என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • நவீன்குமார் MC அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து இன்று நாகர்கோவில் வடசேரி பாரத ஸ்டேட் வங்கி முன்பு வைத்து நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் MC அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.

    ஆகையால் காங்கிரஸ் பேரியக்க மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் வார்டு தலைவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    • மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியரை பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    அறக்கட்டளை தலைவர் திரு. முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சந்திரசேகர், மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் திரு. யூசுஃப் கான் மற்றும் காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    களியக்காவிளை :

    மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணா மலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
    • மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பறக்கின் கால் பகுதியில் கிடந்த கழிவுகளை அகற்றினர்.

    நாகர்கோவில், நவ.14-

    நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டு இடலாக்குடி பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாயுடு ஆஸ்பத்திரி பின்புறம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயில் புதர்கள் மண்டி, குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்கி தண்ணீர் சீராக செல்லவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த கால்வாயை மேயர் மகேஷ் பார்வை யிட்டார். கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். பறக்கின்கால் பகுதியில் குப்பைகள் நிரம்பி சுகாதார சீர்கேடாக காணப்பட்டதோடு, மதுபாட்டில்களும் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தது. அவற்றை உடனே அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பறக்கின் கால் பகுதியில் கிடந்த கழிவுகளை அகற்றினர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட பள்ளவிளை, சானல்கரை பகுதியில் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டிலும், 6 -வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், உதவி பொறியாளர் ராஜ சீலி, சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, பகவதி பெருமாள், தொழில் நுட்ப உதவியாளர் பத்மநாபன், வடக்கு மண்டல தலைவர் ஜவஹர், கவுன்சிலர்கள் அமல செல்வன், சொர்ணதாய், பகுதி செயலாளர் ஷேக்மீரான், வட்ட செயலாளர்கள் பிரபாகரன், பீட்டர் ரெமிஜூஷ், எம்.கே.ராஜன், சாகுல், அன்சாரி மற்றும் பகுதி செயலாளர்கள் துரை, ஷேக்மீரான், தொண்டரணி ராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில், நவ.14-

    குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் மற்றும் சர்வதேச குழந்தைகள் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவிகள், ஹோலிகிராஸ் கல்லூரி உள்ளிட்ட தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி பால சுப்பிரமணியன், சமூக நலத்துறை அதிகாரி சரோ ஜினி, குழந்தைகள் அலுவலர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.
    • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 -வது பிறந்த நாள் விழா கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் நடைபெற்றது.

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், பேரூர் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மரிய அருள் தாஸ், கிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேரளா வில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலா னவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரி சலை தவிர்க்க கோவி லின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.

    இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • மன வேதனையில் இருந்த ஜேம்ஸ் அளவுக்கு அதிகமாக குடித்து குடித்து வந்துள்ளார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி, நவ.14-

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 58), மரம் வேலை செய்யும் தொழிலாளி. இவரது 4-வது மகன் ஜெபன் விக்னேஷ் (27) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன வேதனையில் இருந்த ஜேம்ஸ் அளவுக்கு அதிகமாக குடித்து குடித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜேம்ஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூட்டை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
    • ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரம்

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளையை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 32). இவர் பெங்களூரூவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    பெற்றோர் இறந்து விட்டதால் வீட்டில் கார்த்திக் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 9-ந் தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூர் சென்று விட்டார். தீபாவளி பண்டிகையை கொண்டாட கார்த்திக் சம்பவத்தன்று ஊருக்கு வந்தார்.

    வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே சென்ற அவர், அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அந்த கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பதும் தெரிய வந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    • விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மணவாளக்குறிச்சி :

    கூட்டுமங்கலம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தாளாளர் ரெஜீஷ் கிருஷ்ணன் மற்றும் முதல்வர் தங்கசுவாமி முன்னிலை வகித்தனர்.

    நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் அஞ்சனா, ஏ.டி.எஸ்.பி.க்கள் சகாயஜோஸ், மதியழகன், டி.எஸ்.பி. நாராயணன், தனியார் பள்ளி டி.இ.ஒ. முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். பெங்களூரூ தனியார் நிறுவன டைரக்டர் அஷ்வின் ராம்நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பத்மஸ்ரீ, ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் பொன்னுலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவலிங்கம், துணை தலைவர் கிரி, சட்ட ஆலோசகர் பிரேம்ஜித் கவுதம், அஜய்குமார், சாய்கு மார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • 18-ந்தேதி நடக்கிறது
    • கேரள பஞ்ச வாத்தியங்களோடு வானவேடிக்கையுடன் சூரசம்ஹாரவிழா நடைபெற உள்ளது.

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம், வேலவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்பு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர்.

    வருகிற 18-ந்தேதி செக்கர்கிரி மலையில் வேலவன் பல்லக்கில் எமுந்தருளல், பின்பு போர் கோல முருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்து எழுந்தருளி அதிர்வேட்டு முழங்க, கேரள பஞ்ச வாத்தியங்களோடு வானவேடிக்கையுடன் சூரசம்ஹாரவிழா நடைபெற உள்ளது.

    இரவு வெற்றிவேலவன் மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வருகிற 19-ந்தேதி வேலவன் ஆராட்டுக்கு எழுந்தருளல், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை, வேலவன் பச்சை சாத்தி எழுந்தருளுதல், சிறப்பு அன்னதானம் ஆகியவைகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழு செய்து வருகிறது.

    • அவரது கையில் “விவேக் லவ்” என்று பச்சை குத்தி இருந்தார்.
    • சுமார் 5 அடி உயரம் உடைய அவர் சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து இருந்தார்

    கன்னியாகுமரி :

    தோவாளை அருகே உள்ள வெள்ளமடம் பகுதி யில் ஏராளமான திருநங்கை கள் தங்கி யிருக்கிறார்கள். அவர்கள் கன்னியாகுமரி உள்பட பல்வேறு இடங்க ளுக்கு சென்று தர்மம் எடுத்து பிழைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    சுமார் 5 அடி உயரம் உடைய அவர் சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அவரது கையில் "விவேக் லவ்" என்று பச்சை குத்தி இருந்தார்.

    இதற்கிடையில் அங்கு வந்த ஒரு சில திருநங்கைகள் அவரை காட்டு ராணி என்று அழைப்பதாக கூறினார்கள். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.

    ×