என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி அருகே நீர்பிடிப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை மீட்க கோரிக்கை
- நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
போச்சம்பள்ளி அருகே உள்ள தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாதிநாயக்கன்பட்டி கிராம ஏரி, 36.6 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு நிலங்களில் பலர் வீடுகள், மாட்டுகொட்டகைகள் கட்டியுள்ளனர். மேலும் இப்பகுதியில் பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.
ஏரியின் மொத்தப் பரப்பில் உள்ள நிலங்களில், சுமார், 10 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கிராமசபை கூட்டத்தில் மனு அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், நீர் பிடிப்புகளின் நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்பால், விவசாயிகள் நீரை சேமித்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கோடை காலங்களில் விவசாயத்திற்கும், கால்நடை பராமரிப்பிற்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் விசாரித்து தாமோதரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாதிநாயக்கன்பட்டி ஏரி நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, விவசாயி கள் தேவைக்காக ஏரிக்கு கரை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பில்லாரி அக்காரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை( 21) இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து பெற்றொர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ஏழுமலை கடந்த 24ந்தேதி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று ஒசூர் அலச நத்தம் பகுதியை சேந்தவர் சீனிவாசன்(49) மீன் வியாபாரி.
இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சீனிவாசன் 23ந்தேதி விஷம் குடித்தார். அவரை மீட்ட உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அக்கோ போலீசார், அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் வைரமணி(63) இவருக்கு குடிபழக்கத்துக்கு அடிமையானவர்.
இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16 ந்தேதி மீண்டும் வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுக்கவே விஷம் குடித்தார். அவரை மீட்ட உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று பாரூர் அரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(29) இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சல் அடைந்த விக்னேஷ் கடந்த 22ந்தேதி விஷம் குடித்து அதே பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை போலீசா ருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மகாராஜாகடை முனிய ப்பன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு பதுக்கி வைக்கப்ப ட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று சிக்கியது.
இதனையடுத்து நாட்டு துப்பாக்கி வைத்திருந்தாக நலகொண்டப்பள்ளி பகுதியை சேர்்ந்த ராஜவேலு( வயது37) மற்றும் பழையபேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(43) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக இவர்கள் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தனர். அவர்களது நோக்கம் என்ன என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கிருஷ்ணகிரியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் துடுகனஅள்ளி பக்கமுள்ள திம்மராயனள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவர் கே.ஆர்.பி. அணை போலீஸ் நிலைய எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் அண்டு ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதி க்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையாததால் திம்மநாயனஅள்ளியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் இருந்த மரத்தில் கடந்த 25-ந் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் காவேரி கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் 2பேர் கைது
- போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்று முனதினம் அந்த ஸ்பா சென்டரில் சோதனை செய்தனர். அதில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்பா சென்டரை நடத்தி வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த முகமது, செந்தில்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது
- உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்.
ஓசூர்:
ஓசூர் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையறுகே நிலா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக அறிவியல் அறிஞர் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சிறகை விரி சிகரம் தொடு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பூமியிலிருந்து 400 கி.மீ தூதரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுள் காலம் விரைவில் முடிவடைகிறது.
அதனால் புதிதாக அமைக்க வேண்டிய சர்வதேச விண்வெளி மையத்தை நிலவில் ஆரம்பிப்போம் என நான் பல இடங்களில் கூறி வருகிறேன். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலவுக்கு விரைவாகவும் சிக்கனமாக போக முடியும். அனைத்து நாடுகளும் இணைந்து இதனை செய்தால் சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பூமிக்கு தேவையான எரிபொருட்களை அங்கிருந்து சிக்கனமாக கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பூமியை துல்லியமாக அறிவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் நிசார் ஆகும், நாசா இஸ்ரோ சிந்தடிக் அப்பர்சர் ரேடார் என்று சொல்லக்கூடிய அதன் கடைசி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலமாக பூமியில் இயற்கை வளங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளை துல்லியமாக பார்ப்பதற்கான வாய்ப்பை இந்த கலன் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். சந்திரன் 3 பிரக்யான் ரோவர் உயிர்ப்பித்தாலும் விக்ரம் லேண்டர் வழியாகத்தான் செய்தி பரிமாற்றத்தை கொடுக்க முடியும். பூமிக்கு இன்னும் புதிதாக செய்திகள் வரும் என்ற நம்பிக்கை இனிமேல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது அங்கு உயிர்கள் உள்ளதா என ஆராய்ச்சியில் ஈடுபட்டால் சந்திராயன் 3ல் அனுப்பி உள்ள கலனில் இருந்து பூமியை நோக்கி அனுப்பும் சமிக்கைகள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
- கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் ஆனார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள சிவம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மகள் சுமதி(41) அவர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்ப தாவது:-
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள சுன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவ ருக்கு எனது மகள் சந்தியா (24) என்பவரை சில ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தோம். அவருக்கு 4 வயதில் ஒரு குழத்தையும், ஒன்றரை வந்தில் ஒரு பெண் குழந்தை யும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ந்தேதி சிவம்பட்டி யில் நடந்த பூங்காவனத்து அம்மன் கோவில் திருவிழா வுக்கு பேரக்குழந்தைகளு டன் சந்தியா வந்திருந்தார்.
