search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
    X

    மார்த்தாண்டம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

    • இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் உள்ளது
    • நிலம் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    நாகர்கோவில் :

    மார்த்தாண்டம் முஞ்சி றை திருமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய மகாதேவர் கோவி லுக்கு சொந்தமான கோவில் நிலங்களை தனி யார் கல்லூரி ஒன்று ஆக்கிர மித்து வைத்துள்ளது.

    இந்த ஆக்கிரமிப்பு நிலம் சுமார் 3 ஏக்கர் 17 சென்ட் கோர்ட் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் (குமரி மாவட்ட கோவில்கள், சுசீந்திரம்) பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலையில் மீட்டுக்கப்பட்டு எல்லை அளவீடு செய்து கல் நடப்பட்டது.

    அப்போது கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், தொகுதி கண்காணிப்பாளர் சிவக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதீஷ்குமார், ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, தி.மு.க முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×