என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம்.
    • குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது

    நாகர்கோவில் :

    தக்கலை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம். இந்த மருத்துவமனையின் பின்புறம் பிணவறை உள்ளது. அதனருகில் மருத்துவ மனை ஊழியர்கள் குப்பை கழிவுகள் போடுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை அந்த குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை கண்ட நோயாளிகள் பலர் ஓட்டம் பிடித்தனர்.

    இது பற்றி அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீயை அணைந்தனர்.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க. கவுன்சிலர் கூறும் போது, "தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுகளை அதற் கான குடியிருப்பு இல்லாத பகுதியில் கொட்டி எரித் தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அரசு இது குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தொழில் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்தார்.
    • நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்

    நாகர்கோவில்  :

    ராஜாக்கமங்கலம் பண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஐவின்ராஜா (வயது 25). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்தார்.

    தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று ஐவின்ராஜா வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆசாரி பள்ளம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் மீது ஐவின்ராஜாவின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை உடல் பகுதியில் பலத்த காயும் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐவின்ராஜா இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். ஐவின்ராஜா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான ஐவின் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர். விடு முறையில் ஊருக்கு வந்த நேரத்தில் ஐவின்ராஜா விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தி னர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்
    • தண்ணீரை பைப் லைன் வழியாக

    நாகர்கோவில் : ராஜாக்கமங்கலத்தில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழித்துறை குடிநீர் திட்டம் கடந்த 18 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் திட்டம் குழித்துறை ஆற்றில் இருந்து தண்ணீரை பைப் லைன் வழியாக கன்னியாகுமரி வரை கொண்டு செல்கிறது. இந்த குடிநீர் திட்ட பைப்புகள் அனைத்தும் சாலையின் நடுவே போடப்பட்டுள்ளது அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பைப்லைன் அனைத்தும் பல இடங்களில் பழுதடைந்து இருக்கிறது.

    குடிநீர் குழாய்கள் அடிக்கடி வெடித்து தண்ணீர் லீக் ஆவதால் அதில் குழிகள் தோண்டப்பட்டு அந்த சாலைகள் முற்றிலும் நாசமாகி வருகிறது. 18 வருடங்களுக்கு முன்னால் சுமார் ரூ.38 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பைப் லைனானது பழுதடைந்து குழித்துறை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மேற்கு கடற்கரை சாலை குண்டும் குழியுமாக பல இடங்களில் காணப்படுகிறது.

    இச்சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 4 மாதத்திற்கு முன்னால் ராஜாக்கமங்கலம் துறையில் பள்ளி மாணவி அதில் விழுந்து படுகாயம் அடைந்தவுடன் அதில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    இருப்பினும் அந்த சாலை சீராக செப்பனிடவில்லை. இதனால் குண்டு குழிகளில் விழுந்து 500-க்கும் அதிகமான இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாகி உள்ளனர். அடிக்கடி உயிர்களை பழிவாங்கும் இந்த குடிநீர் குழாய் திட்டத்தை பழுதுகளை செப்பனிடும் பணிக்கே சுமார் ரூ.10 கோடிக்கு மேல் செலவாகி உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து இதே பைப் லைனில் தண்ணீர் அனுப்பினால் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான பேர் இறக்க நேரிடும்.

    எனவே இந்த திட்டத்தை உடனடியாக அரசு சாலையின் அருகில் புதிய பைப் லைன் அமைத்து தண்ணீர் விட கோரி உள்ளார். மேலும் இந்தத் திட்டத்தை உடனே அரசு அறிவித்து பணிகளை தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை
    • உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை

    நாகர்கோவில் : அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அனிதா (45). இவர்களது மகள்கள் சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலிகா (16). சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டும், சகாய பூஜா மவுலிகா 11-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    நேற்று காலை இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகியோர் தூக்கில் தொங்கினார்கள்.

    இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அனிதா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை முடிவு எடுத்துக்கொள்வதாகவும் எனது மகள்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அனாதையாகி விடுவார்கள். எனவே அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்வதாக கூறியிருந்தார்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேர் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். 3 பேர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அனிதா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

    பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் தாம் இறந்து விடுவோம் என்று அச்சத்தில் இருந்து உள்ளார். இது குறித்து தனது மகள்களிடம் அனிதா தெரிவித்துள்ளார். தான் இறந்துவிட்டால் உங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைகளும் தாய் இறந்த பிறகு நம்மால் எப்படி வாழ முடியும் என்று நினைத்து அவர்களும் தாயின் முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து தான் 3 பேரும் ஒரே கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர். 

    • அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • சினிமாவில் வருவதுபோல் இந்த காட்சி அமைந்தது.

    நாகர்கோவில் ்: கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று அதிகாலை அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த டெம்போ அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. இது தொடர்ந்து பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலூர் பாதுகாப்பு குழும போலீசார் ஜீப் மூலம் அந்த டெம்போவை துரத்தி னார்கள். சினிமாவில் வருவதுபோல் இந்த காட்சி அமைந்தது.சினிமாவில் வருவதுபோல் இந்த காட்சி அமைந்தது.

    சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கன்னியாகுமரி அருகே உள்ள சங்கம்தேரி பகுதியில் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அதற்குள் அந்த டெம்போவில் இருந்து டிரைவர் குதித்து தப்பி ஓடி விட்டார்.

    அந்த டெம்போவை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அதில் 40 பண்டல் பீடி இலை கட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஒவ்வொரு பண்டலும் 35 கிலோ வீதம் மொத்தம் 1400 கிலோ பீடி இலை இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டெம்போவுடன் அந்த பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு இந்த பீடிஇலை பண்டலை கடத்தி சொண்டு செல்வதற்காக டெம்போவில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா போல் போலீசார் துரத்திச் சென்று இந்த டெம்போவை மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • பெண் செவிலியர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம்
    • அயல்நாட்டு வேலைவாய்ப்பு

    நாகர்கோவில் : குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சவுதி அரேபியா அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு தேவையான கல்வித்தகுதி 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21-35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் ஸ்டாப் நர்சு பணிக்காலியிடத்திற்கு தேவைப்படுகிறார்கள்.தேர்வு பெறும் பெண் செவிலியர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும், டேட்டா புளோ மற்றும் எச்.ஆர்.டி. சான்றி தழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், மேற்படி பணியாளர்களுக்கு உண வுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்வதற்கான முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோணம், நாகர் கோவிலில் வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (95662 39685, 63791 79200), (044-22505886, 044-22502267). இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. பதிவு மற்றும் பணி விவரங்களின் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாய்ப்பினை விண்ணப்பதாரர்கள் நேரிடையாக முகாமிற்கு வந்து பயன் படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

    • கன்னி பூ சாகுபடி பணியில் விவசாயிகள்
    • 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள்

    நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 6500 ஹெக்டேரில் இந்த ஆண்டு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் 5000 ஹெக்டேரில் மட்டுமே தற்போது சாகுபடி செய்யப் பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கடைமடை பகுதி மக்களுக்கு தண்ணீர் செல்ல வில்லை.இதனால் விவசாயிகள் பயிர் செய்த நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சானல்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். கலெக்டரை சந்தித்தும் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் சானல்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்தநிலையில் தற்போது கன்னிப்பூ சாகுபடி செய் யப்பட்ட 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. பறக்கை பகுதிகளில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் செண்பகராமன் புதூர், அஞ்சுகிராமம் பகுதிகளில் பயிர் செய்த நெற்பயிர்கள் தண்ணீர் கிடைக்காமல் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.செண்பகராமன் புதூர் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வயல்கள் வெடித்து காணப்படுகின்றன. இதனால் நெற்ப யிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் அஞ்சுகிராமம் பகுதியில் பயிர் செய்த நெற்பயிர்களுக்கு தண்ணீர் விலைக்கு வாங்கி பாய்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு பொதுப் பணித்துறை அதிகாரிகள் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதி களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதேபோல் சிற்றார் பட்டணம் கால்வாய் கடை மடை பகுதியிலும் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கக்கூ டிய நிலையில் உள்ளது. எனவே அந்த கால்வாயிலும் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    • அரசு பள்ளி ஆசிரியர் ‘சஸ்பெண்டு’
    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது

    நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரி டம் கூறினார்.இந்த நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நெல்லை மாவடட்டம் கூடங்குளம் மாடித்தோட்டம் பகுதியை சேர்ந்த பச்சைப் பூ ராஜா (41) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர்.

    இது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. புகாரில் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.ஆசிரியர் பச்சப்பூராஜா மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப் பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் ஆசிரியர் பச்சப்பூராஜாவை ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பச்சப்பூராஜாவை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • பரிதவித்த பெண்கள்-மாற்றுத்திறனாளி
    • பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தை அதிகளவு விரும்புகிறார்கள்.

