என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வியாபாரி கொலை- 3 பேர் கைது
- கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது56). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவதற்கு தயாரானார். அப்போது அங்கு வந்த 3 போலீசார்கள் திடீரென சிவஞானத்தை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவஞானம், அவர்களிடம் இருந்து தப்பி செல்ல ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான மண்டபத்தெருவை சேர்ந்த சரவணன், அவரது நண்பர்களான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி கண்டன், ஆபேல் ஆகிய 3 பேரையும் கொலை நடந்த ஒரு மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார். இடப்பிரச்சினை தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த தகராறில் சிவஞானம் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதான 3 பேரிடமும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்