என் மலர்
காஞ்சிபுரம்
- பரங்கிமலை போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆலந்தூர்:
தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து நேற்று மதியம் ஆலந்தூர் கத்திப் பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே வழிகாட்டு பெயர் பலகை தூண் மீது மோதியது.
இதில் பெயர் பலகையுடன் ராட்சத இரும்பு தூண் சரிந்து சாலை நடுவே விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சண்முக சுந்தரம் (28) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் மகமாயிபுரத்தை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேைல செய்து வந்தார்.
பெயர் பலகை சரிந்து விழுந்த வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிக் கொண்ட சண்முக சுந்தரம் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக பரங்கிமலை போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் தனியார் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு திருமணமாகி விட்டது. மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் வசித்து வந்துள்ளார்.
மனைவி பெயர் ராதிகா, 5 வயதில் அனுசுயா என்ற பெண் குழந்தையும், சந்தீப் ரோஷன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் தான் அவர் வழிகாட்டி பெயர் பலகை விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மனைவியும், 2 குழந்தைகளும் தவியாய் தவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
சண்முக சுந்தரம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டே பயணம் செய்ததாகவும், மாநகர பேருந்து டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த விபத்தில் மினி வேன் டிரைவரான ஜான் பீட்டர் என்பவரும் காயம் அடைந்தார். மோதிய வேகத்தில் பஸ்சின் முன் பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. இதில் 4 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையே பஸ் டிரைவர் ரகுநாத், கண்டக்டர் சின்னையன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தனர். மாலையில் இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் டிரைவர் ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.
- 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து அவர்களை சோதனை செய்ததில் அவர்கள் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகர் (வயது 22), பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆசிப்கான்(22) என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
- பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.
- காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே தொடங்கிய பேரணி கலைஞர் பவள விழா மாளிகை வரை நடைபெற்றது.
காஞ்சீபுரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில், பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேடமணிந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே தொடங்கிய பேரணி கலைஞர் பவள விழா மாளிகை வரை நடைபெற்றது. பின்னர் அங்குள்ள கருணாநிதி, அண்ணா சிலைகளுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவராமன்.
- பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளச்சேரி:
சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் சூர்யா (வயது16) மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே உடல் நிலை பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சூர்யா, வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டியபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் சுதர்சன்,மற்றும் சூர்யா. இருவரும் இரட்டையர்கள். அவர்கள் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்தநிலையில் இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள அறையை அகலப்படுத்துவதற்காக நடுவில் இருந்த சுவரை சுதர்சன் இடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மற்றொரு சுவர் இடிந்து சுதர்சன் மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுதர்சன் பலத்தகாயம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு சுதர்சனை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதர்சன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலு செட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துரை.
- காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துரை (வயது 71). இவர் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லாரை பகுதியை சேர்ந்தவர் சரண்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லாரை பகுதியை சேர்ந்தவர் சரண் (வயது 22). வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சரணை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சரண் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரித்ததில் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு கீழாண்டை தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் காஞ்சிபுரம் புதிய ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்த ஜீவா (20) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
- தங்கத்தை கடத்தி வந்தவர்கள், அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறைக்குள் அதனை மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகீம் (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அலி (30) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. மேலும் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரும் தங்கள் ஆடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 980 கிராம் தங்கம் மற்றும் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுபாப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் வந்து அந்த பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர்.
அந்த பார்சலில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 520 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறைக்குள் அதனை மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 6½ கிலோ தங்கம் மற்றும் லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- இருவரிடமிருந்து 1 கிலோ 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை ஒடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் தேனம்பாக்கம் வேதபாடசாலை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த செவிலிமேடு பகுதியை சேர்ந்த சபரி (வயது 26), தேனம்பக்கத்தை சேர்ந்த மதன் (22) ஆகியோரை அந்த வழியாக ரோந்து சென்ற தாலுகா போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் 1 கிலோ 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தமிழக அளவிலான 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பணியாளர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.
கூட்டுறவு சங்க பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை துவங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ. 10,000 வழங்க வேண்டும்.
பணியில் உள்ளவர்களுக்கு மாற்று ஒய்வுதியம், கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் ஜி.வைரப்பன் தலைமையில் நடத்தி வருகிறார்கள்.
அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தர்ணா போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் இ.அருணாசலம், மாநில கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் எஸ்.ஜினச்சந்திரன், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு மாவட்ட கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் எம்.யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஜி.மதியழகன் மற்றும் 25 கூட்டுறவு வங்கி பணியாளர்கள், தமிழக அளவிலான 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பணியாளர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.
- கேமிராவில் 3 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து திருடிச் செல்வது பதிவாகி உள்ளது.
- மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலத்தூர்:
மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டை என்.எஸ்.கே சாலையில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு பணப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் 3 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து திருடிச் செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கனகா வீட்டுக்கு வெளியே கிரில் கேட்டை பூட்டிவிட்டு வயலுக்கு மாட்டை ஓட்டி சென்றார்.
- படுக்கையறை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சித்தாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கனகா (வயது 68). நேற்று முன்தினம் இவரது மகன் சக்திவேல் மனைவியை பார்ப்பதற்காக குன்றத்தூர் சென்றுவிட்டார். கனகா வீட்டுக்கு வெளியே கிரில் கேட்டை பூட்டிவிட்டு வயலுக்கு மாட்டை ஓட்டி சென்றார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கிரில் கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் தனது மகன் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டுக்கு திரும்பி வந்த சக்திவேல் இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






