என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் அண்ணா, கருணாநிதி, பெரியார் வேடமணிந்து தி.மு.க.வினர் அமைதி பேரணி
- பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.
- காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே தொடங்கிய பேரணி கலைஞர் பவள விழா மாளிகை வரை நடைபெற்றது.
காஞ்சீபுரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில், பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேடமணிந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே தொடங்கிய பேரணி கலைஞர் பவள விழா மாளிகை வரை நடைபெற்றது. பின்னர் அங்குள்ள கருணாநிதி, அண்ணா சிலைகளுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






