என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • வரும் 22-ந்தேதி வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வாழைக்காய் ஏலம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 22-ந்தேதி (சனிக்கிழமை) வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது. தேங்காய் ஏலம் வழக்கம்போல நடைபெறும்.

    இந்த தகவலை மேலாண்மை இயக்குனர் ஆர். சுரேஷ், பொதுமேலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர்.

    பவானி:

    பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 3.264 கிலோ எடை கொண்ட ரூ.2496 மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் பவானி தாசில்தாருக்கு டீக்கடைக்கு சீல் வைக்க கோரி தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி வருவாய் அலுவலர் விஜய கோகுல், வி.ஏ.ஓ. குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் டீக்கடைக்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

    இதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி சீனிவாசபுரம் எக்ஸ்டென்ஸ் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (46) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னப் பருவாச்சிபகுதி கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்ததில் 10 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து அந்தக் கடையின் உரிமையாளர் சதாசிவம் (49) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பருவாச்சி பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்து சதாசிவம் உடன் பருவாச்சிஅண்ணா நகர் பகுதியில் சோதனை செய்தனர்.

    அங்கு ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த விருதுநகர் ஈரெட்டிப்பட்டியை சேர்ந்த காளிராஜ் (24) என்பவரையும் கைது செய்தனர். இந்த குட்காவின் மதிப்பு 39 ஆயிரம் 500 ரூபாய் ஆகும்.

    • நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, அகத்தியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (62). இவர் வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தார். கடந்த 2 வருடமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமுகம் சரிவர வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆறுமுகம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. ஆறுமுகம் மகன் கார்த்திகேயன் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

    இந்நிலையில் கணபதிபாளையம்-மன்னதம்பாளையம் இடைப்பட்ட பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று முதியவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவர் தனது தந்தை என உறுதி செய்தார்.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமு கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுவிட் போர்டில் இருந்து எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.
    • இது குறித்து கருங்கல்பாளைளயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், சையது காசீம் வீதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (38). இவர் அக்ரஹாரம் நஞ்சப்பா நகரில் இட்லி கடை வைத்து நடத்தி வந்தார்.

    சம்பவத்தன்று கடையில் பாத்திரம் கழுவும் இடத்தை தமிழ்செல்வி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுவிட் போர்டில் இருந்து எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளைளயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதையடுத்து அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றுக்க ரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து அப்படியே 4,300 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர், தொட்டம் பாளையம் , நடுப்பாளையம், சத்திய மங்கலம், அரியப்ப ம்பாளையம், சதுமுகை, பவானிசாகர் கூடுத்துறை வரை உள்ள ஆற்று கரையோர பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு

    இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறையினர் வருவாய்துறையினர் உஷார் படுத்தப்பட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 96 காசுக்கும், அதிகபட்ச விலையாக 79 ரூபாய் 8 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 10 காசுக்கும், இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 53 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 71 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • பா.ஜ.க. பிரமுகர் சிவசேகர் என்பவருக்கு சொந்தமான காரை மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, எஸ் ஆர். டி. தியேட்டர் பின்புறம் 2 -வது வீதியில் பா.ஜ.க. பிரமுகர் சிவசேகர் என்பவருக்கு சொந்தமான காரை மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இது தொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடி மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.க்கள் பாலமுருகன், ஜானகிராமன் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் சேகர், நீலகண்டன், சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, வடிவேல்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்புடைய கமருதீன். அப்துல்வகாப், நியமத்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கமருதீன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது பஷீர், அமானுல்லா ஆகியோரையும் புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அமானுல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்ட திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் அமானுல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து அமானுல்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • கூகலூர் கிளை வாய்க்காலில் இரு கரை களையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கோபிசெட்டிபாளையம், புதுக்கரை புதூர் தொட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.

    இதனால் அந்த பகுதிகளில் உள்ள வாய்க்கால் தண்ணீர் நிரம்பி வழிந்து செல்கிறது. இதே போல் மழை காரணமாக கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் இரு கரை களையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள புதுக்கரை புதூரில் அந்தியூர் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது.

    நெல் அறுவடை பணிகளுக்காக தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பாலம் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள தடப்பள்ளி கிளை வாய்க்கால் பாலம் அடைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோபி மையப்பகுதியில் கீரி பள்ளம் ஓடை வழியாக தடப்பள்ளி கிளை வாய்க்காலில் மழை நீர் தேங்கி வாய்க்கால் நிரம்பி மழை நீர் கரைபுரண்டு ஓடியதால் விவசாய நிலங்களுக்கு மழைநீர் புகுந்தது.

    இதையொட்டி புதுக்கரை புதூர் பகுதி வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் சென்றதால் வாய்க்காலையொட்டி உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது.

    அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வாழை மற்றும் கரும்புகள் பயிரிடப்பட்டு இருந்தன. அந்த தோட்டங்களில் வாய்க்கால் தண்ணீர் புகுந்தது. இதனால் வாழை மற்றும் கரும்பு தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதே போல் தொட்டிபாளையம் பகுதி கூகலூர் கிளை வாய்க்காலிலும் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் அந்த கிளை வாய்க்காலின் கரை உடைந்தது. இதையொட்டி வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகே இருந்த வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது.

    இது குறித்து புதுக்கரை புதூர் விவசாயிகள் உடனடியாக பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை வைத்து அடைக்கப்பட்டிருந்த பாலத்தை உடனடியாக சரி செய்தனர்.