    நாகர்கோவில்:பெண்கள் பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தை அதிகளவு விரும்புகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அதில் அவர்களுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய பெட்டிகள் ஒதுக்கீடு செய்வதே ஆகும்.எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரெயிலின் முன் பகுதியிலும், பின்பகுதியிலும் தனியாக ஒரு பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என ரெயிலின் பின்பகுதியில் பெட்டிகள் உள்ளது. இந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுடன் அவரது பாதுகாவலர்களும் பயணம் செய்து கொள்ளலாம். அனைத்து ரெயில்களிலும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் எப்பொழுதுமே கூட்டம் அதிகமாக காணப்படும்.சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த சிறப்பு ரெயிலிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில் இன்று காலை 7 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது. 2-வது பிளாட்பாரத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். ஆனால் ரெயிலின் பின் பெட்டி அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கப் பட்ட பெட்டி பிளாட்பாரத்திற்கு முழுமையாக வராமல் வெளியே இருந்தது.இதனால் அதிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பெட்டியை விட்டு இறங்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள். மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கு உதவியாக வந்தவர்கள் கீழே இறக்கி விட்டனர். அவர்கள் ரெயில் பெட்டியலிருந்து பிளாட்பாரத்தில் இறங்க முடியாததால் ரெயில்வே தண்டவாளத்தில் இறங்கி பிளாட்பாரத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் இருந்த பெண்கள் ரெயில் பெட்டியில் இருந்து குதித்து இறங்கி சென்றனர். முதியவர்களும் ரெயில் பெட்டியை விட்டு இறங்க முடியாமல் தவித்தனர். சிறுவர்கள், சிறுமிகளும் ரெயில் பெட்டியில் இருந்து இறங்க முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை அவரது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பெட்டியில் இருந்து கீழே இறக்கி விட்ட னர்.பிளாட்பாரத்தை விட்டு ரெயில் வெளியே நிற்பதற்கு மிக முக்கிய காரணம் இந்த ரெயிலில் அதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது காரணம் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 2-வது பிளாட்பாரம் மற்ற பிளாட்பாரங்களை விட நீளம் குறைவானதாகும். எனவே தான் ரெயில் வெளியே நின்றதாக கூறினார்கள்.இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரெயில்வே அதிகாரிகள் நீளம் அதிகம் உள்ள ரெயில்களை முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி பயணிகள் இறங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.பெங்களூர்-நாகர்கோவில் ரெயிலும் அவ்வப்போது 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படும் போது இதேபோன்று சம்பவங்கள் நடைபெறு வதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ரெயில்வே அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    • மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.
    • கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நெல்லை மாவட்டம் கூடங்குளம் மாடித்தோட்டம் பகுதியை சேர்ந்த பச்சப்பூராஜா (41) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர். இது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. புகாரில் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

    ஆசிரியர் பச்சப்பூராஜா மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் ஆசிரியர் பச்சப்பூராஜாவை ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பச்சப்பூராஜாவை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி ஆடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை புலி கொன்றதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்பட்ட இடங்களில் கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை.

    ட்ரோன் கேமரா, எலைட்படையினர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தினர். 10 நாட்களுக்கு மேலாக தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்துகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து 4 ஆடுகளை புலி கடித்துக் கொன்றது. இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கேயே முகாமிட்டு புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையை சேர்ந்த பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கல்லறைவயல் பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர்.

    இதைத்தொடர்ந்து புலியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. புலியை பொருத்தமட்டில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே சுற்றி தெரியும்.

    பகல் நேரத்தில் புலி குகைக்குள் சென்றதால், அது வெளியே வருவதற்கு நீண்ட நேரமாகும், அங்கேயே ஓய்வெடுக்கும் என்று வனத்துறையினர் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த குகையின் வெளியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டு மணி நேரமாக புலியை பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மயக்க ஊசி மூலமாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலி இருந்த குகைக்குள் மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி மயக்கமடைந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் குகைக்குள் சென்று புலியை பிடித்தனர்.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டுக்குள் அடைத்து டெம்போவின் ஏற்றி பேச்சிப்பாறை சோதனை சாவடிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். புலி பிடிபட்டது குறித்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    பிடிபட்ட புலி கடந்த 37 நாட்களாக வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சுற்றி திரிந்தது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து அதன் எதிர்புறம் உள்ள பத்துகாணி பகுதிக்கு புலி வந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே புலி சுற்றி திரிந்தபடி இருந்துள்ளது.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இரவோடு இரவாக வன அதிகாரி இளையராஜா தலைமையில் புலியை ஒரு வாகனத்தில் ஏற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    பலத்த பாதுகாப்புடன் புலி கொண்டு செல்லப்பட் டது. புலியை கொண்டு சென்ற வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறையிலிருந்து புலியை ஏற்றி புறப்பட்ட வாகனமானது, இன்று காலை 11 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு சென்றடைந்தது. அங்கு புலியை முறைப்படி ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தின் மலையோர பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரண்டு இடங்களில் கூண்டு மற்றும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் புலி சிக்கவில்லை.

    அதே வேளையில் புலியின் கால் தடங்கள் ஒரு சில இடங்களில் கிடைத் தது. அதை வைத்து பார்த்த போது வயதான புலி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்துகாணி பகுதியிலும் புலி அட்டகாசம் செய்தது. இதனால் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மதியம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. புலியும் கண்ணில் தென்பட்டது.

    உடனே அதை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தோம். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. குகைக்குள் சென்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளோம். பிடிபட்ட புலிக்கு 13 வயது இருக்கும். தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு
    • சமரச பேச்சுவார்த்தையால் நேற்று மாலை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சின்ன முட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு அந்த பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் புனித தோமையார் ஆலயம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்ட னர். அவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் நேற்று மாலை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக சின்ன முட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பெட்ரோல் பங்க் கட்டு மான பணிகளை தடுத்து நிறுத்த கோரி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து அங்கு இன்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களு டன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×