என் மலர்
கன்னியாகுமரி
- தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
- சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரி :
கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்த வர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர்சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.
இங்கு மேஜையில் இருந்த ரூ.94 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து நயினார் குமார், மதுபான கூடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா வின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை திருடியது தெரிய வந்தது.
இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த அந்தோணி சவரி முத்து (45), களக்காட்டைச் சேர்ந்த சந்திரன், ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் (40) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
- வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
- கல்குளம்
கன்னியாகுமரி :
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் பணியா ளர்கள், பார்வதிபுரம் பகுதி யில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினி வேனை நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் அதிவேகமாக சென்றது.
உடனே அதிகாரிகள் அந்த வேனை விரட்டிச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தோட்டியோடு என்னுமி டத்தில் வேனை மடக்கினர். அப்போது வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
பின்னர் அதிகாரிகள் வேனை சோதனை செய்த னர். அப்போது அதில் நூதனமாக மறைத்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப் படுவது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4 டன் ரேஷன் அரிசி வேனில் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி, தமிழ் நாடு அரசு உணவு பொருள் வாணிப கழக உடையார் விளை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வேன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரேசன் அரிசி கடத்தியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
- சொத்து குவிப்பு புகார் எதிரொலி
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2011 முதல் 2016 வரை ஆளுர் பேரூராட்சி தலைவியாக இருந்தார்.
அப்போது வருமா னத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லதா சந்திரன் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டேர்தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் நேற்று லதா சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். அப்போது அவரது கணவர் மற்றும் 2 மகன்களும் இருந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
பீரோவில் இருந்து ஆவணங்களையும் சரி பார்த்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 2.30 மணி வரை நடந்தது. 8½ மணி நேரம் நடந்த இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றி னார்கள். அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆவணங்களை யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். லதா சந்திரன் குறிப்பிட்டுள்ள வரவு-செலவு கணக்கு எவ்வளவு? என்பதை கணக்கிட்டு ஆவணங்க ளில் உள்ள தகவல்க ளையும் சரிபார்த்து வருகிறார்கள். இதை வைத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விதிமுறைகளுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட இயக்க மேலாண்மையின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகளுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பயனாளிகள் கண்டிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு ஏ அல்லது பி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண் டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறு தானிய உணவு உற்பத்தி மற்றும், சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உறபத்தியாளர் குழு, கூட்டமைப்பு ஆக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிற்றுண்டி நடத்திட ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் இணை இயக்குநர் (அல்லது) திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக இணைப்பு கட்டிடம் (2-வது தளம்), கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர் கோவில்-629001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
- கொட்டாரத்தில் இன்று காலை நடந்தது
- கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் முழுக்க முழுக்க விவசாய பாசன பகுதி நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு ஆயிரக்க ணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிர் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி, கும்பபூ சாகுபடி ஆகிய இரு சாகுபடிகள் நடந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி தொடங்கி உள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியி லும் கன்னிபூ சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கன்னி பூ சாகுபடி பாசன வசதிக்காக பேச்சிப் பாறை அணை கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி திறக்கப் பட்டது.
ஆனால் தோவாளை சானலின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப் பிளாக்புரவு பகுதிக்கு இதுவரை சரியாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் கொட்டா ரம் ஜேக்கப் பிளாக் கடை வரம்பு பகுதி விவசாயிகள் கன்னிபூ சாகுபடிக்காக நெல் விதைகளை வயல்களில் விதைக்க முடியாமல் பரித வித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து தோவாளை சானலின் கடைவரம்பு பகுதியான ஜேக்கப் பிளாக் புரவு பகுதிக்கு விவசாய பாசனத் திற்காக தண்ணீர் திறந்து விட கோரி இன்று காலை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே நடு ரோட்டில் நெல் விதைகளை வீசி "திடீர்" என்று போராட்டம் நடத்தினார்கள்.