    இதே போல் பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை கொடிவேரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக எலந்தகுட்டை மேடு பகுதியில் 61.2 மி.மீட்டர் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-9, கோபி செட்டிபாளையம்-50.50, தாளவாடி-6.5, சத்திய மங்கலம்-58, பவானி சாகர்-24, பவானி-7.6, சென்னிமலை-12, கவுந்தப் பாடி-22.6, எலந்தகுட்ை மேடு-61.2, அம்மா பேட்டை-14, கொடிவேரி 24.2. குண்டேரி பள்ளம் 19.2, வட்டுப்பள்ளம்-44.2 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 334.4 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    • அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக நேற்று மாலை 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி ஆகிய பகுதிகள் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கருங்கல்பாளையம் பகுதியிலும் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. பவானி நகரம் காவிரி ஆற்று வெள்ளத்தால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையை தாண்டி தண்ணீர் செல்கிறது. மேலும் பவானி காவேரி வீதி, கந்தன்பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, பாலக்கரை வீதி, வெந்தலை படிக்கட்டு, கீழக்கரை வீதி உள்பட பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

    மேலும் பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பவானி வாரச்சந்தை ரோடு பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடை பகுதியில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் செல்வதால் தகனமேடை மூடப்பட்டுள்ளது.

    தற்போது காவிரி ஆற்றுடன் பவானி ஆற்று நீரும் கலப்பதால் கூடுதுறை பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கரையோர பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி இலுப்பைத்தோப்பு, வடக்குத்தெரு, சத்திரப்பட்டி, காவேரி கரை, ராகவேந்திரா வீதி, வைராபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் 700 பேர் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

    • காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • காவிரி கரை பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரியோரம் உள்ள கோவிலில் வெள்ளம் நீர் சூழ்ந்தது.

    ஈரோடு:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று மாலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ளபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 1.85 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    பவானி காவிரி கரை பகுதியில் பவானி புதிய பஸ் நிலையம், கந்தன் நகர், காவிரி நகர், அந்தியூர் பிரிவு, பசவேஸ்வரர் தெரு, பழைய பாலம், கீரைகார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம், குப்பம் மற்றும் நேதாஜி நகர் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் அருகே உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் விஜய் கோகுல் மற்றும் வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.

    இதேப்போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரியோரம் உள்ள கோவிலில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    கொடுமுடி பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இழுப்பு தோப்பு, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் இந்த பகுதி சேர்ந்த போது மக்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே நடைபெற்று வரும் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நெருஞ்சிப்பேட்டை மற்றும் கோனேரிப்பட்டி கதவனை நீர் மேல் மின் நிலையம் பாலம் வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை 16-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேறிய நிலையில் ஒரு வார காலத்தில் வெள்ளம் வடிந்தது. தொடர்ந்து கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்ததால் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இரு வாரங்களுக்கு பின்னர் தண்ணீர் படிப்படியாக வடிந்தது.

    மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஆகஸ்ட் 27-ந் தேதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பி நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 1.85 லட்சம் கன அடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்ட காவிரிக்கரை பகுதி மக்களுக்கு இந்த ஆண்டில் 5-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இன்று மதியத்திற்குள் 2 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் உஷார் படுத்தப்பட்டு முகாம்களில் பொதுமக்கள் தங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர்.

    • பவானி கூடுதுறை காவரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சென்று வருகிறது.
    • கூடுதுறை படிதுறை படிக்கட்டுகளை மூழ்கியபடி கரை வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்வதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடுதுறைக்கு புனித நீராடி திதி, தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள். இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கூடுதுறைக்கு வந்து புனித நீராடி சங்க மேஸ்வரரரை வழிபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது

    இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அம்மாபேட்டை, பவானி உளபட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வௌளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதே போல் பவானி கூடுதுறை காவரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சென்று வருகிறது. மேலும் கூடுதுறை படிதுறை படிக்கட்டுகளை மூழ்கியபடி கரை வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    மேலும் பரிகாரம் செய்யும் மண்டபத்திலும் தண்ணீர் புகுந்து சூழ்ந்தது.

    இதையொட்டி பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரப்படி கோவில் அதிகாரிகள் சார்பில் பவானி கூடுதுறையில் புனித நீராட, திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதுறை காவிரி ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத படி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்தனர். புனித நீராட தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் அடைப்பட்டு இருந்ததால் ஒரு சிலர் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தங்கள் முன்னோருக்கு பரிகாரம் செய்தனர். அவர்கள் புனித நீராட முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதே நேரத்தில் பக்தர்கள் வழக்கம் போல சங்க மேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
    • புரட்டாசி மாதம் முடிவடைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன.

    ஈரோடு:

    புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களில பெரும்பாலானோர் சைவத்துக்கு மாறி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வந்தனர்.இதனால் மீன், இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது.

    மாறாக காய்கறிகளின் தேவை அதிகரித்து காய்கறிகள் விலையும் அதிகரித்தது. இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் வரும் 4 சனிக்கிழமை நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை நாளான இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாக இங்கு வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பொது மக்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். குறிப்பாக புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக 5 டன்கள் மட்டுமே மீன்கள் விற்பனைக்கு வந்தன.

    ஆனால் தற்போது புரட்டாசி மாதம் முடிவ டைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன. இன்று மார்க்கெ ட்டில் 10 டன் மீன்கள் வரத்தாகி இருந்தன.

    மக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதன் காரண மாக கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் ரூ.50 மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டன.

    மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-700, ப்ளூநண்டு-600, ராட்டு-650, சின்னராட்டு-500, கடல்பாறை-450, உளி-350, அயிலை-250, சங்கரா-350, திருக்கை-350, பால்சுறா-500, சீலா- 400, மத்தி-180, கருப்புவாவல்-500.

    ×