என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District General Committee Meeting"

    • பெருந்துறையில் மாவட்ட பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.
    • ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை தோற்று விக்கப்படவில்லை.

    பெருந்துறை:

    தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பெருந்துறையில் மாவட்ட பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் சங்க மாநில பொது ச்செயலாளர் கந்தசாமி பேசியதாவது:

    தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளி களில் 10 லட்சம் மாண வர்கள் சேர்க்கை நடை பெற்று உள்ளதாக கூறி யுள்ளது. இதற்கு ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை தோற்று விக்கப்படவில்லை.

    வகுப்பு அறைகளுக்கான நிதி ஒதுக்கீடும் இதுவரை நடைபெற வில்லை.உடனடியாக தமிழக அரசு இந்த பணியிடங்களை தோற்று விக்க வேண்டும்.

    அரசு பள்ளியை நம்பி வந்த மாணவர்களுக்கு தகுந்த கல்வி கிடைக்க அரசு பொற்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் அதிகரித்து வருகிறது.

    ஒழுங்கீனமான மாண வர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இது போன்ற மாணவர்களை நெறிப்படுத்த ஆசிரியர்களுக்கு அரசு சில உரிமை களை கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பள்ளி யில் உள்ள ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை தவிர இதர பணிகளில் அதிக அளவில் பயன்படுத்த படுகிறார்கள்.அவற்றை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு பணி ப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். தேர்தல் நேர த்தில் அரசு ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது.

    இந்த நிலையை மாற்ற வரும் சட்டமன்ற கூட்டுத் தொடரில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் கடுமையான போராட்ட ங்களை முன் எடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×