search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே தனியார் மதுபான கூடத்தில் திருடிய ஊழியர் கைது
    X

    சுசீந்திரம் அருகே தனியார் மதுபான கூடத்தில் திருடிய ஊழியர் கைது

    • தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி :

    கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்த வர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர்சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.

    இங்கு மேஜையில் இருந்த ரூ.94 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து நயினார் குமார், மதுபான கூடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா வின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த அந்தோணி சவரி முத்து (45), களக்காட்டைச் சேர்ந்த சந்திரன், ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் (40) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது குறித்து சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×