search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டிற்குள் தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை
    X

    பூட்டிய வீட்டிற்குள் தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை

    • பூட்டிய வீட்டுக்குள் தாய் மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
    • தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியே சேர்ந்தவர் ராஜம் (வயது 85).

    இவரது மகன் அன்பழகன் (67). கூலித்தொழிலாளியான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி என்பவருடன் திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் அன்பழகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    உடல் நிலை சரியில்லாத தாய் ராஜத்துடன் அன்பழகன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு தூக்கி கொண்டிருந்தனர். அப்போது அன்பழகன் வீட்டில் இருந்து திடீரென்று புகையுடன் கூடிய தீயில் கருகிய துர்நாற்றம் வீசியது.

    இதனால் அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் அடைந்து உடனே நாகரசம்–பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது தீயில் உடல் கருகிய நிலையில் தாய் ராஜமும், அவரது மகன் அன்பழகனும் பிணமாக கிடந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நாகரசம் பட்டி போலீசார் விசாரித்தனர்.

    இதில் உடல் நிலை சரியல்லாமல் கிடக்கும் தாயையும், தன்னையும் சரிவர கவனிக்க ஆட்கள் இல்லாததால், மன வேதனையில் அன்பழகன் தனது உடலிலும், தனது தாயின் உடலிலும் மண்எ ண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×