என் மலர்
நீங்கள் தேடியது "ஆண் உடல்"
- கிருஷ்ணகிரி அருகே விபத்தில் பலியானவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குருபராத்தப்பள்ளி கிராமத்தின் எதிரே உள்ள ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் ஆண் ஒருவர் சாலையை கடக்க முயச்சித்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் வாகனம் மோதி சம்பவ இடத்திலே இறந்ததார்.
இறந்தவர் உடல்மீது பல்வேறு வாகனங்கள் எரி சென்றதால் உடலில் இருந்து பாகங்கள் நசுங்கி சிதைந்து உருகுலைந்து காணப்பட்டு கிடந்தது. இதை அறிந்த நெடுஞ்சாலை போலீசார் மீட்பு வாகனம் மற்றும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் சிதறிகிடந்த உடல் பாகங்களை சேகரித்து எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்ததில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் கம்பெனியில் பணியாற்றும் வடமாநில தொழிலாளியா? அல்லது இப்பகுதியைச் சேர்ந்தவரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






