search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்
    X

    சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்

    • பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு
    • சமரச பேச்சுவார்த்தையால் நேற்று மாலை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சின்ன முட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு அந்த பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் புனித தோமையார் ஆலயம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்ட னர். அவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் நேற்று மாலை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக சின்ன முட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பெட்ரோல் பங்க் கட்டு மான பணிகளை தடுத்து நிறுத்த கோரி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து அங்கு இன்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களு டன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×