திருவிழா முடிந்து 25ந்தேதி மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தனது மகள் மற்றும் பேரக்குழந்தை களை தருமபுரி செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இரவு ஆகியும் எனது மகள் சுன்னம்பட்டி வரவில்லை என்று எனது மருமருகன் மகாலிங்கம் போன் செய்து வரவில்லை என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சந்தியா மற்றும் குழந்தை களை பல இடங்களில் தேடியும் அவர் எங்கே சென்றார் என்று தெரியவி ல்லை. நான் விசாரித்ததில் எனது மகள் சந்தியா பாரூரை சேர்ந்த வாசுதேவன் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் அவருடன் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
ஆகவே எனது மகள் மற்றும் பேரக்குழந்தை களை தேடி கண்டுப்பிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி இறந்தார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் சுப்பிரமணி( வயது45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 21ந்தேதி அன்று வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்து வந்து ஊத்தங்கரை தனியார் மில் அருகே குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
அதனை கண்ட அந்த பகுதி மக்கள் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சுப்பிரமணியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர் மேற்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சுப்பிர மணியின் தாய் பூங்கொடி அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே முதியவர் தூக்குப் போட்டு இறந்தார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சுடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது65). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அது அவருக்கு பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப் பட்ட அவர் சம்பவத்தன்று தும்மனஅள்ளி பகுதியில் உள்ள மல்லிகை தோட் டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ண கிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தாய், குழந்தை உயிரிழந்தனர்.
- குழாயில் தண்ணீர் திறந்து விட்டபோது சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் முனி யாண்டி இவரது மனைவி மீனா(26) இவர்க ளுக்கு இரண்டரை ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் நடை பெற்று ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று, வீட்டில் மீனா தனது குழந்தையை இடுப் பில் வைத்து கொண்டு பெரிய தண்ணீர் தொட்டி யில் ஏறி குழாயை திறந்து தண்ணீர் விட்டுள்ளார்.
அப்போது இதில் தாயும், குழந்தையும் நிலை தடுமாறி தவறி தண்ணீர் தொட் டிக்குள் விழுந்து உயிரிழந்த னர். இது குறித்து முனி யாண்டி அளித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீ சார் விரைந்து சென்று உடல்களை கைபற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் சுப்ரமணியம்.
இவரது வீட்டின் அருகில் பழமையான பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பழமையான ஐம்பொன்னால் ஆனா கிருஷ்ணர் சிலையும், அம்மன் சிலையும் வைத்து வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை இரவு ஆள் நடமாட்டம் இல்லாத வேளையில் கோவிலில் இருந்த சாமி சிலைகள், கோவில் உண்டியல் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியவைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து கிராம மக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுப்ரமணியத்தின் பக்கத்து நிலத்துக்காரரான சேகர் என்கிற சொட்டை சேகர் என்பவர் கொள்ளை சம்பவம் நடந்த நாளில் இருந்து ஆள் தலைமறைவாக இருப்பதால், அவர் கோவிலில் கொள்ளையடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் கிராம மக்களிடையே எழுந்தது.
பின்னர் அவரை சந்தேகித்த கிராம மக்கள் அவரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் சேகர் நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் இருந்ததைக் கண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் சுப்பிரமணியத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த சுப்பிரமணியம் மற்றும் கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை மத்தூர் அடுத்த புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள அருணாச்சலம் என்பவரது வீட்டிலும், இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சேகரின் உறவினர்கள் வீட்டில் அந்த சாமி சிலைகள், பூஜை சாமான்கள் மற்றும் சிலைகளை அவர் கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கிராம மக்கள் சரக்கு ஆட்டோவில் வந்து புளியான்டப்பட்டி கிராமத்தில் அவர் கூறிய வீடுகளுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது பூஜை சாமான்கள் மட்டுமே இருந்தது. சிலைகளை காணவில்லை.
மேலும் சாமி சிலைகளை வேறு எங்கோ மறைத்து வைத்துள்ளதாகவும் சேகர் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனால், சேகரை அழைத்து கொண்டு அவர் தெரிவித்த இடங்களில் சரக்கு ஆட்டோவில் கிராம மக்கள் சென்று சிலைகளை தேடி வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
- நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான பெங்களூர் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர் மதகுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்தது. இன்றும் அதேஅளவு தண்ணீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,120 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனிடையே பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் அணைக்கு வரும் வரும் நீர், ரசாயன கலவையுடன் நுரையும் நுங்குமாக துர்நாற்றத்துடன் பொங்கி வருகிறது.
அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.






