என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதங்கோட்டில் கடையில் பதுக்கி புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
    X

    மருதங்கோட்டில் கடையில் பதுக்கி புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    • கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பகுதியில் பள்ளியின் அருகாமையில் உள்ள கடைகளை மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருதம்கோடு குந்நுவிளையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது44) என்பவது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவரது கடையில் ரூ6,845 மதிப்பிலான புகையிலை பொருட்களை செய்த போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    Next Story
    ×