிலாளியா? அல்லது இப்பகுதியைச் சேர்ந்தவரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