இதில் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் பெருமாள் நாடார் மற்றும் விவசாயிகள் பாலசுப்பிரமணியம், லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் நடுரோட்டில் நெல்மணி விதைகளை வீசி போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வழங்கினார்
- 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக இன்று காலை கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அ மைச்சர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக இன்று காலை கொண்டாடப்பட்டது. விழாவில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். காமராஜரின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து 500 மாணவ- மாணவிகளுக்கு காமராஜர் பிறந்த நாள் விழாவை யொட்டி மாலைமலர் வெளியிட்ட சிறப்பு புத்தகத்தை ஒன்றிய செயலாளர் பாபு வழங்கினார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, துணைத் தலைவி விமலா, கவுன்சிலர் செல்வன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் பிரேம் ஆனந்த், தமிழ்மாறன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, முன்னாள் தலைமை ஆசிரியர் பால்நாடார், மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காமராஜர் திருஉருவ சிலைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
கர்மவீரர் பெருந்த லைவர் காமராஜர் அவர்களின் 121 - வது பிறந்தநாளை முன்னிட்டு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கலில் உள்ள காமராஜர் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலை வரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார்.எம்.எல்.ஏ. தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் அமாவாசை தினத்தன்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 17 மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் கடற்கரையில் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள். இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் ஜோதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகிறார்கள்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- செல்போன் பார்த்ததை தாயார் திட்டியதால் பரிதாபம்
- காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்.
கன்னியாகுமரி:
பூதப்பாண்டி அருகே உள்ள மேல ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவப்பிள்ளை. இவரது மகள் நிலா (வயது18).
இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் அவர் நள்ளிரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த அவரது தாயார் கண்டித்தார். இந்த நிலையில் இன்று காலை நிலா வீட்டின் பின்பகுதியில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், நிலா தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நிலாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
- பூங்காவை சீரமைக்க உத்தரவு
- பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தெரு இறுதியில் உள்ள வீட்டின் முன்பக்கம் நீர் உறிஞ்சி குழி அமைக்கவும், கழிவு நீரோடை மற்றும் கல்வெட்டு அமைக்கவும், பூங்காவிலுள்ள தண்ணீர் தொட்டியை பில்லர் போட்டு வைக்கவும் உத்தரவிட்டார். அந்த பகுதியில் உள்ள பூங்காவில் மின்விளக்குகள்அமைக்கவும், பூங்கா காம்பவுண்ட் ஓரம் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தை மக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடம் அமைக்கவும், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் முறையாக நீர் உறிஞ்சி குழி அமைத்து பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் ராணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ரூ.9 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.27 லட்சம் செலவில் குளத்தூர் காலனி பகுதியில் அலங்கார தரை கற்கள், பரசுராமன் தெருவில் தார்சாலை அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் ஒடை அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
- பரபரப்பு தகவல்கள்
- 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறி கீழப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46), பெயிண்டர். இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38).
இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு, ஸ்ரீதேவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். உஷாபார்வதி தரையில் பிணமாக கிடந்தார். 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பாபு கடந்த திங்கள்கிழமை தான் வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்து உள்ளார்.
அதன் பிறகு கடந்த 2 நாட்களாக வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே திங்கள்கிழமையே இவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறா ர்கள். பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேருக்கும் திருமணமாகாத நிலையில் உஷா பார்வதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பலியான 3 பேரின் பெற்றோரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர்களது உடலை ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உற வினர்கள் யாரும் வாரதால 3 பேரின் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
- கலெக்டர் ஆய்வு
- சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது.
கன்னியாகுமரி:
கொட்டில்பாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பழைய தேவாலயத்தின் தெற்கு பகுதியில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகும் சூழல் ஏற்பட்டதாக பங்குத்தந்தை, மீனவபிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் கொட்டில் பாடு கடலோர பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடல் நீரானது வீடுகளில் புகாமல் தவிர்க்கும் வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு அவசர கால நிதியின் கீழ் ரூ.20 லட்சத்தில் கடலரிப்பு தடுப்பு பணிகள் உடனடியாக மேற் கொள்ள ஆணை பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மீன்பிடித் துறைமுக கோட்ட செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், உதவி பொறியாளர் அரவிந்த்குமார், கொடில்பாடு பங்குத்தந்தை/ அருட்பணி ராஜ் உள்பட பலர் உடனினிருந்தனர்.






