என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி கோபித்து கொண்டு சென்றதால் கணவன் தற்கொலை
- அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
- மனம் உடைந்த ஏழுமலை தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்ர ஓசூர் கோவிந்து அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32) இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 24ந்தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு ஏற்பட்டது இதில் கோபித்து கொண்டு தேவி குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு தனது தாய் வீடு உள்ள பெங்களூரு சென்று விட்டார். மனைவி மற்றும் தன்னை விட்டு பிரிந்து போனதால் மனம் உடைந்த ஏழுமலை தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் இது குறித்து ஒசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






