என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் கோரிக்கை
    • உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் உப்பளத்தில் கடந்த 30 வருடங்களாக மீன் சந்தை இயங்கி வருகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மீன் மற்றும் காய்கறிகள் இதர பொருட் களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்க ளுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அது தங்களுடைய சொத்து என்று ஆக்கிரமித்து அங்கு யாரும் செல்லக்கூடாது என ரோட்டோரத்தில் கால்வாய் தோண்டியுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த மீன் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு வசதியாக கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் அப்போ தைய எம்.எல்.ஏ. முருகேசன் தொகுதி வளர்ச்சி திட் டத்தின் கீழ் ரூ.2.52 லட்சம் மதிப்பில் கொட்டகை அமைத்து அதில் அப்பகுதி மக்கள் வியாபாரம் செய்து வருகின்ற னர். அந்த உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.

    அதனை 99 வருட குத்தகைக்கு ஒரு சிலருக்கு அரசு கொடுத்தது. குத்தகை காலமும் முடிந்து தற்போது குத்தகையையும் கொடுக்கவில்லை. இதை திடீரென இவ்வாறு ஆக்கிரமித்ததால் ஊராட்சி சார்பில் அங்கு தோண்டப்பட்ட குழிகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை நிரப்பி மீண்டும் அப்பகுதியில் வியாபாரம் நடக்கும் படி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் செய்துள்ளார். மேலும் மீண்டும் அரசு நிலத்தை ஆக்கிரமிக்காமல் இருக்கும் வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் சார்பில் அவர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    • சமுதாய நலக்கூடம் தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு வடசேரி சக்தி நகரில் சமுதாய நலக்கூடம் தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று சமுதாய நலக்கூடம் கட்டுவதுற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


    அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை நேற்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா, மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் உள்ளது
    • நிலம் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    நாகர்கோவில் :

    மார்த்தாண்டம் முஞ்சி றை திருமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய மகாதேவர் கோவி லுக்கு சொந்தமான கோவில் நிலங்களை தனி யார் கல்லூரி ஒன்று ஆக்கிர மித்து வைத்துள்ளது.

    இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் கோர்ட் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் (குமரி மாவட்ட கோவில்கள், சுசீந்திரம்) பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலையில் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    அப்போது கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், தொகுதி கண்காணிப்பாளர் சிவக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதீஷ்குமார், ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, தி.மு.க முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    • பணியில் இருந்த ஏட்டுக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக புகார்
    • சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடி வீஸ்வ ரன் தோப்பு வணிகர் தெரு வைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தேவி (வயது 22). குடி பழக்கத்திற்கு அடி மையான சதீஷ், அடி க்கடி தகராறு செய்து மனை வியை தாக்கியதாக கூறப்ப டுகிறது.நேற்று வடசேரி மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சதீஷ், தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுந்து வந்ததோடு தாக்குதலிலும் ஈடுபட் டுள்ளார். இதனை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ரோஸ்பின் ஜெபராணி, கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், மீண்டும் மனைவியை தாக்கியதோடு, போலீஸ் ஏட்டு ரோஸ்பின் ஜெப ராணியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு ரோஸ் பின் ஜெபராணி, போலீ சில் புகார் கொடுத்தார்.

    அதில், தான் பணியில் இருந்த போது, சதீஷ் அங்கு தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தார். இதனை நான் கேட்ட போது, கணவர் சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார். அப்போது சதீஷ் திடீரென மீண்டும் தேவியை தாக்கினார். இதனை நான் கண்டித்த போது, அவதூறாக பேசியதோடு, என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெசிமேனகா, குமார் ஆகியோர் விசாரணை நடத்தி சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மகளிர் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை தாக்கிய கணவர், போலீஸ் ஏட்டுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாழை தோட்டம் விவகாரத்தில் புகார் கொடுத்தும் 4 மாதமாக அலைக்கழிக்கப்படுவதாக வேதனை
    • இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எராளமானோர் வந்து மனுக்களை கொடுத்து வந்தனர். மனுக்கள் கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்தே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் மனுவுடன் வந்த பெண் ஒருவர், திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள், தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது அந்தப் பெண், தனக்கு சொந்தமான வாழை தோட்டம் தொடர்பாக கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 4 மாதம் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். அவரை சமரசம் செய்த போலீசார், அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் பெயர் ராதிகாகுமாரி என்பதும், மாங்கரை அருகே உள்ள கல்லுவிளை காட்டுவிளையைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி என்பதும் தெரியவந்தது.

    அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க கொண்டு வந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாலூர் தேசம் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் 350 வாழைகள் நட்டு விவசாயம் செய்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு, எனது கணவரின் தம்பி வின்சென்ட் அவரது மனைவி ஜெபராணி ஆகியோர் வந்தனர். அவர்கள் 150 வாழைக்குலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதுபற்றி நானும் கணவரின் சகோதரி லிசியும் சென்று கேட்டபோது, வின்சென்ட் அவதூறு பேசி கொலைமிரட்டல் விடுத்தார்.

    இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் கருங்கல் போலீசில் புகார் செய்தேன். தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு, ஆன்லைன் மூலம் வின்செண்ட் பற்றி புகார் அளித்தேன். இருப்பினும் கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வின்சென்ட் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காலை 6 மணிக்கு திருவிழா திருப்ப லியும், முதல் திருவிருந்து விழாவும் நடந்தது.
    • பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இது தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்த லங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெற்று வந்தது.

    இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம் பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது. இருப்பி னும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நேற்றுமுன் தினம் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் ஜெபமாலையும், மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடந்தது. 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு திருவிழா திருப்ப லியும், முதல் திருவிருந்து விழாவும் நடந்தது. பின்னர் மாலையில் நற்கருணை பவனி நடந்தது. இதை யொட்டி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பீடத்தில் இருந்து நற்கரு ணையை திருத்தல அதிபர் பங்குத்தந்தை உபால்டு தலைமையில் அருட்ப ணியாளர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் அந்த நற்கரு ணையை திருத்தலத்தின் முன்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டிருந்த ரதத்தில் வைத்து வீதிகளில் பேண்ட் இசை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். திருத்த லத்தின் முன்பு இருந்து புறப்பட்ட இந்த நற்கருணை பவனி ராஜசங்கீததெரு, ஜோசப் தெரு, சன்னதி தெரு, ரட்சகர் தெரு, அலங்கார மாதா தெரு வழியாக மீண்டும் திருத்தல முற்றத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பல வண்ண மலர்களால் கோலமிட்டு நற்கருணை பவனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நற்கருணை பவனியில் அருட்பணியா ளர்கள், பங்குமக்கள், அன்பியங்களை சேர்ந்த வர்கள், பக்த சபையினர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் திரளாக கலந்துகொண்டனர். இறுதியாக மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடந்தது.

    இதில் குளச்சல் வட்டார முதல்வர் கிளைட்டன் தலைமையில் அருட்பணி யாளர் மெர்லின், திருத்தலஅதிபர் உபால்டு, இணை பங்குத்தந்தையர்கள் நிக்சன், ஆன்றோ ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றி னார்கள். இதில் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் உபால்டு, பங்குப்பேரவை துணை தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது
    • ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நாடு முழுவதும் உலக சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று காலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. மாரத்தான் ஓட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார். பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் வைத்து சுற்றுலா துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகம்இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும் நினைவு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

    இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழாவையொட்டி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடக்கிறது. ஓட்டல் மற்றும் லாட்ஜூகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • போலீசார் முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடி வீஸ்வரம் சுப்பையா காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது சகோதரர் சக்தி மகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கோட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்த முருகன், தனது தாயுடன் வாழ்ந்து வந்ததும் 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்த பிறகு, தனியாக வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலை யால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஒரு சிலரது விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டது. அதற்கான தகவல் செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உரிய ஆவணங்களை காண்பித்து மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ள அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விவரங்கள் தெரிந்து கொள்ள நாகர் கோவில் கலெக்டர் அலு வலகம், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் தாலுகா அலுவல கங்களில் உதவி மையமும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.

    விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள உதவி மையங்களில் குவிந்து வருகிறார்கள்.வருமான வரி கட்டுதல், கார் மற்றும் ஏற்கனவே அரசு உதவித்தொகை பெரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கூட்டம் அலைமோதியது. இ- சேவை மையத்தில் மறு விண்ணப்பம் செலுத்து வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை முறை யாக தெரிவித்த பின் னர் மறுபடியும் விண்ணப்பிக்கப்பட்டது. இதனால் இ- சேவை மையத்தில் பெண்கள் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    • பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறு
    • வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் : 

    நாகர்கோவில் காமரா ஜபுரம் மர்ச்சினிவிளை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சகாயஜோஸ் (வயது 24), மினி பஸ் கண்டக்டர்.

