என் மலர்
ஈரோடு
- முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் பாசனம் பெறுகி ன்றன.
விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை கொண்டு இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இது குறித்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன சங்க தலைவர் சிபி தளபதி கூறியதாவது:
கொடிவேரி அணை பாசனங்களுக்கு சித்திரை முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சித்திரையில் தண்ணீர் திறந்தாலும் வாய்க்கால் பராமரிப்பு பணியால் எதிர்பார்த்த மகசூல் இல்லை.
ஆனால் நடப்பு முதல் போகம் எந்த இடையூறும் இன்றி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ கத்தில் நெல் உற்பத்தியில் கொடிவேரி அணை பாசனங்கள் முன்னிலையில் உள்ளது.
நடப்பு போகத்தில் முறையான நீர் நிர்வாகத்தால் பருவத்தே பயிர் செய்ததால் ஏக்கருக்கு சராசரியாக 2500 கிலோ மகசூல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.47 அடியாக உயர்ந்துள்ளது.
- பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.47 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு 7,215 கனஅடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 83 அடியை நெருங்கி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.
- ஏலத்துக்கு மொத்தம் 4,120 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
- இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சம் ஆகும்.
ஈரோடு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 4,120 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்பரைகள் 2,416 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன.
இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 73.89க்கும், அதிகபட்சமாக ரூ. 82.00க்கும் விற்பனையாகின.இரண்டாம் தரக் கொப்பரைகள் 1,704 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 08.99க்கும், அதிகபட்சமாக ரூ. 77.18க்கும் விற்பனையாகின.மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார். இதில், விதைச் சான்று அலுவலர் நாசர் அலி, உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் பங்கேற்று, அரசு துறை சார்ந்த மானிய திட்டங்கள், சந்தேகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி மானியம், ஒரு பருகரணை நடுவதால் ஏற்படும் நன்மைகள், இயந்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், நீர் மற்றும் உர மேலாண்மை, சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டாரத் திட்ட மேலாளர் பிரபாகரன், உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.
உதவித் திட்ட மேலாளர் தியாகராஜன் சிறுதானியத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். விதை சான்று அலுவலர் நாசர் அலி, விதைப்பண்ணை அமைத்தல், விதை தேர்வு, ரகங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
- விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை தி.மு.க மாவட்ட செயலாளர் பேசியதாக வெளியான ஆடியோ தவறான ஆடியோ. இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல. வேண்டுமென்றே இட்டுகட்டி போடப்பட்டுள்ளது. இது விசாரணையில் உள்ளது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குவது என்பது ஒரு கட்சிக்காக அவர் வேலை. அவருடைய வேலையை அவர் செய்கிறார். நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம்.
மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மதுப்பழக்கம் உள்ளவர்களை உரிய முறையில் அணுகி அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளவும், மதுப்பழக்கத்தை அவர்களாகவே கைவிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
புதிதாக மது அருந்த வரும் இளம் வயதினருக்கு கவுன்சிலிங் தரப்படும். இதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது.
விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக டெட்ரா பேக் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளதையும் பார்த்து விட்டு அதில் எது சிறந்ததோ அதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாக அதிகரித்துள்ளதால் மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறி பாய்கிறது.
- மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன. இதில் 1500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராம மக்கள் வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து சென்ற பஸ்ஸில் ஏறி பவானிசாகர் சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் இப்பகுதியில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பரிசலில் சென்று தான் படித்து வருகின்றனர்.
மாயாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் தெங்குமரஹாடா, அல்லிமாயார், கல்லம்பாளையம், சித்திரம் பட்டி கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாக அதிகரித்துள்ளதால் மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறி பாய்கிறது. இதன் காரணமாக வன கிராம மக்கள் ஆற்றலை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து சென்று வந்தனர். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மாயாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மாயாற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் தெங்குமரஹாடா , கல்லம்பாளையம், அல்லிமாயாறு சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தற்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் பரிசல் மூலம் ஆற்றைக் கடக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக கல்லாம்பாளையம், அல்லி மாயாறு, சித்திரப்பட்டி, டெங்குமரஹாடா, ஆகிய கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்காக வெளியூர் செல்லும் மக்கள் வியாபாரத்திற்காக வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,
நாங்கள் பல வருடங்களாக இந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறோம். வியாபாரத்திற்காக வேலைக்காக படிப்புக்காக இந்த பகுதி மக்கள் குழந்தைகள் செல்வதற்கு மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
மழை இல்லாத காலங்களில் ஒரு பிரச்சனையும் இல்லை. மழைக்காலங்களில் திடீரென மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயம் பரிசலில் சென்றாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் ஆபத்தான முறையில் மாயற்றைக் கடந்து செல்கிறோம்.
எனவே மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
- போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
மதுரை தெற்கு, புது ராமநாதபுரம் ரோடு, தியாகராஜன் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (48). இவர், கடந்த 5 மாதங்களாக ஈரோடு, அசோக புரத்தில், வருண்ஜோதி டெக்ஸ் எனும் பெயரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார்.
அதில், தேனி அல்லி நகரம், பங்களா மேடு திட்ட சாலை, சடைய முனீஸ்வரர் கோயில் வீதியைச் சேர்ந்த மணிகுமார் (40) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். வாரந்தோறும் ஜவுளி விற்பனை யில் வசூலாகும் பணத்தை மணிக்குமார் வங்கியில் செலுத்திவிட்டு கடை உரிமையாளரான மோகன்ராஜூக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த மாதம் 8-ந் தேதி அன்று வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக மேலாளர் மணிகுமார், நிறுவன உரிமையாளர் மோகன்ரா ஜூக்கு போன் மூலமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி அன்று ஈரோடு வந்த உரிமையாளர் மோகன்ராஜ், வங்கிக் கணக்கை சரி பார்த்தபோது, கடந்த மாதம் 8-ந் தேதி அன்று மணிகுமார் குறிப்பி ட்டவாறு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.
