என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி
- காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் சுதர்சன்,மற்றும் சூர்யா. இருவரும் இரட்டையர்கள். அவர்கள் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்தநிலையில் இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள அறையை அகலப்படுத்துவதற்காக நடுவில் இருந்த சுவரை சுதர்சன் இடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மற்றொரு சுவர் இடிந்து சுதர்சன் மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுதர்சன் பலத்தகாயம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு சுதர்சனை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதர்சன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலு செட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