    இவர் வடசேரி பஸ்நிலை யத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்த போது அங்கு வந்த மற்றொரு மினி பஸ்சின் கண்டக்டர் மற்றும் உரிமையாளர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

    இதுபற்றி வடசேரி போலீசில் சகாய ஜோஸ் புகார் செய்தார். அதில் சம்பவத்தன்று தான் பணியில் இருந்து பயணிகளை ஏற்றிய போது, அங்கு மற்றொரு மினிபஸ்சின் உரிமையாளர் கோவிந்தன், கண்டக்டர் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல், கொலை மிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன்களில் ஊர்வலமாக கொண்டு சென்றதால் பலத்த பாதுகாப்பு
    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஸ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், கடந்த 3 நாட்களாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டு வருகின்றன.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 108 விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று பிற்பகல் சுசீந்திரத்து க்கு கார், வேன், லாரி, மினிலாரி, டெம்போ, ஜீப், டிரக்கர் போன்ற வாக னங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

    அதன் பிறகு தாணுமாலய சுவாமி கோவில் முன்பு இருந்து இந்த சிலைகள் கன்னியாகுமரிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகன ங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். வழுக்கம்பாறை, ஈத்த ங்காடு, பொற்றையடி, மந்தாரம்புதூர், அச்சங்கு ளம், கொட்டாரம், பெருமா ள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு,

    பரமார்த்தலிங்கபுரம், பழத்தோட்டம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு வழியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையை ஊர்வலம் சென்றடைந்தது.

    அங்கு 108 விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாரதனை நடந்தது. அதன் பின்னர் முக்கடல் சங்கமத்தில் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் பூஜையில் வைத்திருந்த விநாயகர் சிலைகளையும் சிலர் குடும்பத்துடன் எடுத்து வந்து கன்னியாகுமரி கடலில் கரைத்தனர்.

    நெல்லை மாவட்டம் அம்பலவானபுரத்தில் இருந்து விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து நேற்று மாலை கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை கரைப்பை யொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்குள் இறங்கி நின்று விநாயகர் சிலையை பாதுகாப்பாக கரைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படைவீரர்களும் பாதுகா ப்பில் பங்கேற்றனர்.

    குருந்தன்கோடு, இர ணியல், இரணியல்கோணம், திங்கள்நகர், பிலாக்கோடு, ஊற்றுக்குழி, தலக்குளம், கீழவிளை உட்பட சுற்று வட்டார கோயில்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து மண்டைக்காடு நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை 11 மணியில் இருந்தே பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளத்துடன் அலங்கரி க்கபட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

    பின்னர் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து பக்தர்கள் ஆடிப்பாட ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மண்டைக்காடு பகுதியில் உள்ள கடலில் கரைக்க ப்பட்டது. ஊர்வலத்தை யொட்டி ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட கரு ங்கல், பாலப்பள்ளம், கிள்ளியூர், நல்லூர், உண்ணாமலைக்கடை, கீழ்குளம் பேரூராட்சிகள் மற்றும் பாலூர், மத்திகோடு, திப்பிரமலை, கொல்லஞ்சி, மிடாலம், நட்டாலம் போன்ற ஊராட்சி பகுதிகளில் கடந்த வாரம் 116 விநாயகர் சிலைகள் பூஜையில் வைக்கப்பட்டு இருந்தன.

    அவை வாகனங்கள் மூல மாக ஊர்வலமாக கருங்கல் கூனாலுமூடு தர்ம சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கிருந்து பாலூர், திருஞானபுரம், மா ங்கன்றுவிளை, மங்கலக்கு ன்று, தேவிகோடு, உதயமா ர்த்தாண்டம் வழியாக மிடா லம் கடற்கரைக்கு சென்றது. அங்கு பஜனை மற்றும் பூஜைக்கு பின் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

    இவ்வ ஊர்வலத்தை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவகையில் கருங்கல் காவல் ஆய்வாளர் இசக்கி துரை தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இன்று காலை மீண்டும் கரைப்பு
    • கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலைகளை விசுவ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் கடலில் கரைத்து உழவாரப்பணி செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்பு கள் சார்பிலும், பல்வேறு ஊர் கோவில் சார்பாகவும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான விநாயகர் சிலைகளை வீடுகளிலும், வீதிகளிலும் பிரதிஷ்டை செய்து, பூஜைக்கு வைத்து அதனை கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களாக கடற்கரைகளில் கொண்டு பூஜைக்கு வைத்திருந்த விநாயகரை கரைக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

    அப்படி கடற்கரையில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்ற பிறகும், அலை களின் சீற்றத்தால் மீண்டும் கடற்கரைக்கு திரும்பி ஏராளமான விநாயகர் சிலைகள் சங்குத்துறை கடற்கரையில் மிதந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியும் இருந்த விநாயகர் சிலைகளை இன்று காலை விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா தலைமையில் சங்குதுறை கடற்கரையில் கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலை களை விசுவ ஹிந்து பரிஷத் பொறுப்பா ளர்கள் மீண்டும் அதை கடலில் கரைத்து உழவாரப்பணி செய்யப் பட்டது.

    ×