என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியுடன் தனியார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- புத்தகங்களை வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலமாக எம்.ஜி.ஆர் கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- போட்டித்தேர்வுகளில் எளிதான முறையில் தேர்ச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியுடன் வெராண்டா லெர்னிங் சொலியுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வெராண்டா ரேஸ் ஒசூர் கிளையின் தலைவர் ஆர்.வி.ரங்கராஜன் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தை வெளி யிட,எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி பெற்றுக்கொண்டார். இதன்மூலம் மாணவர்கள் டிஎன்பிசி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வுகள், ரெயில்வே மற்றும் இன்சூரன்ஸ் போன்ற மத்திய மாநில அரசு போட்டித்தேர்வுகளில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு ண்டான புத்தகங்களை வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலமாக எம்.ஜி.ஆர் கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்த கங்கள் அனைத்தும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுகளில் எளிதான முறையில் தேர்ச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்ச்சியின்போது, எம்.ஜி.ஆர் கல்லூரி கணிதத்துறைத் தலைவர் மயில்வாகனன், நூலகத்துறை பேராசிரியர் சரவணமுத்து மற்றும் வெராண்டா ரேஸ் ஒசூர் கிளையின் மேலாளர் கோகுலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.