அதுகுறித்து கேட்டபோது, பணத்தை தான் செலவு செய்துவிட்டதாகவும் மறு நாள் கொடுத்து விடுவதாகவும் கூறிச்சென்றவர் அதன் பின் வேலைக்கு வரவில்லையாம். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து, மோகன்ராஜ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆள்களுடன் மணிகுமாரை தேடி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஈரோடு பஸ் நிலையம் அருகில் மணிகுமார் நின்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- சின்ன வெங்காயம் விலை அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
- இன்று விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, சத்தியமங்கலம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது.
ஏற்கனவே கத்திரிக்காய், பீன்ஸ், இஞ்சி, தக்காளி விலைகள் அதிகரித்து வந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
வெங்காயத்தை பொறுத்தவரை தாளவாடி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் மார்க் கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில் தாளவாடி பகுதியில் இருந்து அதிக அளவு சின்ன வெங்காயம் வரத்தானதால் விலை சரிய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது. இன்னும் சில நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- பாலபிஷேக பெருவிழா நாளை விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.
- பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்படுகிறது.
சென்னிமலை:
சென்னிமலையில் எழுந்தருளி உள்ள புகழ்பெற்ற முருகன் ேகாவில் சுப்பிரமணிய சாமிக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 56-வது ஆண்டு பாலபிஷேக பெருவிழா நாளை (வியாழ க்கிழமை) விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 7.40 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பால் குடங்கள் புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
தொடர்ந்து காலை 10 மணிக்கு மலை மேல் சுப்பிரமணி சாமிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரம், மகா தீபாராதனையும் இதையடுத்து மதியம் 1.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்காட்சி நடக்கிறது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்ன தானம் வழங்கப்படுகிறது.
பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.
- கடையில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா விக்னேசை கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் போலீ சார் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விறபனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்ய ப்பட்டது தெரிய வந்தது.
இதை யடுத்து அந்த கடை உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோபி செட்டிபா ளையம் மொடச்சூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா பொருட்கள் வாங்கி விற்பனை செய்வதாக தெரிவி த்தார்.
இதையடுத்து போலீசார் கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தி னர்.
இதில் அவர் கோபி அடுத்த களரா மணி பகுதியை சேர்ந்த ராஜா விக்னேஷ் (33) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீ சார் களராமணி பகுதியில் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் மூட்டை மூட்டை யாக தடை செய்ய ப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்க ப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர். இதில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 1250 சிறிய பண்டல்கள் கொண்ட 127 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா விக்னேசை கைது செய்த னர். இதை தொடர்ந்து அவர் கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்க ப்பட்டார். இத னால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- கிணற்றுக்குள் பழனிச்சாமி பாறை இடுக்குகளில் உயிருக்கு போராடி கொண்டு இருப்பது தெரிந்தது.
- நம்பியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கயிறு மூலமாக உயிருடன் மீட்டனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65) கூலி வேலை செய்து வரு கிறார். பழனிச்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரங்கநாதபுரம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.ஆள் நடமாட்டடம் இல்லாத பகுதி என்பதால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.
இதனால் ஞாயிற்று கிழமை மதியம் முதல் செவ்வாய் மதியம் வரை கிணற்றுக்குள்ளேயே கிடந்துள்ளார்.
இதற்கிடையே 2 நாட்களாக பழனிச்சாமியின் உறவினர்கள் பல இடங்களி லும் தேடினர் கிடைக்க வில்லை.
இந்நிலையில் கிணற்றின் அருகே சிலர் கால்நடை களை மேய்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்கவே கிணற்றுக்குள் பார்த்த போது பழனிச்சாமி பாறை இடுக்குகளில் அமர்ந்தும், கயிற்றை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நம்பியூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் நம்பியூர் போலீசார் கிணற்றுக்குள் விழுந்து கிடந்த பழனிச்சாமியை கயிறு மூலமாக உயிருடன் மீட்டனர்.
அதை தொடர்ந்து மீட்கப்பட்ட பழனிச்சாமியை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- அறுபத்து மூவர் விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இரவு ஒரே சப்பரத்தில் 63 எழுந்தருளி திருவிதி உலாவும் நடக்க உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கோட்டை பகுதி யில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் அறம் வளர்த்த நாயன்மார்களை போற்றும் வகையில் அறுபத்து மூவர் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இதேபோல் நடப்பாண்டு அறுபத்து மூவர் விழா இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரமூர்த்தி, சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜையும், சிறப்பு வழிபாடும், ஏழாம் திருமுறை முற்றோதுதல் நடந்தது.
வரும் 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மகளிர் திருவிளக்கு வழிபாடும், 30-ந் தேதி தலவிருட்சம் வன்னியம்மன் மற்றும் வன்னிநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான 31-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து 108 கலசத்தில் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட தீர்த்தம், பஞ்சாமிருதம், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவிய ங்களில் 63நாயன்மார்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.
அன்றைய தினம் இரவு ஒரே சப்பரத்தில் 63 எழுந்தருளி திருவிதி உலாவும் நடக்க உள்ளது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கயல்விழி, சரக ஆய்வர் தினேஷ்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.






