என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் :தம்பிதுரை எம்.பி. பேச்சு
- தம்பிதுரை எம்.பி. குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
- மாணவ, மாணவி யருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.பி.பி.எஸ் (2023 - 2024 பேட்ச்) மாணவ, மாணவி யருக்கு வெள்ளை அங்கி (ஒயிட் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. ஓசூர் அதியமான் கல்லூரி உள் விளையாட்ட ரங்கில் நடந்த விழாவில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வ கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி நிறுவ னத்தின் நிறுவனர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழா வில் அவர் பேசியதாவது:-
மருத்துவ துறையில், சேவை புரிவது மிகவும் முக்கியமானது.விழாக்களில் குத்து விளக்கேற்றி வைப்பதில் ஒரு புனிதம், அர்த்தம் உள்ளது. வாழ்க்கை யில் மேல் நோக்கி செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே, குத்து விளக்கு ஏற்றப்ப டுகிறது. மாணவர்கள் நன்கு படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும். வாய்ப்புகளை தவற விடக்கூடாது. உங்கள் வாழ்க்கை, தீபச்சுடரை போன்று மேல்நோக்கி செல்ல வேண்டுமே தவிர, கீழ்நோக்கி செல்லக்கூடாது. நீங்கள் எந்த படிப்பு படித் தாலும் சரி, உங்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து, நல்ல வாய்ப்புகளை பயன்ப டுத்திக் கொண்டு வாழ்க்கை யில் முன்னேற வாழ்த்து கிறேன்.
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். 5 ஆண்டுகள் முழு கவனம் செலுத்தி படியுங் கள். உங்களுக்கு தேவையா னவற்றை கல்லூரி நிர்வா கம் செய்து தரும்" இவ்வாறு அவர் விழாவில் பேசினார். தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கியும், படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங் கள் ஆகியவற்றை வழங்கி னார். விழாவில், மனநல மருத்துவர் கண்ணன் கிரிஷ், மாணவ, மாணவி யருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். முன்ன தாக டீன் சோமசேகர் வரவேற்றார்.
மருத்துவ இயக்குனர் ராஜா முத்தை யா முன்னிலை வகித்தார். விழாவில், செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி அறங்கா வலர் டாக்டர் பானுமதி தம்பிதுரை, செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, டாக்டர் நம்ரதா தம்பிதுரை, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ஆனந்தரெட்டி, இருப்பிட மருத்துவர் பார்வதி, முன்னாள் அமைச் சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், மனோகரன், அதியமான் பொறியியற் கல்லுாரி முதல்வர் ஜி.ரங்கநாத், வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் பள்ளி குழும அறங்காவலர் கூத்தர சன், மற்றும் அறங்காவலர் சுரேஷ், ஆடிட்டர் மணி ஆகியோர் கலந்து கொண்ட னர்.






