search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் விதிப்பு
    • கடை உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், சுந்தரமூர்த்தி, கிரி, மோகன், ரமேஷ் உள்ளிட்ட துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியா ளர்கள், ஓசூரில் நாமால்பேட்டை, ஜனப்பர் தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகள் மற்றும் பஸ் நிலையம் எதிரில் உள்ள 2 பூ மார்க் கெட்டுகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகள் பயன்பாட்டில் உள்ளதா? என நேற்று அதிரடி சோத னை மேற்கொண்டனர்.

    இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்ததாதகவும், பயன் பாட்டில் வைத்திருந்த தாக வும் 26 கடைகளில் மொத்தம் 122 கிலோ தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு கிலோவுக்கு ரூ 1,000 வீதம் 1,22,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

    அதே போல், மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்க ளுக்கும், வாகன ஓட்டிக ளுக்கும் இடையூறு ஏற்படுத் தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×