என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட பொதுக்குழு கூட்டம்"
- தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட முறையினை கொண்டு வர வேண்டும்.
- ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தினை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேனி:
தேனியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் ரமேஷ், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரன் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பொதுக்குழுவின் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட முறையினை கொண்டு வர வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தினை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பணி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் குருலட்சுமி, ஜனார்த்தனன் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சின்னமனூர் வட்டார செயலாளர் மகள் சபரினாதவ்மி நீளம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை படைத்தமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்
- பெருந்துறையில் மாவட்ட பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.
- ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை தோற்று விக்கப்படவில்லை.
பெருந்துறை:
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பெருந்துறையில் மாவட்ட பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் சங்க மாநில பொது ச்செயலாளர் கந்தசாமி பேசியதாவது:
தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளி களில் 10 லட்சம் மாண வர்கள் சேர்க்கை நடை பெற்று உள்ளதாக கூறி யுள்ளது. இதற்கு ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை தோற்று விக்கப்படவில்லை.
வகுப்பு அறைகளுக்கான நிதி ஒதுக்கீடும் இதுவரை நடைபெற வில்லை.உடனடியாக தமிழக அரசு இந்த பணியிடங்களை தோற்று விக்க வேண்டும்.
அரசு பள்ளியை நம்பி வந்த மாணவர்களுக்கு தகுந்த கல்வி கிடைக்க அரசு பொற்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் அதிகரித்து வருகிறது.
ஒழுங்கீனமான மாண வர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இது போன்ற மாணவர்களை நெறிப்படுத்த ஆசிரியர்களுக்கு அரசு சில உரிமை களை கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு பள்ளி யில் உள்ள ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை தவிர இதர பணிகளில் அதிக அளவில் பயன்படுத்த படுகிறார்கள்.அவற்றை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பணி ப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். தேர்தல் நேர த்தில் அரசு ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது.
இந்த நிலையை மாற்ற வரும் சட்டமன்ற கூட்டுத் தொடரில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் கடுமையான போராட்ட ங்களை முன் எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 65, 70, 75 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் முறையே 5, 10, 15 சதவீதம் உயர்த்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.1000 போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற நீதித்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் 11ம் ஆண்டு விழா மற்றும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வைத்தியநாதன், இணை செயலாளர் கோபிநாதராவ், துணைத் தலைவர் காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சையத் ஷபீர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோபால் ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவு செலவு கணக்கை சமர்பித்தார். ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாதன், செயலாளர் துரை.ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற தாசில்தார் ஜனார்தனராவ், குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் தங்கவேலு, மாவட்டத் தலைவர் செல்வகுமார், வியாபாரிகள் சங்க நகர தலைவர் சுரேஷ், சத்தியவாணி, பேபிசரஸ்வதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இக்கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.1000 போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும். ஓசூர், தேன்கனிக்கோட்டையில் குடியிருக்கும் ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மலைவாழ்படி, குளிர் கால படி அரசுப் பணியாளர்களுக்கு கொடுப்பது போல் வழங்கிட வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு முன்பு ஓய்வுபெற்ற போது வகித்த பதவியின் ஊதிய விகிதம் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் தொகையுடன் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியில் உள்ளதர ஊதியம் சேர்த்து வரும் தொகையில், 50 சதவீதம் வரை அதிகரித்து, மத்திய அரசு ஆணை வழங்கியிருக்கின்றது.
அதே போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். 65, 70, 75 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் முறையே 5, 10, 15 சதவீதம் உயர்த்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






